Posts

G5MEDIA

டபுள் ஆக்குபென்சி’ - விமர்சன

Image
‘டபுள் ஆக்குபென்சி’  - விமர்சனம் போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். கடவுளின் அருளால் இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை  இறந்து  விடுகிறது. இதனையடுத்து  போஸ் வெங்கட் கடவுளிடம் மனம் உருகி வேண்ட கடவுளின் அருளால் மீண்டும் அந்த குழந்தைக்கு உயிர் கிடைக்கிறது.  ஆனால் உயிர் பெற்ற குழந்தை பெண்ணாக இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அரிய சக்தி அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. ஒரு உடலில்  இரண்டு  குணாதிசயம் கொண்ட உயிர்கள்  வாழ்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில்  வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத்  கிஷனை காதலிக்கிறார். மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயக...

சாருகேசி ’ - விமர்சனம்

Image
’சாருகேசி ’ - விமர்சனம் கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி சுஹாசினி, மகன் ராஜ் அய்யப்பாவுடன் வசித்து வருகிறார்.  குடிப்பழக்கத்தால்  மகன் ராஜ் அய்யப்பா அப்பாவிற்கு அவமானத்தை பெற்றுத் தருகிறார். இந்நிலையில் பாட வாய்ப்பு தேடி வரும் ரம்யாவை பார்த்தும் ராஜ் அய்யப்பா காதல் வயப்பட  இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதே சமயம் ஸ்டுடியோ  ஒன்றை வாங்குவதற்காக ராஜ்  அய்யப்பா பெங்களூர் செல்கிறார். இதனையடுத்து மருமகள்  ரம்யா  ஒய்.ஜி.மகேந்திரனிடம்  ராஜ்  அய்யப்பா உங்களுக்கு பிறந்தவர் இல்லை என்ற உண்மையை கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் ஒய்.ஜி.மகேந்திரன் , ரம்யாவை பற்றி தெரிந்து கொள்ள செல்லும் வழியில் மயக்கம் அடைய அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் டிரைவரான தலைவாசல் விஜய் அங்கு  மருத்துவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கூற ஒய்.ஜி.மகேந்திரன் அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் ஒய்.ஜி.மகேந்திரன் சேர்க்கப்படுகிறார். இறுதியில்...

நிழல் சினிமா விமர்சனம் : நிழல் - சமூக அநீதிக்கு எதிராக இரட்டைச் சகோதரிகளின் ஆக்ரோஷமான பழிவாங்கும் வேட்டை | ரேட்டிங்: 3/5

Image
நிழல் சினிமா விமர்சனம் : நிழல் - சமூக அநீதிக்கு எதிராக இரட்டைச் சகோதரிகளின் ஆக்ரோஷமான பழிவாங்கும் வேட்டை | ரேட்டிங்: 3/5 ரமேஷ் கண்ணாவின் மகளான நாயகி ஜனனி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நாயகனான சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். இந்நிலையில் மருத்துவ மனையில் பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் மருத்துவ மனையின் உரிமையாளரின் மகன் ஹரிஹரன் ராஜு மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களை ஜனனி கொடூரமாக தாக்கி அவர்கள் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு தாக்கி மருத்துவ மனையில் சேர்கிறார். இதனையடுத்து இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் விசாரிக்க இவர்களை தாக்கியது ஜனனி என தெரிந்து கொள்கிறார். இறுதியில் 3 பேரை ஜனனி சாகும் அளவிற்கு தாக்கியதற்கான காரணம் என்ன? எதற்காக ? என்பதை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே ’நிழல்’ படத்தின் கதை. ரம்யா , சரண்யா கதாபாத்திரத்தில்  முதல் முறையாக இரட்டை வேடங்களில்  நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி இரண்டிலும் வேறுபட்ட நடப...

ஹபீபிMovie’ - விமர்சனம் #habeebi 4/5தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, படைப்பு.

Image
’ஹபீபி’ - விமர்சனம் ஹபீபி #habeebi 4/5 தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, படைப்பு.  இஸ்லாமிய குடும்ப வாழ்க்கைஎந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. படம் பார்ப்பவர்  பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. 1980 ஆம் காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா நெசவுத் தொழில் செய்கிறார் இவருடன் இவரது தம்பியும் இதே வேலை செய்து வருகிறார். கூட்டு குடும்பமாக வாழும் இவர்களின் குடும்பத்திற்கான பொருளாதார தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனையடுத்து கஸ்தூரிராஜா தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். கஸ்துரிராஜாவின் மகன் ஈஷா, தன்னுடன் படிக்கும் மாணவி மாளவிகாவை காதலிக்கிறார். ஒரு நாள் இரவு மாளவிகாவை  பார்ப்பதற்காக ஈசா அவரது  வீட்டிற்கு செல்ல ஊர் மக்கள் பிடித்து  பஞ்சாயத்தில் நிற்க வைக்கிறார்கள். இறுதியில் ஈஷா, மாளவிகா காதல் கைக் கூடியதா ? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றாரா ?  இல்லையா ?  என்பதே படத்தின் கதை. முகமது யூசுப் என்கிற கதாபாத்திரத்தில் நட...

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறதுஇந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்ட தனது வரவிருக்கும் வரலாற்று வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பெருமையுடன் அறிவிக்கிறது.இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆர்யன் ஷ்யாம் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆனந்த் வி. பிரசாத் இயக்குகிறார்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்யும் இந்த திரைப்படம், அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அசைக்க முடியாத தேசப்பற்று மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த முக்கிய பங்கை வெளிப்படுத்தும். விரிவான ஆய்வுகள் மற்றும் வலுவான திரைக்கதையின் மூலம், இந்திய தேசிய இராணுவத்தின் (INA) தலைவராக அவர் செயல்பட்ட காலம் உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் முக்கிய அத்தியாயங்களையும், நாட்டின் வரலாற்றில் அவர் ஏற்படுத்திய நிலையான தாக்கத்தையும் படம் ஆராய்கிறது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரத்தை ஏற்கும் வாய்ப்பு குறித்து முன்னணி நடிகர் ஆர்யன் ஷ்யாம் கூறியதாவது:«“நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போன்ற ஒரு மாபெரும் தேசியத் தலைவரை திரையில் சித்தரிப்பது எனக்கு மிகப் பெரிய பெருமையும், அதே நேரத்தில் மிகுந்த பொறுப்பும் ஆகும். தனது தியாகங்களாலும் உயர்ந்த கொள்கைகளாலும் நம் தேசத்தை வடிவமைத்த ஒரு மகத்தான ஆளுமைக்கு முழுமையான நீதி செய்ய நான் உறுதிபூண்டுள்ளேன்.”»ஆர்யன் ஷ்யாம் இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருப்பது தனித்துவமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களின் பொருளாதார தன்னிறைவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியன் வங்கியை நிறுவிய தேசியவாத தலைவர் வி. கிருஷ்ணசுவாமி ஐயரின் கொள்ளுப் பேரனான ஆர்யன் ஷ்யாம், இந்தியாவின் சுதந்திரப் பயணத்துடன் ஆழமாக இணைந்த ஒரு பாரம்பரியத்தின் வாரிசாக உள்ளார்.அவரின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கதாபாத்திரம், தேசப்பற்று, தியாகம் மற்றும் தேசக் கட்டமைப்பின் இரண்டு மகத்தான பாரம்பரியங்களின் சங்கமத்தை பிரதிபலிக்கிறது. இதனால் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மேலும் அர்த்தமுள்ள மற்றும் ஊக்கமூட்டும் படைப்பாக அமையும்.இந்த பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பை, இந்தியாவின் மிகச் சிறந்த தேசிய வீரர்களில் ஒருவருக்கு செலுத்தப்படும் அஞ்சலியாக ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் கருதுகிறது. காலப்பின்னணியை துல்லியமாக மீட்டுருவாக்கும் பிரம்மாண்டமான காட்சிகள், உயர்தர தயாரிப்பு மதிப்புகள் மற்றும் உண்மைத்தன்மை மிக்க, ஊக்கமளிக்கும் திரையரங்க அனுபவத்தை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் திறமையான படைப்புக் குழுவுடன் இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது.தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய படப்பிடிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்படும்.இந்த திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளதாகவும், இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் பார்வையாளர்களை சென்றடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குநர் ஆனந்த் வி. பிரசாத் கூறுகையில்:“இன்றைய இளைஞர்களில் பலர் நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ராணுவப் பணியில் சேரும் ஆர்வம் ஓரளவு குறைந்து வருவதை காண முடிகிறது.இந்தத் திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு, குறைந்தபட்சம் ஆயிரம் இளைஞர்களாவது ராணுவத்தில் சேரும் எண்ணத்தைப் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.மேலும், ஒழுக்கமின்மை மற்றும் போதைப் பழக்கங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், இந்தத் திரைப்படம் முன்வைக்கும் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்கள் நாட்டுப்பற்றை நோக்கி உறுதியான அடியெடுத்து வைப்பார்கள் என்றும் நம்புகிறோம்.தயாரிப்பு நிறுவனம்:ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்நிர்வாகத் தயாரிப்பாளர்:பெரு துளசி பழனி வேல்முன்னணி நடிகர்:ஆர்யன் ஷ்யாம்இயக்கம்:ஆனந்த் வி. பிரசாத்

Image
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்  வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான  திரைப்படத்தை  ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்ட தனது வரவிருக்கும் வரலாற்று வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆர்யன் ஷ்யாம் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆனந்த் வி. பிரசாத் இயக்குகிறார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்யும் இந்த திரைப்படம், அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அசைக்க முடியாத தேசப்பற்று மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த முக்கிய பங்கை வெளிப்படுத்தும். விரிவான ஆய்வுகள் மற்றும் வலுவான திரைக்கதையின் மூலம், இந்திய தேசிய இராணுவத்தின் (INA) தலைவராக அவர் செயல்பட்ட காலம் உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் முக்கிய அத்தியாயங்...

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!*

Image
*விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!* வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ...

பெத்தி’ - விமர்சனம் .

Image
’பெத்தி’ - விமர்சனம் . மலையடிவாரத்தில் வசிக்கும் ராம்சரண் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாத இவருடைய கிராமத்தில்  ரயில் மட்டும் இவர்கள் ஊர் வழியாக செல்லும் ஆனால் இவர்கள் ஊரில் நிற்காது. இதனால் ஊர் பெரியவரான ஜெகபதி பாபு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை பார்த்து மனு கொடுக்கிறார்  அதனால் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கும் ராம்சரண் கூலிக்கு காசு வாங்கிக்கொண்டு  கிரிக்கெட் விளையாடுகிறார். சூழ்ச்சியால் ஏமாற்றப்படும் ராம்சரண் தனக்கும் தனது  கிராம மக்களுக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து தனக்கு ஒரு அடையாளம் தேவை  என்பதை உணர்ந்து சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்றுக்கொள்கிறார். அதில் சாதனை படைத்து மாநில அளவிலான அரையிறுதி போட்டியில் வெற்றி பெரும் வேளையில் இவருடையில் காலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இறுதியில் தடைகளை தாண்டி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ?...