Posts

G5MEDIA

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!*

Image
*ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!* *ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய “மை லார்ட்” படக்குழு!* *ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த “மை லார்ட்” படக்குழுவின் நேரடி சந்திப்பு!* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,   மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும்.  ஒரு சாப்பா...
Image
*'பள்ளிச்சட்டம்பி' (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது* இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி  ( Dijo Jose Antony)  இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் 'குயின் - (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான 'ஜன கன மன' ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு 'மலையாளி ஃபிரம் இந்தியா' ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ - சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில்  முக்கியமான படமாக அமைகிறது.மேலும் இது ...
Image
*₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம்,  வரலாற்றுச் சாதனை!* 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது. டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம், இந்தப் படத்தின் மீது திரைத்துறை வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. AP–TG உரிமைக்காக மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும்...

லவ்’ (With Love) - விமர்சனம்வித்

Image
‘ லவ்’ (With Love) - விமர்சனம்வித் சென்னையில் டிசைனர் வேலை பார்க்கும் நாயகன் அபிஷன் ஜீவந்திற்கு அவருடைய அக்கா திருமணத்திற்காக பெண் பார்க்கிறார். பெண்ணை பற்றி எந்த தகவலும் கூறாமல் பெண்ணை சந்தித்து வருமாறு கூறுகிறார். இதனையடுத்து ஒரு காபி ஷாப்பில் அபிஷன் அனஸ்வரா சந்தித்து பேச  அப்போதுதான்  இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் இருவரும் தங்களுடைய முதல் காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது அனஸ்வராவிற்கு ஒரு யோசனை வர இருவரும் தங்களுடைய முதல் காதலைத் தேடி செல்லலாம் என்று கூறுகிறார். இந்த பயணத்தின் போது அபிஷன் அனஸ்வராவை காதலிக்கிறார். இறுதியில் அபினவ் காதலை அனஸ்வரா ஏற்றுக்கொண்டாரா? இல்லையா?  இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே  ‘வித் லவ்’ (With Love) படத்தின் கதை. சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த்   பள்ளிப் பருவம் மற்றும் வாலிப பருவம் என இரண்டு தோற்றத்திலும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பள்ளி பருவத்தில் செய்யும் குறும்புகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிற...
Image
*தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!* *பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ – ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ!!* திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி!! தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன்,  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்...
Image
*மெகா பவர் ஸ்டார் ராம் சரண் – புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!* *மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சானா (Buchi Babu Sana), வெங்கட சதீஷ் கிலாரு( Venkata Satish Kilaru),விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas)  இணையும் ‘பெத்தி’ படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!* மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட  பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது. வெளியீட்டு தேதி ப...

‘ராட்ட’ - விமர்சனம்

Image
‘ராட்ட’  -  விமர்சனம் குமாரபாளையம் பகுதியில் இருக்கும் நாயகன் சக்திவேல் நாகப்பன், அம்மாவுடன் வசித்து வருகிறார்.  சித்தா தர்ஷன் நடத்தும் விசைத்தறி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.சிறந்த உழைப்பாளியான  நாயகன் அங்கு வேலை பார்ப்பவர்களை விட  வாரம் அதிக சம்பளம் பெறக்கூடியவர் . நாயகன் அம்மா மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டி கோவில் கோவிலாக வேண்டி வருகிறார். இந்நிலையில் நாயகி ஹெலன் நாயகன் வேலை பார்க்கும் விசைத்தறி பட்டறையில் வேலைக்கு சேர்கிறார்.  இதனையடுத்து நாயகன் வீட்டுக்கு அருகிலேயே குடும்பத்துடன்  குடியேறுகிறார். இந்நிலையில்  நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் காதலை சொல்லிக் கொல்லாமல் இருக்கிறார்கள்.  ஒரு கட்டடத்தில் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷன் நாயகியிடம் தாலியை கொடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார். இறுதியில் நாயகி ஹெலன் விசைத்தறி பட்டறை முதலாளி சித்தா தர்ஷனை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? நாயகன் சக்திவேல் , நாயகி ஹெலன் இருவரின் காதல் கைகூடியதா ? இல்...