தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் தலைவராகிறார் தேனாண்டாள் முரளி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் தலைவராகிறார் தேனாண்டாள் முரளி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் 30.4.2023 அன்று சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதி உள்ள 1408 தயாரிப்பாளர்கள் அன்று வாக்களிக்க உள்ளார்கள். இதில் தற்போதய தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்களாக தமிழ்குமரனும், கல்பாத்தி அர்ச்சனாவும், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், கதிரேசன், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச்செயலாளராக சௌந்தரபாண்டியனும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ் மணி, மாதேஷ், சித்ராலட்சுமணன், ஹெச்.முரளி, கபார், விஜயமுரளி, சுபாஷ் சந்திரபோஸ், பழனிவேல், உதயா, ஷக்தி சிதம்பரம், திருமலை, ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தயாரிப்பாளருமான அம்பேத்குமார், சுரேஷ், சாலை சகாதேவன், டில்லிபாபு, பன்னீர் செலவம், தாய் சரவணன், ரஞ்சித்குமார், ராமசந்திரன், செல்வராஜ், ஜெயசீலன். ஜோதி, அன்பு, செந்தில்குமார், செந்தாமரைகண்ணன் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.