Posts

G5MEDIA

டார்க்’ - விமர்சனம்#Dark Movie– (3.5/5)வழக்கமான த்ரில்லர் பாதையில் செல்லாமல், சைக்கலாஜிக்கல் சஸ்பென்ஸ் மற்றும் டார்க் டோனை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம்.

Image
’டார்க்’  - விமர்சனம் சென்னையில் கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 3  இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தீ வைத்து தற்கொலை செய்துக் கொள்கிறார்.  இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் வாடகைக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த வீடு குறித்து உண்மை தெரிந்ததும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வரும் நாயகன் அஜய் கார்த்திக் வந்த சில நாட்களிலேயே சில அமானுஷ்ய விஷங்கள் நடக்க அதில் உறைந்து போகிறார். ஒருநாள் அஜய் கார்த்திக்குடன் இரவு தங்கும் உரிமையாளரான பாக்யராஜ் மறுநாள் மர்மமான முறையில் இறந்துக் கிடக்கிறார். அதே இடத்திலேயே நாயகன் அஜய் கார்த்திக்கும் கொடூரமான காயங்களுடன் இறந்து கிடக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, iஇது குறித்து  விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும்  மயங்கி விழுகிறார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கையில் ...

‘கட்டா குஸ்தி  2’ Movie Rating 4./5#கமர்ஷியல் எண்டர்டெயினர். குடும்பம், குழந்தைகள், நண்பர்களுடன் பார்த்து மகிழலாம்

Image
‘கட்டா குஸ்தி  2’  - விமர்சனம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற  ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.  நாயகன் விஷ்ணு விஷால், மனைவி  ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பெண் குழந்தை சாராவுடன் கோவையில் வசித்து வருகிறார்.   வீட்டை பராமரிப்பது , மகளை பார்த்துக் கொள்வது மனைவியை மல்யுத்த போட்டியியில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அனைத்து  உதவிகளையும்  விஷ்ணு விஷால் செய்து வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அமைச்சர் கையால் பதக்கத்தை பெறுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி, இதை பார்த்து கோபம் கொள்ளும் பயிற்சியாளர் ஐஸ்வர்யாவை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி, தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது, பெண் குழந்தை ஒழுங்காக படிக்காததால் கணவன் – மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பயிற்சியாளர்  ஐஸ்வர்யாவிற்கு மன சோர்வு போக சில மருந்துகளை மருத்துவரிடம் வாங்கி ...

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு

Image
சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட்  இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு   இத்திரைப்படத்தின் அறிமுக நாயகன் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ  நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு  இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செளவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது    கல்வியில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது தமிழ் திரைப்படத்தில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒ ளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க படத்தொகுப்பு r.k. செல்வன்  இத்திரைப்படம் போஸ் ப்ரோடுக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் விரைவில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்  ஆறுமுகம் மாணிக்கம் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சேகரன் இசை வெளியீட்டு விழா தேதியை விரைவில் அறிவிக்கப்படும்  என்று தெரிவித்தனர்.  ...

அனந்தன் காடு’ - விமர்சனம்

Image
‘அனந்தன் காடு’  - விமர்சனம் 1989-ல் நடக்கும் கதை தமிழீழ போராளியான  ஆர்யா இலங்கை படையினரால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அதன் பிறகு கேரளா வருகிறார். அம்மாநில முதலமைச்சர் தனக்கு எதிராக செல்படுபவர்களை சிறிய கூலிப்படை  கும்பலை வைத்து கொலை செய்கிறார்.  அந்த கும்பலில் ஆர்யா போய் சேர்கிறார். அந்தக் கூலிப்படைக்கு முதலமைச்சருக்கு  இன்னொரு வரை கொலை செய்யும் வேலையைக்  கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார்.   ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன்னை பற்றி அனைவருக்கு  தெரிய வரும் என்று எண்ணும் முதல்வர் ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்.  இறுதியில் ரவுடி கூட்டத்தை என்கவுண்டரில்  இருந்து ஆர்யா காப்பாற்றினாரா? இல்லையா? முதல்வரின் உண்மையான முகம் வெளியே தெரிந்ததா ? இல்லையா?  என்பதே  ‘அனந்தன் காடு’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா துடிப்பு மிக்க இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.   ஆக்‌ஷன் , செண்ட...

அங்கீகாரம் ’ - விமர்சனம்

Image
‘அங்கீகாரம் ’ - விமர்சனம் சென்னையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் கே.ஜெ.ஆர் தடகள வீரர், துப்புரவுப் பணியாளராக இருக்கும் தாய் ரமா,  வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் தங்கையுடன் வசித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு பயிற்சியாளராக இருக்கும் வசுந்தரா கடுமையாக பயிற்சி கொடுத்து வருகிறார். இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார். இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் சமயம் தசை பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாத நிலை ஏற்படுகிறது. எனினும் தனது கடுமையான பயிற்சியின் மூலம் முழு உடற் தகுதி பெற்று இருந்தும்  காமன்வெல்த்  போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் நிராகரிக்கப்படுகிறது. இதனையடுத்து நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார். இறுதியில்  நாயகன் கே.ஜெ.ராஜேஷுக்கு நீதி கிடைத்ததா ? இல்லையா?  காமன்வெல்த்  போட்டி...

கான் சிட்டி ’ - விமர்சனம்

Image
கான் சிட்டி ’ - விமர்சனம் சென்னை , மங்களபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் நாயகன் அர்ஜுன் தாஸ் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்க அதை திருப்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் மின்சாரத்திற்கு பணம் செலுத்த வருபர்களிடம் போலியான ரசீதியை கொடுத்து மோசடி செய்கிறார். மறுபுறம் லீசுக்கு வீட்டை எடுக்கும்  கர்ப்பிணியான அன்னா பென் சில நாட்களிலேயே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து இதை போலவே பலரிடம்  லீஸ் மற்றும் வாடகைக்கு வீட்டை விடுவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்கிறார். இதே சமயம் வடிவுக்கரசியின் மகனான யோகிபாபு அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் தேவைப்பட  பலரிடம் கேட்டும் யாரும் பணம் கொடுக்க முன் வராததால்  டிரஸ்ட் ஒன்றை நடத்துவதாக கூறி பல லட்ச ரூபாயை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள். இதனையடுத்து அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் மோசடி செய்து சேர்த்து வைத்த  பணத்தை அர்ஜுன் தாஸிடம் கொடுக்கிறார்கள்.  அர்ஜுன் தாஸின்   நண்பருக்கு அவசர தேவை என்பதற...

சிங் கீதம்’ - விமர்சனம்

Image
‘சிங் கீதம்’  - விமர்சனம் குபேரபுரம் எனும் இடத்தில் தங்கம் இருக்கிறது என தெரிய வர ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும் வெளிநாட்டு வியாபாரி ஒருவருக்கு அந்நிலத்தை பல கோடி ரூபாய்க்கு விற்க நினைக்கிறார்கள். இதே சமயம் சிறையில் இருந்து வெளியே வரும் மற்றொரு  உரிமையாளரான  நாயகன்  அயான் கே அங்கு வருகிறார்.  நிலத்தின் உண்மையான உரிமையாளர் என்பதால் விற்பதில் பாதி பங்கு கேட்கிறார். அந்த பகுதியில் உள்ள நிலத்தில் ஒரேயொரு மரம் மட்டுமே இருக்கிறது. அந்த மரத்தை  வெட்டிவிட்டு தோண்டினால் தங்கம் கிடைக்கும் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் நாயகி அஹல்யா அந்த ஒற்றை  மரத்தை  தாய்போல.  நினைப்பததால்  அதை வெட்ட கூடாது என்று போராடுகிறார்.  நாயகியின் போராட்டத்தை  மீறி மரம் வெட்டப்படுகிறது. அதன்பிறகு ஊரிலுள்ள அனைவரும் பேசுவதற்கு பதில் பாடுகிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்லை.  ஊரை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இறுதியில் குபேரபுரம் மக்கள் சாபத்தில் இருந்து மீண்டு வந்தார்களா ? இல்லையா? மக்கள் ஊரை விட்டு வெளியே சென்...