அருள்வான் ’ - விமர்சனம் Arulvaan : 3.5/5
‘அருள்வான் ’ - விமர்சனம் பூங்குடி மலைவாழ் பகுதியில், ஆரவ் தனது மனைவி ரம்யா பாண்டியன் மற்றும் மகள் கிருத்திகாவுடன் வசித்து வருகிறார். மலை உச்சிகளில் இருந்து தேன் சேகரிப்பதே அவரது தொழில். அப்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வன அதிகாரி ஜான் விஜயின் நடவடிக்கைகளை ஆரவ் எதிர்ப்பதால், இருவருக்கும் மோதல் உருவாகிறது. மலைப்பகுதியில் கல்வி வசதி இல்லாததால், பள்ளிக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இருந்தாலும், தனது மகள் கிருத்திகாவை எப்படியாவது படிக்க வைப்பேன் என்று ஆரவ் உறுதி எடுக்கிறார். அங்கிருக்கும் பள்ளி ஆசிரியையைச் சந்திக்கும் கிருத்திகாவிடம், "உங்கள் கிராமத்திற்கு பள்ளி வர வேண்டுமெனில், ஊர் மக்கள் கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்" என்று கூறுகிறார். இதற்கிடையில், ஊர் தலைவராக இருக்கும் ஆரவின் மாமாவிடம் வெற்றுக் காகிதத்தில் கைரேகை வாங்கி, மலைவாழ் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் மனவேதனை அடைந்த மாமா, தனது கட்டைவிரலை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். ...