Posts

G5MEDIA

#LoveOhLove 3.5/5 ❤️Raja Rani & Love today வரிசையில் #LoveOhLove

Image
’லவ் ஓ லவ்’ (Love Oh Love)  -  விமர்சனம் வேலைக்காக துபாய் செல்ல தயாராக இருக்கும் நாயகன் பவிஷ், நாக துர்காவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கு வரும் மாதர் சங்கத் தலைவியான வனிதா, பவிஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்துகிறார். இதனையடுத்து, இன்ஸ்பெக்டரான செல்வராகவனிடம் பவிஷ் தனது காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார். நாக துர்காவை முதன்முதலில் பார்த்தவுடனே பவிஷ் காதலில் விழுகிறார். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அளவுக்கு அவளை ஆழமாக நேசிக்கிறார். ஆனால் நாக துர்காவின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் பவிஷின் பொருளாதார நிலையை மீறியதாக இருக்கின்றன. காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வசதிக்கு மீறி செலவு செய்யத் தொடங்குகிறார் பவிஷ். கையில் பணம் இல்லாத நிலையிலும் கடன் வாங்கி அவளுக்காக செலவு செய்கிறார். காதலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த இந்த முடிவுகள், நாளடைவில் அவரை பெரும் கடன் சுமையில் சிக்க வைக்கின்றன. ஒரு கட்டத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ...

இதயம் முரளி’ - விமர்சனம்

Image
’இதயம் முரளி’  - விமர்சனம் அமெரிக்காவில் வசித்து வரும் அதர்வாவின் திருமண ஏற்பாடுகளை அவரது மாமா நட்டி தீவிரமாக செய்து வருகிறார். திருமணத்திற்கு முந்தைய நாள், தனது நண்பர்களுடன் விமானத்தில் இந்தியா திரும்பும் அதர்வா, அதே விமானத்தில் பயணிக்கும் பகத் பாசிலை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். இருவரும் உரையாடத் தொடங்க, தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை  பகத் பாசிலிடம் அதர்வா சொல்லத் தொடங்குகிறார். திருச்சியில்  பள்ளிப்  பருவத்தில்  டியூஷனில் ப்ரீத்தி முகுந்தனை முதன்முதலாகப் பார்க்கும் அதர்வா, அவர்மீது காதல் கொள்கிறார். டியூஷன் சென்டர், டென்னிஸ் மைதானம் என ப்ரீத்தி செல்லும் இடமெல்லாம் அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து, தனது காதலை மனதிற்குள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார். ஒருநாள், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அதர்வாவை வீட்டிற்கு அழைக்கிறார் ப்ரீத்தி. அங்கு சென்று தனது காதலை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கும் அதர்வாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. ப்ரீத்தி இரட்டைப் பிறவி சகோதரிகளில் ஒருவர் என்பதும், இருவரும் ஒரே மாதிரி தோற்றமளிப்பத...

இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் "ஜானகி அம்மா" அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள்,நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது.

Image
இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் "ஜானகி அம்மா" அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள்,நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது. இந்த இசையரசியின் குழந்தைத்தனமான எளிமையையும்,தன்னடக்கத்தையும்,வேறு யாரிடத்தும்,நாம் காண முடியாது. இசையமைப்பாளர் செளந்தர்யன்...

கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்*

Image
*கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்*   • பிரபல திரைப்பட நட்சத்திரம் 'இளைய திலகம்' திரு. பிரபு கணேசன் மற்றும் பிரபல நடிகை செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோர் ஜூலை 12-ம் தேதி புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கின்றனர்.   சென்னை, 10 ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் நம்பகமான நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையின் அசோக் நகர், அண்ணா மெயின் ரோடு (அசோக் பில்லர் ரோடு) (Ashok Pillar Road, Anna Main Road, Ashok Nagar) என்ற முகவரியில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய விற்பனை நிலையம் வருகிற ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குத் திரைப்பட நட்சத்திரங்கள் திரு. பிரபு கணேசன் மற்றும் செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியச் சந்தைகளில் ஏற்கனவே வலுவான விற்பனை செயல்பாடுகளைக் கொண்டுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு, இந்த புதிய வி...

ராவ் பகதூர்' ; விமர்சனம்*

Image
*'ராவ் பகதூர்' ; விமர்சனம்* 'ராவ் பகதூர்' திரைப்படம் 1968 முதல் 1991 வரையிலான காலகட்டத்திற்கு இடைப்பட்ட கதையை மையமாகக் கொண்டது. படத்தின் நாயகன் புவனம் ராமப்பா ராவ் பகதூர் (சத்யதேவ்), ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்லீரல் புற்றுநோய் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, தனது இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவரது இரண்டாவது மகன் குசுமப்பாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ரேணுகா கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு அறைக்குள் தன்னைத் தானே பூட்டிக்கொண்டிருக்கிறார். துக்கத்தாலும், மதுப்பழக்கத்தாலும் நிஜ உலகத்துடனான தொடர்பை இழந்த ராமப்பா, தனது குற்ற உணர்ச்சியிலிருந்தும், கடந்த கால நினைவுகளிலிருந்தும் எப்படி வெளிவருகிறார் என்பதே படத்தின் மையக்கரு. நாயகன் சத்யதேவ் தனது அபாரமான நடிப்பால் ஒட்டுமொத்தப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். ராமப்பா கதாபாத்திரத்தில் பல்வேறு வயது தோற்றங்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவர் தனித்துவமாகத் திகழ்கிறார். அவரது நடிப்பு, படத்தின் எதார்த்தமான தன்மைக்கு வலுசேர்க்கிறது. ...

நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு*

Image
*நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு* டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஓ! சுகுமாரி' - திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் - காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். 'ஓ! சுகுமாரி ' படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், 'தாமினி' என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் த...

டார்க்’ - விமர்சனம்#Dark Movie– (3.5/5)வழக்கமான த்ரில்லர் பாதையில் செல்லாமல், சைக்கலாஜிக்கல் சஸ்பென்ஸ் மற்றும் டார்க் டோனை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம்.

Image
’டார்க்’  - விமர்சனம் சென்னையில் கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 3  இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தீ வைத்து தற்கொலை செய்துக் கொள்கிறார்.  இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் வாடகைக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த வீடு குறித்து உண்மை தெரிந்ததும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வரும் நாயகன் அஜய் கார்த்திக் வந்த சில நாட்களிலேயே சில அமானுஷ்ய விஷங்கள் நடக்க அதில் உறைந்து போகிறார். ஒருநாள் அஜய் கார்த்திக்குடன் இரவு தங்கும் உரிமையாளரான பாக்யராஜ் மறுநாள் மர்மமான முறையில் இறந்துக் கிடக்கிறார். அதே இடத்திலேயே நாயகன் அஜய் கார்த்திக்கும் கொடூரமான காயங்களுடன் இறந்து கிடக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, iஇது குறித்து  விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும்  மயங்கி விழுகிறார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கையில் ...