லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – விமர்சனம்
‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – விமர்சனம் சென்னையில் அருவி மதன் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியான கன்யா பாரதி தூக்கு தண்டனை வழங்க இருக்கும் நிலையில் என்னவோ ஒன்று அவரை தீர்ப்பு எழுத விடாமல் தடுக்க இந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பை மறுநாளைக்கு ஒத்தி வைக்கிறார். இந்நிலையில் நீதிபதி கன்யா தூக்கு தண்டனை கைதியான வெற்றியின் சுயசரிதை புத்தகத்தை படிக்க தொடங்குகிறார். 1972 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் வசிக்கும் லிசி ஆண்டனி தனது மகனான வெற்றியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இவரது கணவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு பொழுதை கழித்து வருகிறார். வெற்றி படித்த படிப்பிற்கான அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இதே சமயம் வட்டிக்கு பணம் கொடுக்கும் கவிதா பாரதி வட்டியை செலுத்தாததால் கேவலமாக பேசுகிறார். இதனையடுத்து வெற்றி நண்பரான மாறனிடம் உதவி கேட்ட திருட்டு வேலை செய்யும் மாறன் வெற்றிக்கு உதவி செய்கிறார். வீட்டிற்கு தெரியாமல் வெற்றி சிறு சிறு திருட்டுகளை செய்து வருகிறார்....