Posts

G5MEDIA

மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!*

*மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!* இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது. கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. “பெத்தி”...

29’ - விமர்சனம்

Image
’29’  -  விமர்சனம் சேலத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகன் விதுவிற்கு 29 வயதியாகியும்  தான் யார்? எனற அடையாளத்தை தேடி வருகிறார். வேலைக்காக சென்னை வர .நாயகன் வேலை பார்க்கும் அதே நிறுவனத்திலேயே நாயகி ப்ரீத்தியும்  வேலைக்கு சேருகிறார். இருவரும் நட்பாக பழக  நாளடைவில் அது காதலாக மலர்கிறது. இந்நிலையில் நாயகி பிரீத்தியின் காதலன் என்பதுதான்  தன் அடையாளம் என்று வாழ்ந்து வருபவர்  நாயகன் விது ,ஆனால் நாயகி  பிரீத்திற்கு சிறுவதில் இருந்து கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார்.  இதனால் இருவருக்கிடையே பிரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் கலெக்டர் தேர்வு சரியாக எழுத முடியாததால் நாயகி ப்ரீத்தி ஊரை விட்டு டெல்லி சென்று விடுகிறார். காதல் தோல்வியால் சொந்த ஊருக்கு செல்லும் நாயகன் விது  அங்கு கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும்  கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகிறார். இதனால் சிறைக்கு செல்லும் நாயகன் விதுவை சிறையில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.  இறுதியில் நாயகன் விது சிறையில் இர...

பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*

Image
*“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*  “ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி” 70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.   கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து...

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.*

Image
*ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.* அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களி...

நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!*

Image
*நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின்  தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்”  சீரிஸை பாராட்டி  குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!* மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் :  தி  வோர்டெக்ஸ் சீசன் 2  மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் 'Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு' எனக் கூறி, ‘இ...

அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் சார்பில், வெள்ளிக்கிழமை, 01 மே, 2026 அன்று, சென்னை, கோவூர், தனலட்சுமி திருமண மண்டபத்தில், காலை 5.32 மணிக்கு துவங்கி நடைபெற்றது.

Image
அட்சய லக்ன பத்ததி - ALP ஜோதிடம் சார்பில், வெள்ளிக்கிழமை, 01 மே, 2026 அன்று, சென்னை, கோவூர், தனலட்சுமி திருமண மண்டபத்தில், காலை 5.32 மணிக்கு துவங்கி நடைபெற்றது.  இந்த நிகழ்வில்,  # ஸ்ரீ ராஜராஜேஸ்வரி யாகம்  # The Journey Through Time - ஆங்கிலப் புத்தக வெளியீடு # ALP ஜோதிடம் - உயர் நிலை மற்றும் அட்சய வாஸ்து வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை உருவாக்கிய முனைவர் சி.பொதுவுடைமூர்த்தி விழாவிற்கு தலைமை தாங்கினார். விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக - திரு. N. நாராயணன், மாநில தலைவர், தமிழ்நாடு பிராம்மணர் சங்கம்,சென்னை.  திரு. Dr. தாமு (நகைச்சுவை நடிகர்) அவர்கள், சென்னை. திரு. Dr. சுரேஷ் குமார் (Sun tv Top 10 Movies) அவர்கள், சென்னை. திரு. சரவணன் (தொழிலதிபர்)திருச்சி. திருமதி. ராஜலட்சுமி சிவசங்கரன் அவர்கள் (RL Handicrafts,விளக்கு கடை) சென்னை. திரு. Dr. மாயன் செந்தில்குமார் அவர்கள், சென்னை. திருமதி. ஜெயந்தி ரவி (சித்தயோகி பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் & நாடி ஜ...

[4/30, 10:58 PM] Sathya: Kara [4/5] Excellent Emotional Movie Action. Bank Thriller.. ‘கர’ உருவாகியுள்ளது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்லதிரைப்படம் ![Actor @dhanushkraja Dir@vigneshraja89 தயாரித்த @VelsFilmIntl நிறுவனத்தின் பாராட்டுகள்.[4/30, 10:58 PM] Sathya: கர படத்தில் ஹீரோ தனுஷ் தவிர நடிப்பால் மிரட்டியவர்கள்1) அப்பாவாக நடித்த கே எஸ் ரவிக்குமார் அவருடைய கெட் அப், அவருடைய நடிப்பு இதுவரை எந்த படத்தில் பார்க்காதது. தனது அனுபவம், அர்ப்பணிப்பால் கலக்கிவிட்டார். அவர் நடித்த சிறந்த படங்களில் ஒன்று2) தனுஷ் சித்தப்பாவாக வரும் கருணாஸ். அப்பாவிதனமான நடிப்பால் பல இடங்களில் கை தட்டல் வாங்குகிறார்3) ஜெயராம் சைலண்ட் வில்லன். என்ன கள்ளத்தனம்[4/30, 10:59 PM] Sathya: ‘கர ’ - விமர்சனம்16 வயதில் நாயகன் தனுஷ் அப்பா கே எஸ் ரவிக்குமார் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி விடுகிறார். திருட்டு வேலை செய்து வருகிறார். நாயகி மமிதா பைஜூவை காதலிக்கும்  தனுஷ் அவரை திருமணம் செய்வதற்காக கடைசியாக ஒரு திருட்டு வேலையை செய்ய நினைக்கிறார்.திருவெறும்பூரில்  இருக்கும் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க நாயகன் தனுஷ்  மற்றும்  பிரித்வி  இருவரும் செல்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக தனுஷ் மாட்டிக் கொள்ள, பிரித்வி பாண்டியராஜ்  தப்பிச்ச செல்கிறார்.உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுராஜ், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக  தனுஷை பல பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார்.  இதையடுத்து தனுஷ், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து செல்கிறார்.6 மாதங்களுக்குப் பிறகு  ரேணிகுண்டாவில் திருட்டு வேலையை விட்டு, மனைவி மமிதா பைஜூ உடன் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். மனைவி  கஷ்டப்படுவதை பார்த்துசொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து தனது அப்பாவை பார்பபதற்காக  இராமநாதபுரத்திற்கு செல்கிறார்.அங்கு அப்பாவை  கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்து  நிலத்தை விற்று பணம் தருமாறு கேட்கிறார். நிலம், வங்கியில் அடமானத்தில் இருப்பதாக அப்பா  சொல்ல தனுஷ் அதிர்ச்சி  அடைகிறார்.  இதே சமயம் வங்கி கடனை கட்டாததால் ஜப்தி செய்ய நோட்டீஸ் வருகிறது.   இதனால் கே.எஸ்.ரவிக்குமார் இறந்து விடுகிறார்.இதனையடுத்து அப்பா கே.எஸ்.ரவிக்குமார் பிணத்தை அவர்களுடைய நிலத்தில் அடக்கம் செய்ய தனுஷ் நினைக்கிறார். ஆனால் வங்கி அதிகாரிகள் அடக்கம் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள்.  இந்நிலையில்  நிலத்தை மீட்டு தந்தையின் உடலை அடக்கம் செய்ய கடன் கொடுத்த கிளைகள் வங்கியிலே கொள்ளை அடிக்க தனுஷ் முடிவு செய்கிறார்.இறுதியில் தனுஷ்  வங்கியை கொள்ளையடித்தாரா ?இல்லையா? அப்பா உடலை அடக்கம் செய்தாரா? இல்லையா? போலீஸ் உயரதிகாரி சுராஜ்,  தனுஷை கைது செய்தாரா ? இல்லையா ? என்பதே ‘கர ’  படத்தின் மீதிக்கதை.கரசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். காதல், கடமை, பாசம், பதற்றம்,கோபம்  என அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கி உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.தனுஷ் மனைவியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ கிராமத்து பெண்ணாக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். போலீஸ்  சுராஜ் பார்வையாலே மிரட்டுகிறார்.  மண்டல வங்கி அதிகாரியாக  நடித்திருக்கும் ஜெயராம்  சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்.தனுஷ் அப்பாவாக் நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அனுபவ நடிப்பு கைக்கொடுத்திருக்கிறது. அவரது மனைவியாக வரும்  ஸ்ரீ ஜா ரவி, மாமாவாக வரும் கருணாஸ் , ப்ரித்வி பாண்டியராஜன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு அழகாக உள்ளது.வங்கிகளால் பொது மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மைய கருவாக வைத்து ஒரு விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா இத்திரைப்படத்தில் அப்பா - மகன் பாசம், கணவன் -மனைவி உறவு, பூர்வீக நிலம் என அனைத்தையும் பற்றி இத்திரைப்படம் பேசியிருக்கிறது. வங்கிகளில் வாங்கிய பணத்திற்கு அப்பாவி மக்கள் பணம் கட்டமுடியாமல் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.நடிகர்கள் :  தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு, ப்ரித்வி பாண்டியராஜன் இசை :  ஜிவி பிரகாஷ்குமார்இயக்கம் : விக்னேஷ் ராஜாமக்கள் தொடர்பு : சதீஷ் & சிவா  (AIM ), ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்