Posts

G5MEDIA

தாய் கிழவி’ விமர்சனம்

Image
‘தாய் கிழவி’ விமர்சனம் கணவனை இழந்த ராதிகாவிற்கு சிங்கம்புலி,  அருள்தாஸ்,  பால சரவணன் என மூன்று மகன்களும் ரைச்சல் என்ற மகளும் இருக்கிறார்கள்.  மூதாட்டியான  ராதிகா , தன் கடின உழைப்பால் சேர்த்து வைத்த சொத்துக்களை  தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஊர் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் ராதிகா , அதை வசூலிப்பதில் கடுமையாக நடந்துக் கொள்கிறார்., ஊர் மக்கள் அவரை பார்த்தாலே பயப்படுவதோடு, அவர் எப்போது இறப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று ராதிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால், ஊர் மக்களும், அவரது மூன்று மகன்களும், ஒரு மருகனும் சொத்துக்காக அவரது இறப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதனையடுத்து அங்கு வரும் நகைக்கடை முதலாளியான இளவரசு மூலம் ராதிகா 160 பவுன் தங்க நகைகள் வாங்கிய விபரம் மகன்களுக்கு தெரிய வருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகையை கைப்பற்றுவதற்காக  தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என்று மூன்று மகன்களும...

புதிய குறும்படம், ' The Last Bus

Image
 ராகவேந்திரா பிலிம் சார்பில் சுமன் இயக்கி தயாரித்துள்ள புதிய குறும்படம், 'தி லாஸ்ட் பஸ்'. துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி ராமச்சந்திரன், பரதா, சதீஷ், வெங்கடேஸ்வரா, யாஷா, தெய்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவா இசையமைத்துள்ளார்.  தேர்வில் தோல்வியடைந்த 16 வயது மாணவி, தாயின் திட்டுக்கு ஆளாகி, மனம் வெறுத்துப்போய் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் கடைசி இரவு பஸ்சில் ஏறி புறப்படுகிறாள். அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினைகள் சஸ்பென்ஸ் - திரில் கதைக்களத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.  'தி லாஸ்ட் பஸ்' திரைப்படம், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்தவகையில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதை இந்த படம் தட்டி தூக்கியிருக்கிறது.  ''இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. 39 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் அடுத்தடுத்த சர்வதேச பட விழாக்களிலும் திரையிடப்படும். விரைவில் திரைக்கு வருகிறது'', என்கிறார் சுமன்.   இக்குறும்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு...

ஆழி திரைப்பட விமர்சனம்

Image
ஆழி  திரைப்பட விமர்சனம் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகதிஷ், தேவிகா கதீஷ், நிகில் முருகன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆழி. கதை மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், அந்த வேலையை பகுதி நேரமாக வைத்துக் கொண்டு, போதைப் பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் மற்றும் தேவிகாவின் காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. கோபம் கொள்ளும் அவர் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி ஆழ்கடல்லுக்கு அழைத்துச் சென்று   கொலை செய்ய திட்டமிடும் சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. மீன்பிடி படகு மெக்கானிக் கதாபாத்தகரத்தில் சரத்குமார் சிறப்பாக நடித்துள்ளார்.  இந்திரஜித் ஜெகஜித்  சரத்குமாரிடம் தப்பிக்கும் முயற்சியில...
Image
*அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின்  அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்* 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'.  கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது. டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியது. அதிரடி காட்சிகளுக்க...

LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்

Image
LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”  - விமர்சனம் படவா கோபி, வினோதினி தம்பதிகளின் மூத்த மகன் நாயகன் ஆதவ் கிருஷ்ணா கல்லூரியில் படித்து வருகிறார். படிப்பில் திறமைசாலியான  ஆதவ் சக மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். ஒரு நாள் இதே  கல்லூரியில் படிக்கும் நாயகி சிம்ரனுக்கு ரவுகளால் ஆபத்து வர ரவுகளிடம் இருந்து சிம்ரனை ஆதவ் காப்பாறுகிறார். இதனையடுத்து ஆதவ், சிம்ரன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.  இந்நிலையில் சிம்ரன் சிறுவயதிலேயே அவருடைய அம்மா வேறுறொரு நபருடன்  காசிக்கு சென்று விடுகிறார். அம்மா இல்லாமல்  அப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார் நாயகி சிம்ரன். இந்நிலையில் ஆதவை தன்னுடன் அழைத்துச் செல்லும் சிம்ரன் காசியில் இருக்கும் அம்மவை பார்க்க செல்கிறார். சென்ற  இடத்தில் அம்மாவை பார்ப்பதற்காக தனியே செல்லும் நாயகி சிம்ரன் காணாமல் போகிறார். இதனையடுத்து  ஆதவை கைது செய்யும் போலீஸ் அவரை சிறையில் அடைகிறது. இறுதியில் நாயகி சிம்ரனை கடத்தியது யார்? காணாமல் போன நாயகி சிம்ரன் கிடைத்தாரா? இல்லையா?  சிறையில்  ...

சிவ சம்போ' சினிமா விமர்சனம்

Image
'சிவ சம்போ' சினிமா விமர்சனம்  கதாநாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கதாநாயகியோ கடந்த கால சச்சரவான சில சம்பவங்களால்  தனது காதலை அவனிடம் சொல்லத் தயங்குகிறாள்.  சில நாட்களில்  இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இது கடந்தகால கதையாக இருக்க, நிகழ்காலத்தில் நாயகன் தன் மனைவி இறந்துவிட்டதாக கருதி அதற்கு காரணமானவர்களை பழி வாங்கப்பட்டதாக  திரைக்கதை பரபரக்கிறது. கதாநாயகிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்ன? அவள் இறப்புக்கு காரணம் என்ன? என்பதெல்லாம் பெரும்பாலான புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியிருக்கிற 'சிவ சம்போ'வின் மீதிக்கதை. ஹீரோ தில் நட்ராஜ் கதையில் போலீஸ் ஆஃபீஸர் என்றாலும் அதற்கேற்றபடி மிடுக்கான தோற்றத்தை ஓரளவுக்கு கொடுக்கிறார்.காதல் மனைவியை சீரழித்தவர்களை பழி வாங்க களமிறங்கும்போது கோபத்தின் கோபத்தின் உச்சத்தை  காட்டுகிறார். இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம் என்று  தோன்றுகிறது.  கிராமத்து லட்சணம் கொண்ட ஹீரோயின் ஷிவானி திருமணம் என்ற பெயரில் தன்னை நாசமாக்கியவர்களை க...

திஐ 3உண்மை சம்பவம்-கிரைம் திரில்லர்)

Image
திஐ 3 (உண்மை சம்பவம்- கிரைம் திரில்லர்) ஒரு மலைக்கிராமத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம் பெண்கள், காதலர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இச்சூழ்நிலையில் தொழிலதிபர் ராகவன் மீது போலீசுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் மாற்று வழியை கையாளுகின்றனர். அது என்ன வழி ?கொலையாளிகள் யார் ? என்று பல கோணங்களில் துப்பு துலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படும் படமே தி ஐ -3, ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ் சார்பில் கொடைக்கானல்  ஆர்.ராஜேந்திரன் தயாரிக்க குரு பிரகாஷ் இயக்கி உள்ளார். ரோஷன் - சந்தியா கதாநாயகன் நாயகியாக நடிக்க ரமேஷ்,மாலி,சுஜி ,ஸ்ரீ, சாய் கோபி,லோகேஷ் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர். ஒளிப்பதிவு - ராஜேஷ் குமார் இசை -ஜீவா வர்ஷினி பாடல்கள் -காதல் மதி எடிட்டிங் - சி.எஸ் பிரேம்குமார் நடனம் - விமல் சண்டைப்பயிற்சி - ரவி ராஜ் மக்கள் தொடர்பு -வெங்கட் வசனம் -முத்துக்குமார் இணைத்தயாரிப்பு -  செல்வ சத்யா,...