Posts

Showing posts from April, 2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் தலைவராகிறார் தேனாண்டாள் முரளி

Image
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் தலைவராகிறார் தேனாண்டாள் முரளி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் 30.4.2023 அன்று சென்னை சத்யா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதி உள்ள 1408 தயாரிப்பாளர்கள் அன்று வாக்களிக்க உள்ளார்கள். இதில் தற்போதய தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்களாக தமிழ்குமரனும், கல்பாத்தி அர்ச்சனாவும், செயலாளர்களாக ராதாகிருஷ்ணன், கதிரேசன், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச்செயலாளராக சௌந்தரபாண்டியனும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ் மணி, மாதேஷ், சித்ராலட்சுமணன், ஹெச்.முரளி, கபார், விஜயமுரளி, சுபாஷ் சந்திரபோஸ், பழனிவேல், உதயா, ஷக்தி சிதம்பரம், திருமலை, ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தயாரிப்பாளருமான அம்பேத்குமார், சுரேஷ், சாலை சகாதேவன், டில்லிபாபு, பன்னீர் செலவம், தாய் சரவணன், ரஞ்சித்குமார், ராமசந்திரன், செல்வராஜ், ஜெயசீலன். ஜோதி, அன்பு, செந்தில்குமார், செந்தாமரைகண்ணன் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.
Image
’யானை முகத்தான்’ - விமர்சனம் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும்  நாயகன்  ரமேஷ் திலக்  தீவிர விநாயகர் பக்தனாக இருக்கிறார் , பல பேரிடம் கடன் வாங்கி, அதை திரும் செலுத்த வேண்டும் என்ற எண்ண இல்லாமல்  கடன் கொடுத்தவர் விபத்தால் சாக வேண்டும் . அவர்களின் வீட்டில் கேட்ட செயல்கள் நடக்க வேண்டும் என விநாயகரிடம் வேண்டுகிறார். திடீர் என ஒரு நாள் ரமேஷ் திலக் விநாயகரிடம் வேண்டிக்கொண்டிருக்கும் போது இவருக்கு மட்டும் விநாயகர் காணாமல் போய் விடுகிறார் , ஆனால் மற்ற அனைவருக்கும் விநாயகர் தெரிகிறார், அது ஏன் நமக்கு மட்டும் கடவுள் தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ரமேஷ் திலக் முன்பு விநாயகர் தோன்றி , இனியாவது மற்றவர்களுக்கு நல்லது செய் அப்படி செய்தால் நான் உனக்கு தெரிவேன் என்று கூறுகிறார்,  இறுதியில் ரமேஷ் திலக் கண்களுக்கு விநாயகர் தெரிந்தாரா? இல்லையா? என்பதே  ’யானை முகத்தான் முதன் முறையாக  கதையின் நாயகனாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்  இயல்பான  நடிப்பை கொடுத்திருக்கிறார். தீவிர விநாயகர் பக்த்தராக நடித்துடன் விநாயகரை தேடி அலையும் காட்சி, கிளைமாக்சில் வரும் கா
Image
தமிழரசன்’ - விமர்சனம் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது மனைவி  ரம்யா நம்பீசன். இவர்களுக்கு 10 வயது மகன்  மாஸ்டர் பிரணவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.. இவருடைய மேல் அதிகாரியுடன் ஏற்பட்ட  மோதலில் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்  விஜய் ஆண்டனி ... இந்நிலையில் அவருடைய  மகனுக்கு இதயத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட சிகிச்சைக்காக  தனியார் மருத்துவ மனையில் சேர்கிறார்.. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் மகன் பிழப்பான் என்று மருத்துவர்கள்  கூறுவதுடன் அதற்கு பல லட்சம் செலவாகும் என்கின்றனர். இந்நிலையில் அதே மருத்துவமனையில் இதய மாற்று சிகிச்சைக்காக அமைச்சர் ஒருவர் சேர்க்கப்படுகிறார். வரிசைப்படி சிறுவனுக்குத்தான் முதலில் இதய சிகிச்சை அளிக்க வேண்டும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் குளறுபடி செய்து அமைச்சர் பெயரை முதலில் சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கிறது.  இதனால் கோபம் கொண்ட விஜய்  ஆண்டனி எடுத்த முடிவு என்ன ? என்பதே ’தமிழரசன்’  படத்தின் ககதை. காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடத்திருக்கும்  விஜய் ஆண்டனி, கதை முழுவதையும் தன் தோளில் சுமக்கிறார்.  அதிரட
புதிய கெட்டப்பில் புது மணமக்களை, @yoursthelegend வாழ்த்திய தருணம்… #TheLegend  #Legend  #LegendSaravanan #manofmassandclass  #panindia #tamil #telugu #malayalam #kannada #hindi  @onlynikil #Dinesh #Nagaraj @RoyalLokeshJr
Image
தெய்வ மச்சான்’   -  விமர்சனம் எலக்ட்ரிக்  கடை நடத்தி வருபவர்  நாயகன் விமல் இவருடைய கனவில் வரும் வேட்டைக்காரன் ( வேல. ராமமூர்த்தி) சொல்வது எல்லாம் நடக்கிறது. விமல் தனது  தங்கை அனிதாவிற்கு மாப்பிளை பார்த்து வருகிறார், ஆனால் அவர் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்காமல் திருமண வரன் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.     பக்கத்து ஊர் ஜமீன்தார் ( ஆடுகளம் நரேன்) ,வயதான தன் தம்பிக்கு தங்கையை பெண் கேட்டு வர விமல் அதனை மறுக்கிறார் , நரேன் அதனை மனதில் வைத்துக்கொண்டு அனிதாவிற்கு  மாப்பிளை கிடைக்காதவாறு செய்கிறார். இதற்கிடையே விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கும், வத்சன் வீரமணிக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.  திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் விமலின் கனவில் வரும் வேல ராமமூர்த்தி, ”உன் தங்கை கணவன் மச்சான் திருமணமாகி இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவான்”, என்று சொல்கிறார்.  இதனால் அதிர்ச்சி அடையும் விமல் தங்கை அனிதா திருமணத்தை நிறுத்தினாரா? இல்லையா?  என்பதே   ’தெய்வ மச்சான்’   படத்தின் கதை. நாயகன் விமலுக்கே உரித்தான  கிராமத்து  இளைஞர் .கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தி இருக்
Image
யாத்திசை’  - விமர்சனம் யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல்.  பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ’யாத்திசை’   7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசை வெல்வதற்கு சேரன் தலைமையில் சோழப் பேரரசும் சேர்ந்து போர் புரிகிறது. இவர்களுக்கு துணையாக எயினர் மற்றும் வேளிர் போன்ற பழங்குடி கூட்டங்களும் இருக்கிறது. இந்தப் போரின் இறுதியில் ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியர்கள் சோழக்கோட்டையோடு சேர்த்து மொத்த தென் திசையையும் கைப்பற்றுகிறது. இதிலிருந்து தப்பிய சில சோழர்கள் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள்.அவர்களில் எயினர் கூட்டமும் ஒன்று. ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் சோழ மண்ணின் அதிகாரத்தை கையில் எடுப்பேன் என சபதம் எடுக்கிறார் எயினர் குடியின் கொதி. பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார். இறுதியில்  ரணதீரனை கோதி வென்றாரா ? இல்லை கோதியை ரணதீரன் வென்றாரா ?  என்பதே ’யாத்திசை’  படத்தின் கதை. ரண தீரணாக ஷக்தி மித்ரனும், கொதியாக சேயோனும் உடல் மொழியிலும், நடிப்பிலும் வாழ்ந்திரு
Image
*தமிழ் சினிமாவில் ' போர் தொழில்' மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்* ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான 'போர் தொழில்' எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருqக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமான காணொளி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். 'போர் தொழில்&#
Image
*பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் கூட்டணியில் தயாராகி வரும் ' ஹனு-மேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.* படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனு -மேன்' திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வையும், தாக்கத்
Image
சாகுந்தலம்’  -  விமர்சனம் விஸ்வாமித்திரருக்கும், மேனகைக்கும் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. விஸ்வாமித்திரர் மேனகையை பிரிந்த தருணத்தில் மேனகை தன் குழந்தையை கன்வ முனிவரின் துறவு இல்லத்திற்கு அருகில் விட்டு சொர்க்க லோகம் செல்கிறார். அப்பொழுது சகுந்தல பறவைகளால் சூழப்பட்டிருந்த குழந்தையை கன்வ முனிவர் கண்டெடுத்தார் அதனால் அக்குழந்தைக்கு சகுந்தலை என்ற பெயர் வைத்து தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று வளர்க்கிறார். அந்த ஆசிரமத்தை தாண்டி வெளியுலகமே தெரியாத அவரை ஒரு நாள் அந்த பக்கமாக வேட்டைக்கு வந்த ராஜா துஷ்யந்தன் சந்திக்கிறார்.  சகுந்தலாவின் கொள்ளை அழகை பார்த்து மயங்கி விடும் துஷ்யந்த் (தேவ் மோகன்) சகுந்தலாவிடம் தனது காதலை சொல்ல,  இருவரும் கந்தர்வ திருமணம்  செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டு விடுகின்றனர் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்பும் துஷ்யந்த்ன் மீண்டும் சகுந்தலாவை வந்து சந்திப்பேன், தன்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கூறி தனது நாட்டிற்கு செல்கிறார். சகுந்தலை துஷ்யந்தனின் நினைவால் கவனம் இழந்து துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகிராள் காலம் கடந்து செல்ல செல்ல  தனது கணவனான துஷ
Image
ருத்ரன்’ - விமர்சனம்   தனது  குடும்பத்தை தீர்த்துக் கட்டிய வில்லனையும் அவனது ஆட்களையும் கதாநாயகன் பழி வாங்கும் பழைய கதையே ’ருத்ரன்’   அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ்   எதிர்ச்சியாக ஹீரோயின் பிரியா பவானி ஷங்கரை பார்க்கிறார். ஹீரோயினை பார்த்தவுடன் காதலில் விழும் ராகவா லாரன்ஸ் தனது காதலை பிரியா பவானி ஷங்கரிடம் கூறுகிறார்.  ஒரு டிராவல்ஸ் நிறுவனம்  ஒன்றை நடத்தி வருகிறார்  நாசர்  இந்த நேரத்தில் நாசர் தனது நண்பருடன் இணைந்து புதிய பிஸ்னஸ் துவங்க ரூ. 6 கோடி கடனாக வாங்குகிறார். இந்த கடன் ரூ. 6 கோடியை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார் நாசரின் நண்பண்.  இதனால் அதிர்ச்சியடையும் நாசர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கடனை திருப்பி கொடுக்கவும் முடியாத நிலைமைக்கு செல்ல மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார்.. இதற்கிடையில் தன் காதலியான பிரியா பவானி சங்கரை திருமணம் செய்து கொள்கிறார் லாரண்ஸ். பிறகு குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாடு செல்கிறார் மறுபுறம்  சென்னையில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும்  சரத்குமார், தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் அனைத்த
Image
கொரோனாவை வீழ்த்தும் ‘லோக்கல் சரக்கு’! - விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது தினேஷ் மாஸ்டர் - யோகி பாபு கூட்டணியில் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் ‘லோக்கல் சரக்கு’! - விரைவில் வெளியாகிறது பெண்கள் தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தம் ‘லோக்கல் சரக்கு’! நடுத்தர குடும்பத்து சுவாரஸ்ய சம்பவத்தை காமெடியாக சொல்லும் ‘லோக்கல் சரக்கு’ தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபுவின் காமெடி சரவெடியில் உருவான ‘லோக்கல் சரக்கு’!- விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் ‘லோக்கல் சரக்கு’ பாடல்கள்! ’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். டிஸ்கவர் ஸ்
Image
*'விமானம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *'விமானம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு* *ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் 'விமானம்'* ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'விமானம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்... கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். இதயத்திற்கு நெருக்கமான கதாநாயகனும் கூட. இவர் தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் 'விமானம்' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும், உணர்வுபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் நடித்து
Image
*பிரபுதேவாவின் ‘முசாசி' அப்டேட்* *கோடை விடுமுறையில் வெளியாகும் பிரபுதேவாவின் 'முசாசி'.* *முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா - அந்தோணி தாசன் கூட்டணி* 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'முசாசி' திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.  அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசாசி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியாண்டர் லீ மார்
Image
*நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட 'எல். ஜி. எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.  இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'எல். ஜி. எம்'. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் தயாரிப்பாளரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், '' 'எல். ஜி. எம்' சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் எங்களின் சிறப்பான பயணம் தொடங்கி இருக்கிறது. மேலும்
Image
தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை - கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட, திரு.எஸ்.வி.சேகர், திரு.கே.ராஜன், திரு.வி.சி.குகநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்வில், தலைவர் திரு.என்.இராமசாமி, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.ஜி.எம்.தமிழ்குமரன், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், திரு.எஸ்.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திரபிரகாஷ், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.எஸ்.செளந்தர பாண்டியன் மற்றும் செயற்குழு வேட்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.
Image
விடுதலை - பாகம் 1’  -  விமர்சனம் அருமபுரி என்ற மலை கிராமத்தில் சுரங்கம் அமைப்பதற்காக அரசு திட்டமிடுகிறது. அரசு சுரங்கம் அமைத்தால் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகும் என்பதால் விஜய் சேதுபதி தலைமையில் இயங்கும் தமிழர் மக்கள் படை சுரங்கம் தோண்டுவற்கு  எதிர்த்து  ரயிலுக்கு  வெடி குண்டு வைத்துத் தகர்க்கிறது. இவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அரசாங்கத்தால் சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி கெளதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அடர்ந்த வனப்பகுதியில் சோதனை சாவடிகளை அமைத்து, மக்கள் படையின் நடமாட்டத்தை குறைத்து, அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தனிப்படையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்  மலை பகுதியில்  பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஜீப் மூலம் சாப்பாடு கொண்டு செல்லும் வேலையை பார்க்கும் நாயகன் சூரி.  மனிதாபிமானம் மிக்கவராக இருப்பதால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகி துறை ரீதியாக சூரி தண்டிக்கப்படுகிறார்   அதே  கிராமத்தில் வசிக்கும் பவானி ஸ்ரீயுடன் காதல் ஏற்படுகிறது. போலீஸார் கண்களில் சிக்காமல் இருக்கும் விஜய் சேதுபதி பதுங்கி இருக்கும் இடத்தை ஒரு முறை சூரி பார்த்துவிடுகி