Posts

G5MEDIA

பாலன் - தி பாய்' - விமர்சனம்

Image
'பாலன் - தி பாய்' - விமர்சனம் கணவனை இழந்த ஃபர்ஸானா சிறையில் தனது  5 வயது மகனுடன் வசித்து வருகிறார்.  பல வருடங்கள் கழித்து தன் மகனுடன் சிறையில் இருந்து வெளியே வரும் ஃபர்ஸானா யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து பல இடங்களில்  வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெரிய வீட்டில் தனிமையில் இருக்கும் வயதான பாட்டி  ஒருவரை பார்த்து கொள்வதற்காக  அங்கு தனது  மகனுடன் செல்கிறார். அங்கிருக்கும் பள்ளியில் மகனை சேர்த்து விடுகிறார்.  ஒரு நாள் பாட்டிக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டு பாட்டி இறந்து விட அவரை அங்கிருக்கும் தோட்டத்தில் அடக்கம் செய்து விடுகிறார். பள்ளி முடிந்து வரும் மகனை எப்போதும் அழைத்து வரும் ஃபர்ஸானா, மகனிடம்  எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும்வரை காத்திருக்க வேண்டும் கூறுகிறார். இதே சமயம் பாட்டியின் மகன் அன்று மாலை அவரை பார்க்க வருவதாக தொலை பேசியில் கூறுகிறார். இதனால் மகனை அழைத்து வர முடியாத சூழ்நிலை ஃபர்ஸானா ஏற்படுகிறது.  பல மணிநேரம் காத்திருக்கும் சிறுவனை போலீஸ் மீட்டுக் கொண்டு போய்  சிற...

எங்கள் தங்கம்’ - விமர்சனம்

Image
‘எங்கள் தங்கம்’ - விமர்சனம் ஆதரவற்ற இல்லத்தில் வளர்த்து வரும் சமந்தா, கௌதமி, ஆனந்த் தம்பதிகளின் மூத்த மகனான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 3 வருடங்களுக்குப் பிறகு கணவரின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார். பாரம்பரிய மிக்க அவரது குடும்பத்தில்  இருக்கும் உறுப்பினர்கள்  அனைவரின் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்  கொள்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவனை அனுப்பி சமந்தா குறித்து விசாரித்து வர சொல்கிறார்.   விசாரிக்க சென்றவன் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறான், இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லாவிட்டால் உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான். இறுதியில் சமந்தா தான் யார் ? என்ற உண்மையை குடும்பத்தில் கூறினாரா? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற சமந்தா எடுத்த முடிவு என்ன?  கணவரின் தங்கை திருமணம் நடந்ததா ? இல்லையா ?  என்பதே  ‘எங்கள் தங்கம்’ . படத்தின் ...

#நூறுசாமி 3.5/5தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளுவார் செல்வியாக நடித்த ஸ்வாசிகா.

Image
‘‘நூறு சாமி’ ’ - விமர்சனம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஸ்வாசிகா, கணவரை இழந்தவர்  தனது இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். மறுமணம் செய்ய ஆசைப்படும் ஸ்வாசிகா, தனது எண்ணத்தை  மூத்த  மகன் அஜய் திஷானிடம் கூற அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்று விடுகிறார். சில வருடம் கடந்த நிலையில் தன் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான், அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அவரது முடிவுக்கு அவரது இளைய சகோதரரும் ஆதரவு தெரிவிக்க, இரண்டு  மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க  நினைக்கிறார்கள். இதற்கு சொந்தமும், ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அண்ணன் கருணாஸ் தங்கை ஸ்வாசிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார். இறுதியில்  கருணாஸிடம் இருந்து ஸ்வாசிகா உயிர் பிழைத்தாரா ? இல்லையா?  மகன்கள் ஊர் எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா?  என்பதே ‘நூறு சாமி’ ’ படத்தின் கதை. செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திர...

டபுள் ஆக்குபென்சி’ - விமர்சன

Image
‘டபுள் ஆக்குபென்சி’  - விமர்சனம் போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். கடவுளின் அருளால் இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை  இறந்து  விடுகிறது. இதனையடுத்து  போஸ் வெங்கட் கடவுளிடம் மனம் உருகி வேண்ட கடவுளின் அருளால் மீண்டும் அந்த குழந்தைக்கு உயிர் கிடைக்கிறது.  ஆனால் உயிர் பெற்ற குழந்தை பெண்ணாக இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அரிய சக்தி அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. ஒரு உடலில்  இரண்டு  குணாதிசயம் கொண்ட உயிர்கள்  வாழ்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில்  வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத்  கிஷனை காதலிக்கிறார். மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயக...

சாருகேசி ’ - விமர்சனம்

Image
’சாருகேசி ’ - விமர்சனம் கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி சுஹாசினி, மகன் ராஜ் அய்யப்பாவுடன் வசித்து வருகிறார்.  குடிப்பழக்கத்தால்  மகன் ராஜ் அய்யப்பா அப்பாவிற்கு அவமானத்தை பெற்றுத் தருகிறார். இந்நிலையில் பாட வாய்ப்பு தேடி வரும் ரம்யாவை பார்த்தும் ராஜ் அய்யப்பா காதல் வயப்பட  இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதே சமயம் ஸ்டுடியோ  ஒன்றை வாங்குவதற்காக ராஜ்  அய்யப்பா பெங்களூர் செல்கிறார். இதனையடுத்து மருமகள்  ரம்யா  ஒய்.ஜி.மகேந்திரனிடம்  ராஜ்  அய்யப்பா உங்களுக்கு பிறந்தவர் இல்லை என்ற உண்மையை கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடையும் ஒய்.ஜி.மகேந்திரன் , ரம்யாவை பற்றி தெரிந்து கொள்ள செல்லும் வழியில் மயக்கம் அடைய அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் டிரைவரான தலைவாசல் விஜய் அங்கு  மருத்துவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கூற ஒய்.ஜி.மகேந்திரன் அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் ஒய்.ஜி.மகேந்திரன் சேர்க்கப்படுகிறார். இறுதியில்...

நிழல் சினிமா விமர்சனம் : நிழல் - சமூக அநீதிக்கு எதிராக இரட்டைச் சகோதரிகளின் ஆக்ரோஷமான பழிவாங்கும் வேட்டை | ரேட்டிங்: 3/5

Image
நிழல் சினிமா விமர்சனம் : நிழல் - சமூக அநீதிக்கு எதிராக இரட்டைச் சகோதரிகளின் ஆக்ரோஷமான பழிவாங்கும் வேட்டை | ரேட்டிங்: 3/5 ரமேஷ் கண்ணாவின் மகளான நாயகி ஜனனி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நாயகனான சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். இந்நிலையில் மருத்துவ மனையில் பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் மருத்துவ மனையின் உரிமையாளரின் மகன் ஹரிஹரன் ராஜு மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களை ஜனனி கொடூரமாக தாக்கி அவர்கள் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு தாக்கி மருத்துவ மனையில் சேர்கிறார். இதனையடுத்து இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் விசாரிக்க இவர்களை தாக்கியது ஜனனி என தெரிந்து கொள்கிறார். இறுதியில் 3 பேரை ஜனனி சாகும் அளவிற்கு தாக்கியதற்கான காரணம் என்ன? எதற்காக ? என்பதை சப் இன்ஸ்பெக்டர்  விசாகன் கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே ’நிழல்’ படத்தின் கதை. ரம்யா , சரண்யா கதாபாத்திரத்தில்  முதல் முறையாக இரட்டை வேடங்களில்  நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி இரண்டிலும் வேறுபட்ட நடப...

ஹபீபிMovie’ - விமர்சனம் #habeebi 4/5தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, படைப்பு.

Image
’ஹபீபி’ - விமர்சனம் ஹபீபி #habeebi 4/5 தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, படைப்பு.  இஸ்லாமிய குடும்ப வாழ்க்கைஎந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. படம் பார்ப்பவர்  பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. 1980 ஆம் காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா நெசவுத் தொழில் செய்கிறார் இவருடன் இவரது தம்பியும் இதே வேலை செய்து வருகிறார். கூட்டு குடும்பமாக வாழும் இவர்களின் குடும்பத்திற்கான பொருளாதார தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனையடுத்து கஸ்தூரிராஜா தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். கஸ்துரிராஜாவின் மகன் ஈஷா, தன்னுடன் படிக்கும் மாணவி மாளவிகாவை காதலிக்கிறார். ஒரு நாள் இரவு மாளவிகாவை  பார்ப்பதற்காக ஈசா அவரது  வீட்டிற்கு செல்ல ஊர் மக்கள் பிடித்து  பஞ்சாயத்தில் நிற்க வைக்கிறார்கள். இறுதியில் ஈஷா, மாளவிகா காதல் கைக் கூடியதா ? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றாரா ?  இல்லையா ?  என்பதே படத்தின் கதை. முகமது யூசுப் என்கிற கதாபாத்திரத்தில் நட...