கான் சிட்டி ’ - விமர்சனம்
கான் சிட்டி ’ - விமர்சனம் சென்னை , மங்களபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் நாயகன் அர்ஜுன் தாஸ் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்க அதை திருப்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் மின்சாரத்திற்கு பணம் செலுத்த வருபர்களிடம் போலியான ரசீதியை கொடுத்து மோசடி செய்கிறார். மறுபுறம் லீசுக்கு வீட்டை எடுக்கும் கர்ப்பிணியான அன்னா பென் சில நாட்களிலேயே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து இதை போலவே பலரிடம் லீஸ் மற்றும் வாடகைக்கு வீட்டை விடுவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்கிறார். இதே சமயம் வடிவுக்கரசியின் மகனான யோகிபாபு அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் தேவைப்பட பலரிடம் கேட்டும் யாரும் பணம் கொடுக்க முன் வராததால் டிரஸ்ட் ஒன்றை நடத்துவதாக கூறி பல லட்ச ரூபாயை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள். இதனையடுத்து அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் மோசடி செய்து சேர்த்து வைத்த பணத்தை அர்ஜுன் தாஸிடம் கொடுக்கிறார்கள். அர்ஜுன் தாஸின் நண்பருக்கு அவசர தேவை என்பதற...