தாய் கிழவி’ விமர்சனம்
‘தாய் கிழவி’ விமர்சனம் கணவனை இழந்த ராதிகாவிற்கு சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் என மூன்று மகன்களும் ரைச்சல் என்ற மகளும் இருக்கிறார்கள். மூதாட்டியான ராதிகா , தன் கடின உழைப்பால் சேர்த்து வைத்த சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஊர் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் ராதிகா , அதை வசூலிப்பதில் கடுமையாக நடந்துக் கொள்கிறார்., ஊர் மக்கள் அவரை பார்த்தாலே பயப்படுவதோடு, அவர் எப்போது இறப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால், ஊர் மக்களும், அவரது மூன்று மகன்களும், ஒரு மருகனும் சொத்துக்காக அவரது இறப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதனையடுத்து அங்கு வரும் நகைக்கடை முதலாளியான இளவரசு மூலம் ராதிகா 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் மகன்களுக்கு தெரிய வருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகையை கைப்பற்றுவதற்காக தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என்று மூன்று மகன்களும...