ஐ , நோபடி’ (I,Nobody) - விமர்சனம்
’ஐ , நோபடி’ (I,Nobody) - விமர்சனம் வஞ்சியூரில் உள்ள ஒரு வங்கியில் மூன்று பேர் துணிகரமாக கொள்ளையடிக்கிறார்கள். அப்போது வங்கியில் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனை முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். பின்னர், ஒரு இடத்தில் அவரை இறக்கிவிடும் போது, கொள்ளையர்களில் ஒருவரின் முக்கியமான அடையாள அட்டை எதிர்பாராத விதமாக பிரித்விராஜின் கையில் சிக்குகிறது. இதே சமயம், எதிர்பாராத விதமாக நிகழும் விபத்தில் அந்த மூன்று கொள்ளையர்களும் உயிரிழக்கிறார்கள். பிரித்விராஜின் கையில் சிக்கிய அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டதால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். இந்நிலையில் இந்த வங்கியில் பிரித்விராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் எந்த விதமான சேமிப்பு கணக்கு இல்லாமல் இருக்கிறது. பிரித்விராஜ் அங்கு நீண்ட நேரமாக இருந்தது சந்தேகத்தை அதிகரிக்கிறது. இதனால், அந்த கொள்ளைச் சம்பவத்...