மனிதன் தெய்வமாகலாம்’ - விமர்சனம்
மனிதன் தெய்வமாகலாம்’ - விமர்சனம் சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்வயல் கிராமத்தில் வசிக்கும் செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். செல்வராகவன் - குஷி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பெரியவர் ஒருவர் எம் எல் ஏ ஒய்.ஜி.மகேந்திரனிடம் மனு ஒன்றை கொடுக்கிறார். செல்வராகவன் தன்னை நம்பி திருமணம் செய்து கொண்ட பெண்ணை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இப்படி இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. இதே சமயம் எம் எல் ஏ வின் மச்சான் மைம் கோபி தொழில் சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வேலை பார்க்கும் ஏழை பெண்களுக்கு பணத்தை வட்டிக்கு கொடுத்து அதை திருப்பி செலுத்தாத முடியாத பெண்களை கற்பழித்து விடுகிறார். இந்நிலையில் சாலை வசதி சரி இல்லாததால் செல்வராகவன் வீட்டின் அருகே இருக்கும் சிறுமி இறக்கிறார். இதனையடுத்து செல்வராகவன், பெரியவருடன் செ...