கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்*
*கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்* • பிரபல திரைப்பட நட்சத்திரம் 'இளைய திலகம்' திரு. பிரபு கணேசன் மற்றும் பிரபல நடிகை செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோர் ஜூலை 12-ம் தேதி புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கின்றனர். சென்னை, 10 ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் நம்பகமான நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையின் அசோக் நகர், அண்ணா மெயின் ரோடு (அசோக் பில்லர் ரோடு) (Ashok Pillar Road, Anna Main Road, Ashok Nagar) என்ற முகவரியில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய விற்பனை நிலையம் வருகிற ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குத் திரைப்பட நட்சத்திரங்கள் திரு. பிரபு கணேசன் மற்றும் செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியச் சந்தைகளில் ஏற்கனவே வலுவான விற்பனை செயல்பாடுகளைக் கொண்டுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு, இந்த புதிய வி...