பள்ளி மாணவர்கள் இப்படத்தை பார்க்கும் நிலையை, தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இயக்குநர் பேரரசு பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை!
பள்ளி மாணவர்கள் இப்படத்தை பார்க்கும் நிலையை, தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இயக்குநர் பேரரசு பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை! 'யானை மரம்' என்ற திரைப்படம் பார்த்தேன். என்னை, என் சிறுவயது பிராயத்தை பின் நோக்கி இழுத்துச் சென்ற அற்புத படைப்பு. இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் படத்தை மட்டும் இயக்கவில்லை, நம்மையும் இயக்குகிறார். யானை மரத்திற்கு நீராக சமூக நீதியையும், உரமாக மனிதநேயத்தையும் இட்டிருக்கிறார். முக்கியமாக மாணவ, மாணவிகள் அனைவரும் காண வேண்டிய அறிவுப்பூர்வ படைப்பு. தமிழக அரசு இப்படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் படியான நிலையை உருவாக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார்! தேசிய விருதுக்கு அனுப்ப கூடிய படம் 'யானை மரம்' என்று, படம் பார்த்த இ.வி.கணேஷ் பாபு தெரிவித்துள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு வயதில் நட்டு வைத்த மா விதை தற்போது யானையின் உருவத்தில்...