Posts

G5MEDIA

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!*

Image
*விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!* வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ...

பெத்தி’ - விமர்சனம் .

Image
’பெத்தி’ - விமர்சனம் . மலையடிவாரத்தில் வசிக்கும் ராம்சரண் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத இவருடைய கிராமத்தில்  ரயில் மட்டும் இவர்கள் ஊர் வழியாக செல்லும் ஆனால் இவர்கள் ஊரில் நிற்காது. இதனால் ஊர் பெரியவரான ஜெகபதி பாபு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை பார்த்து மனு கொடுக்கிறார்  அதனால் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கும் ராம்சரண் கூலிக்கு காசு வாங்கிக்கொண்டு  கிரிக்கெட் விளையாடுகிறார். சூழ்ச்சியால் ஏமாற்றப்படும் ராம்சரண் தனக்கும் தனது  கிராம மக்களுக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து தனக்கு ஒரு அடையாளம் தேவை  என்பதை உணர்ந்து சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்றுக்கொள்கிறார். அதில் சாதனை படைத்து மாநில அளவிலான அரையிறுதி போட்டியில் வெற்றி பெரும் வேளையில் இவருடையில் காலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இறுதியில் தடைகளை தாண்டி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ?...

பரிமளா அண்ட் கோ’ - விமர்சனம்

Image
’பரிமளா அண்ட் கோ’ - விமர்சனம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராம், ஊர்வசி  தம்பதிகளின்  மூத்த மகள் சஞ்சனா , இளைய மகள் அனந்திகா ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  அதே பகுதியைச்  சேர்ந்த ரவுடி மற்றும் போதைப்பொருள் விற்கும்  சாண்டி , அனந்திகாவைக் காதலிப்பதாகச் சொல்லி தொல்லை கொடுக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தொல்லை கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் சாண்டியின் தொல்லையை தாங்கிக் கொள்ள முடியாத ஜெயராம் குடும்பத்தினர் சாண்டியை கொலை செய்ய நினைக்கிறார்கள்.  மறுநாள் காலையில் சாண்டி திடீர் என கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் மிஸ்கின் தீவிரமாக விசாரிக்கிறார்.   மறுபக்கம் சாண்டியின்  அம்மா காயத்ரி மகனை கொன்றவனை தேடி வருகிறார், இதே வேளையில்  சாண்டியின் நண்பன் கொலை செய்யப்படுகிறார். இவரைத் தொடர்ந்து  சாண்டியின் அம்மா காயத்ரியும் மர்மமான முறையில் கொலை  செய்யப்படுகிறார். இந்நிலையில் ஜெயராம் குடும்பத்திற்கு மர்ம நப...

சம்ஹாரம் திரைவிமர்சனம்

Image
சம்ஹாரம்  திரைவிமர்சனம் கதை பிரஜன் ஒரு அண்ணனாக தன் பெரிய  தங்கைக்கு ஒரு திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்கிறார். அந்தத் திருமணம் மீது விருப்பமில்லாத அவரது தங்கை தான் காதலிப்பதாக சொல்ல அதை பிரஜன் ஏற்க மறுக்க அவர் இறந்து விடுகிறார். சில நாட்களுக்குபின்  அதே மாப்பிள்ளைக்கு தனது இரண்டாவது தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார். இந்த திருமணத்தில் தங்கை ஒருவரை காதலித்துக்கொண்டிருக்க அவரை தன் வீட்டிற்கு வர சொல்கிறார் மாப்பிள்ளையை கொலை செய்ய. அவர்கள் மாப்பிள்ளையை கொலை செய்தார்களா? பிரஜன் என்ன செய்தார்? என்பதே படத்தின் திரைக்கதை i பிரஜன்  அண்ணனாக கணவனாக நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். அவரின் தங்கையாக வரும் சர்மிஷா சிறப்பாக நடித்துள்ளார்.   கணேஷ் சாவரட்டில் வில்லன் ரோலைச் சரியாகச் செய்துள்ளார். நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றால் ராஜா, ராம் பிரபா என இதில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர் V G ஹரி கிருஷ்ணன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் பரவாயில்லை ரகம். சுரேஷ்குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்த...

காட்டாளன்’ - விமர்சனம்

Image
’காட்டாளன்’  - விமர்சனம் கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கொல்லி என்ற மலைக்  கிராமத்தில் யானை கூட்டங்களால் அப்பாவி மக்கள் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்கள்.இதனையடுத்து யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் சுனிலிடம் ஊர் மக்கள் உதவி கேட்கிறார்கள். காட்டு யானைகளை கொன்று  தந்தம் எடுத்துக்கொள்ளும்  சுனில்  அந்த மக்களை அடிமைப்படுத்துவதோடு  பெண் களையும் சிறுமிகளையும் தூக்கிச் சென்று சீரழிகிறான்.  இதே சமயம் சுனில் இடத்தை பிடிக்க நினைக்கும்  கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை  உயர் அதிகாரி உதவியுடன் கைப்பற்றுகிறார். இந்நிலையில் பறிக்கப்பட்ட தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களத்தில்  இறக்குகிறார்.  காவல்துறை உயர் அதிகாரியை ஏமாற்றி இழந்த தந்தத்தை மீட்டெடுப்பதோடு சுனில் மனதில் ஆண்டனி வர்கீர் தனி இடம் பிடிக்கிறார். இதற்கிடையே பழங்குடி சிறுமிக்கு விபத்து ஏற்பட அவரை காப்பாற்ற பல லட்சம் தேவைப்படுகிறது. ஆண்டனி வர்கீர் சுனிலிடம் பணம் கேட்க அதை கொடுக்க மறுக்கிறார். இதையடுத்து பணத்திற்காக காட்டு யானை...

பிளாஸ்ட்’ - விமர்சனம்’ .

Image
’பிளாஸ்ட்’  - விமர்சனம்’ . கராத்தே மாஸ்டரான அர்ஜுன், மனைவி அபிராமி , மகள்  ப்ரீத்தி முகுந்தன், தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே சொல்லிக் கொடுப்பதோடு, யாருக்கும்  ஒரு பிரச்சனை என்றாலும் தைரியமாக அதை தட்டிக் கேட்டாக வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். இந்நிலையில் தொழிலதிபரான ஜான் கொக்கேன்,  ரூ.7000 கோடி மதிப்பிலான ஒரு திட்டத்தை முடிப்பதற்காக அமைச்சரான பி.எல்.தேனப்பனுக்கு ரூ.1000 கோடியை லஞ்சமாக கொடுக்க சம்மதித்து, அந்த பணத்தை அர்ஜுன் சிதம்பரம் மூலம் அமைச்சரின் டிரஸ்ட் வங்கி கணக்கில் மாற்றும் பணியை மேற்கொள்ளும் வேலையில்  ஒரு விபத்தில்  மாட்டிக்கொள்ள போலீஸ் அவரை மருத்துவ மனையில் சேர்த்து அவர் குறித்து விசாரித்து வருகிறது. இதே சமயம் மருத்துவ மனையில் இருக்கும் அர்ஜுன் சிதம்பரம் 18 போலீசை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல அவருக்கு ரௌடியான பவன் உதவி  செய்கிறார். இந்நிலையில், ப்ரீத்தி முகுந்தனிடம் செயின் பறிக்க முயற்சிக்கும் ஒரு குற்றவாளியை அவர் அடித்து...

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!*

Image
*சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!* சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்...