Posts

G5MEDIA

ஜனநாயகன் ’ - விமர்சனம்

Image
‘ ஜனநாயகன் ’ - விமர்சனம் மதுரையில் நடந்த ஒரு கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நாயகன் விஜய் , அங்கு உயிருக்கு ஆபத்தில் சிக்கியிருக்கும் அரசியல் பிரமுகரை ரௌடிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். இதன் மூலம் சிறை அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனனுடன் அவருக்கு நெருக்கமான நட்பு  உருவாகிறது. பின்னர் உடல்நிலை மோசமான தனது தாயார் ரேவதியை சந்திக்க விஜய்க்கு சிறப்பு அனுமதி வாங்கித் தரும் கௌதம் வாசுதேவ் மேனன், அதனால் தனது பதவியை இழக்கிறார். சிறையிலிருந்து வெளியே வரும் விஜய், அவரையும் அவரது மகள் மமிதாவையும் சந்திக்க செல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கௌதம் வாசுதேவ் மேனன் விபத்தில் உயிரிழக்கிறார். அதன்பின் மமிதாவை வளர்க்கும் பொறுப்பு விஜய்க்கு வருகிறது. பயந்த சுபாவம் கொண்ட மமிதாவை தைரியமான பெண்ணாக மாற்றி, இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே விஜய்யின் லட்சியமாகிறது. இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் வன்முறைகளை நிகழ்த்திய பாபி தியோல், இந்தியாவை குறிவைத்து ஒரு பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார். அவரது திட்டத்தை முறியடிக்கவும், மமிதாவை பாதுகாக்கவும் வ...

காதலி மனைவியானாள் மனைவி கொலையானாள் கணவன் அதிர்ச்சி!

Image
காதலி மனைவியானாள் மனைவி கொலையானாள் கணவன் அதிர்ச்சி! கொளத்தூர் என்ற கிராமத்தில் கதையின் நாயகனான  கருப்பட்டி என்ற பார்த்திபன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான் . திரு மணம் முடித்த சில நாட்களில் பவானி  மர்மமான முறையில் இறக்கிறாள் . அதன் பிறகு பவானி ஆவியாக மாறி அ னைவரையும் மிரட்டுகிறாள். இதை அறிந்து கொண்ட கருப்பட்டி அவளை கொலை செய்தது யார்? எப்படி அவள் இறந்தாள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்.  அப்பொழு அவன் பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மமாகவும் திகிலாகவும் அ னைவரையும் மிரட்டுவதாகவும் இருக்கிறது. இப்படி ஒரு கதைக்களத்தில் உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் மோனிதா மூவிஸ் தயாரிப்பில் விஜயராஜ் கதையின் நாயகனாக  நடிக்கும் "கருப்பட்டி." திரைப்படம். விஜயராஜ், சமந்து, ஹரிணி தா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ர...

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேஇசையமைப்பாளர் செளந்தர்யன்

Image
பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய  செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.இயக்குநர் விவேக பாரதி அவர்கள் இயக்கிய"பாசக்காரப் பய" என்ற படத்தில் அவர் பாடல் எழுதும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தேன். சாயம் போட்ட உதட்டு மேல சாயப் பாக்குற... சரிசமத்த இதுல மட்டும் கெஞ்சி கேட்குற... ஒரு பெண் பாடுவதைப் போல் வரும் இந்த வரிகளை என் மெட்டுக்கு எழுதி,"சார் இது கொஞ்சம் வெரசமா இருக்கும்,பரவா இல்லயா...?"என்றார்.காதலுக்கு சமத்துவம் இல்லாத நம்ம இந்தியாவுல இது தான் சரியான வரிகள்... தத்துவப் பாடல்களில் தான் சமத்துவத்தை சொல்லலாம் என்றில்லாமல்,விரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொல்லியிருக்கீங்க,அந்த வகையில் நீங்க நல்ல கவிஞர் தான் என்றேன்...பூரித்துப் போனார்... "ஜிஞ்சனக்கன ஜனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி... பஞ்சு மெத்தையில் உனக்கும் எனக்கும் சடுகுடு போட்டி"... அந்தோணி தாசன்,வனிதா பாடிய இந்தப் பாடலுக்கு நடிகர் விக்னேஷ் குத்தாட்டம் போட்டிருப்பார். இவர் எழுதிய இந்தப் பாடலை அடிக்கடி கேட்கும் நான்,தொடர்ச்சியாய் தொடர்பில் வந்து பேசும் இவரின் பேச்சை இனி எப்போது கேட்பே...

#AnbeDiana 3.5/5 குடும்பத்தோட நண்பர்களோடு போங்க ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்பி கிடைக்கும்

Image
அன்பே டயானா’  - விமர்சனம் சென்னை பெரம்பூர் பகுதியில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பமாக சேத்தன்–ரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈரமாவு வியாபாரம் செய்து தனது கடின உழைப்பாலும், கண்டிப்பான குணத்தாலும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியவர் ரோஜா. குடும்பத்தின் அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார். ஆனால் அவரது கணவர் சேத்தன் அதற்கு நேர்மாறானவர். குடிப்பழக்கம் கொண்டவர்; மனைவிக்குப் பயந்து வாழ்பவர். இளமையில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன ஏக்கம் இன்னும் சேத்தனின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால் ரோஜாவை விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை ஒரு கடமையாகவே நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகள் இஸ்மத் பானு, திருமணமாகி கணவரைப் பிரிந்து தனது பெண் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். இரண்டாவது மகனான பாரி, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகன் சுதர்சன் படிப்பை முடித்து அரசுப் பணியில் இருக்கிறார். இந்நிலையில், க...

அருள்வான் ’ - விமர்சனம் Arulvaan : 3.5/5

Image
‘அருள்வான் ’  - விமர்சனம் பூங்குடி மலைவாழ் பகுதியில், ஆரவ் தனது மனைவி ரம்யா பாண்டியன் மற்றும் மகள் கிருத்திகாவுடன் வசித்து வருகிறார். மலை உச்சிகளில் இருந்து தேன் சேகரிப்பதே அவரது தொழில். அப்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வன அதிகாரி ஜான் விஜயின் நடவடிக்கைகளை ஆரவ் எதிர்ப்பதால், இருவருக்கும் மோதல் உருவாகிறது. மலைப்பகுதியில் கல்வி வசதி இல்லாததால், பள்ளிக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இருந்தாலும், தனது மகள் கிருத்திகாவை எப்படியாவது படிக்க வைப்பேன் என்று ஆரவ் உறுதி எடுக்கிறார். அங்கிருக்கும் பள்ளி ஆசிரியையைச் சந்திக்கும் கிருத்திகாவிடம், "உங்கள் கிராமத்திற்கு பள்ளி வர வேண்டுமெனில், ஊர் மக்கள் கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்" என்று கூறுகிறார். இதற்கிடையில், ஊர் தலைவராக இருக்கும் ஆரவின் மாமாவிடம் வெற்றுக் காகிதத்தில் கைரேகை வாங்கி, மலைவாழ் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் மனவேதனை அடைந்த மாமா, தனது கட்டைவிரலை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். ...

இந்தியாவிலேயே முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள முழுநீள திரைப்படம் "அவிரா "

Image
இந்தியாவிலேயே முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள முழுநீள திரைப்படம்  "அவிரா "   முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அவிரா "  வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது.   அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி  உருவாகி வரும் முழு நீள திரைப்படம் " அவிரா "  சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை  இயக்கிய பிரபாகரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது.  முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என...

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில்

Image
‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில் ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில் ஷிவானி ஸ்டுடியோஸின் புதிய பொழுதுபோக்கு படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில் கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பி...