Posts

G5MEDIA

‘ராட்ட’ - விமர்சனம்

Image
‘ராட்ட’  -  விமர்சனம் குமாரபாளையம் பகுதியில் இருக்கும் நாயகன் சக்திவேல் நாகப்பன், அம்மாவுடன் வசித்து வருகிறார்.  சித்தா தர்ஷன் நடத்தும் விசைத்தறி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.சிறந்த உழைப்பாளியான  நாயகன் அங்கு வேலை பார்ப்பவர்களை விட  வாரம் அதிக சம்பளம் பெறக்கூடியவர் . நாயகன் அம்மா மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டி கோவில் கோவிலாக வேண்டி வருகிறார். இந்நிலையில் நாயகி ஹெலன் நாயகன் வேலை பார்க்கும் விசைத்தறி பட்டறையில் வேலைக்கு சேர்கிறார்.  இதனையடுத்து நாயகன் வீட்டுக்கு அருகிலேயே குடும்பத்துடன்  குடியேறுகிறார். இந்நிலையில்  நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் காதலை சொல்லிக் கொல்லாமல் இருக்கிறார்கள்.  ஒரு கட்டடத்தில் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷன் நாயகியிடம் தாலியை கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார். இறுதியில் நாயகி ஹெலன் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷனை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரின் காதல் கைகூடியதா ? இல்...
Image
இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர் அ பிஷன் ஜீவந்த் நடிக்கும் 'வித் லவ் ( With Love)' படத்தின் டிரெய்லர் வெளியீடு 'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ் ( With Love )' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வித் லவ் ' ( With Love) எனும் திரைப்படத்தில் அபிஷன் ஜீவந்த்,  அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன்,  சரவணன், தேனி முருகன், உள்ளிட்ட பலர் ந...
Image
*மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும்  ‘வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!* இந்திய சினிமாவில் தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது. Sri Durga Arts மற்றும் Showing Business நிறுவனங்களின் சார்பில்  K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து  தயாரிக்கின்றனர்.  இந்த மாபெரும் ஆக்ஷன்–த்ரில்லர் திரைப்படத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான ஒவ்வொரு தகவலும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.   பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த இந்த கிளிம்ப்ஸில், காலத்தையும்,  நில பரிமாணங்களையும் கடந்து செல்லும் காட்சித் தொகுப்பாக,  திரேதாயுகம் தொடங்கி, கி....
Image
*KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!* KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் "பேங் பேங்" படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் டிரேட்மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக "பேங் பேங்" உருவாகி வருகிறது. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ...
Image
*ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!* துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார். Geetha Arts & Swapna Cinema வழங்க,  சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும்  நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக  “ஆகாசம்லோ ஒக தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும்  தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து,  புகழ் பெற்ற பவன் சடினேனி  ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். புதுமுக நடிக...

க்ராணி’ - விமர்சனம்

Image
‘க்ராணி’  - விமர்சனம் ஊருக்கு வெளியே உள்ள வாழைத்தோப்பில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு இதயம் காணாமல் போகிறது. இதனையடுத்து  இந்த வழக்கை சப் - இன்ஸ்பெக்டர் திலீபன் விசாரிக்கிறார். அவருக்கு உதவியாக போலீஸ் ஏட்டு சிங்கம் புலி இருக்கிறார். இந்நிலையில் இதே ஊருக்கு லண்டனில் இருந்து வரும் ஆனந்த் நாக் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அரண்மனை  வீட்டில் குடும்பத்துடன் வசிக்க வருகிறார். அப்போது அடையாளம் தெரியாத பாட்டி ஒருவர் மயங்கி வீட்டு வாசலில் விழுகிறார். அப்போது அவருக்கு உதவி செய்து வீட்டிலேயே தங்க வைக்கிறார்கள். மறுபுறம் இந்த வழக்கை திலீபன் மற்றும் சிங்கம்புலி விசாரிக்க பல திடுக்கிடும் அமானுஷ்யம் இருப்பது தெரிய வருகிறது.   இதே சமயம் அந்த வீட்டில்  இருக்கும் பாட்டி ஆனந்த் நாக் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து விடுகிறார். இதை நேரில் பார்க்கும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே  போக பார்க்கிறார்கள். ஆனால் அவர்களால் வெளியே போக  முடியாத அளவிற்கு பாட்டி அந்த வீட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறார். இதே நேரம் அந்த அரண்மனைக்கு திலீபன் மற...

லாக் டவுன்” - விமர்சனம்

Image
“லாக் டவுன்” - விமர்சனம் வட சென்னையில் வசிக்கும் சார்லி , நிரோஷா  தம்பதிகளின் மூத்தமகள்  அனுபமா பட்டப்படிப்பை முடித்து விட்டு ஐடி நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி  செய்து வருகிறார்.  மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கும் ராஜ்குமார்  நாயகி அனுபமாவை ஒரு தலையாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ராஜ்குமார் தன் காதலை அனுபமாவிடம்  கூற அதை ஏற்க மறுக்கிறார்    இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக  கூறி தோழி ஒருவர் அனுபமாவை  பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு மது குடித்துவிட்டு  ஆட்டம், பாட்டு என்று சந்தோஷமாக இருக்க போதை அதிகமாக அனுபமா மயங்கி கீழே விழ  அவரை ஒரு அறையில் அவரது தோழி படுக்க  வைக்கிறார்  மறுநாள் வீட்டிற்கு செல்ல சில மாதங்களில் அனுபமா கர்ப்பமாக இருப்பது தெரிய வர அதிர்ச்சி அடைகிறார். தன்னை யார் பலாத்காரம் செய்தார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார். தன் வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க நினைக்கிறார்.  இந்நிலையில் கொரோனா லாக்டவுன் போடப்படுகிறது. இறுதியில் அனுபமா தன்  கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடித்த...