Posts

G5MEDIA

Boonie Bears: The Hidden Protector Movie Review

Image
சீன அனிமேஷன் உலகில் குழந்தைகளையும் குடும்ப ர சிகர்களையும் கவர்ந்திருக்கும் Boonie Bears பிராஞ்சைஸின் புதிய படைப்பு தான் “Boonie Bears: The Hidden Protector.” பிரையர், பிராம்பிள், விக் என்ற மூவரும் மாய உலகம், அதிசய சக்திகள், மனிதர்கள் மற்றும் அமரர்களின் உலகம் என இரு பரிமாணங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு ஒரு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதே இந்த படத்தின் மையம். குடும்பங்களுக்கான fantasy-comedy adventure ஆக வந்திருக்கும் இந்த படம், கண்ணுக்கு விருந்து கொடுக்கும் animation-ஐ மையமாக வைத்து நகர்கிறது. பிரையர், பிராம்பிள், விக் ஆகிய நண்பர்கள் எதிர்பாராத விதமாக புராணங்களில் வரும் Year Monster “Nian”-இன் மாய சக்திகளைப் பெறுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் Eve City எனப்படும் மந்திர உலகிற்குள் இழுக்கப்படுகிறார்கள். அந்த நகரம் சாதாரண இடமல்ல — மனிதர்களும், அமரர்களும், மர்ம சக்திகளும் இணைந்து வாழும் விசித்திரமான உலகம். ஆனால் அந்த உலகமே ஒரு பழமையான அச்சுறுத்தலால் சிதைவின் விளிம்பில் நிற்கிறது. இந்த அபாயத்திலிருந்து மனித உலகையும், அமரர் உலகையும் காப்பாற்ற இந்த மூவரும் எதிர்பாராத ஹீரோக்களாக மா...

கொடூரா"(கொன்னா பாவம் தின்னா தீரும்)

Image
"கொடூரா" (கொன்னா பாவம் தின்னா தீரும்) மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும், அம்மனிதனை நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக் கருத்தைக் கொண்டு உருவாகி வரும் படம் கொடூரா. யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வா வரலாம் வா, ஃபயர் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த  பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக  நடிக்க நிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.  வில்லனாக இலியாஸ் நடிக்க  வாழை ஜானகி அம்மாள், பேபி தீக்ஷிதா சந்தோஷ் குமார், தாய்க்கிழவி புகழ் முத்துக்குமார், பிக்பாஸ் அரோரா, டி.எம் கார்த்திக், திருக்குறளி மற்றும் டாக்டர்.திவாகர் ஆகியோர் நடிக்கின்றனர் ஒளிப்பதிவு -  விஜய் வெங்கட் இசை- சௌகத் அலி,  பாடல்கள் - வ.கருப்பன் ஸ்டண்ட்- ஸ்பீடு மோகன் தயாரிப்பு ஒருங்கிணைப்பு - தஷிகிரண் தயாரிப்பு நிர்வாகம் -  வம்சி கிருஷ்ணா மக்கள் தொடர்பு- வெங்கட் இணை இயக்கம்- மே.வா அருண்மொழி பாண்டியன் தயாரிப்பு -யாஸ் எண்டர்டைன்மென்ட் கதை திரைக்கதை  வசனம் இயக்கம் - ஆர்.சார்லஸ் ஆனந்...

மனு சினிமா விமர்சனம் : 3/5 ⭐⭐⭐☆☆

Image
மனு சினிமா விமர்சனம் காலங்காலமாய் காதலர்களைத் துரத்துகிற பிரச்சனைகளும் அதை சமாளிக்கும் போராட்டங்களுமாய் மெனி டைம்ஸ் பார்த்துப் பழகிய கதையம்சத்தில் 'மெனு.' எளிய குடும்பத்து இளைஞனும் 150 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிற குடும்பத்து வாரிசும் காதலிக்கிறார்கள். அந்த வாரிசின் அப்பா பவர்ஃபுல்லானவர்; சாதிப் பாகுபாடு, அந்தஸ்து என எல்லாமும் பார்ப்பவர். கதை இப்படி தொடங்க, காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற, அப்பா வெறியேற என வழக்கமான ரூட்டிலேயே பயணிக்கிறது திரைக்கதை... ஆணவக் கொலைகளில் ஈடுபட்டவர்களை குற்றவுணர்ச்சி எந்தளவுக்கு வாட்டி வதைக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருப்பது கதையோட்டத்தின் கனமான அத்தியாயம். ஹீரோவை நடிகர் விஜய் பெயரில் மன்றம் நடத்தி ஊருக்கு நல்லது செய்கிறவராக காட்டியிருப்பதை பாராட்ட வேண்டும். ஹீரோவாக வருகிற ஸ்ரீயூத்துக்கு காதல் உணர்வை, கோபத்தை, இயலாமையை என உணர்வுகளை வெளிப்படுத்தவும், நடனமாடவும், ஆக்சன் காட்சியில் சீறிப் பாயவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாவற்றையும் பரவாயில்லை என்கிற அளவில் செய்திருக்கிறார். ஹீரோவை சிரித்த முக...

பாலன் - தி பாய்' - விமர்சனம்

Image
'பாலன் - தி பாய்' - விமர்சனம் கணவனை இழந்த ஃபர்ஸானா சிறையில் தனது  5 வயது மகனுடன் வசித்து வருகிறார்.  பல வருடங்கள் கழித்து தன் மகனுடன் சிறையில் இருந்து வெளியே வரும் ஃபர்ஸானா யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து பல இடங்களில்  வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெரிய வீட்டில் தனிமையில் இருக்கும் வயதான பாட்டி  ஒருவரை பார்த்து கொள்வதற்காக  அங்கு தனது  மகனுடன் செல்கிறார். அங்கிருக்கும் பள்ளியில் மகனை சேர்த்து விடுகிறார்.  ஒரு நாள் பாட்டிக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டு பாட்டி இறந்து விட அவரை அங்கிருக்கும் தோட்டத்தில் அடக்கம் செய்து விடுகிறார். பள்ளி முடிந்து வரும் மகனை எப்போதும் அழைத்து வரும் ஃபர்ஸானா, மகனிடம்  எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும்வரை காத்திருக்க வேண்டும் கூறுகிறார். இதே சமயம் பாட்டியின் மகன் அன்று மாலை அவரை பார்க்க வருவதாக தொலை பேசியில் கூறுகிறார். இதனால் மகனை அழைத்து வர முடியாத சூழ்நிலை ஃபர்ஸானா ஏற்படுகிறது.  பல மணிநேரம் காத்திருக்கும் சிறுவனை போலீஸ் மீட்டுக் கொண்டு போய்  சிற...

எங்கள் தங்கம்’ - விமர்சனம்

Image
‘எங்கள் தங்கம்’ - விமர்சனம் ஆதரவற்ற இல்லத்தில் வளர்த்து வரும் சமந்தா, கௌதமி, ஆனந்த் தம்பதிகளின் மூத்த மகனான திகந்த் மஞ்சாலேவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 3 வருடங்களுக்குப் பிறகு கணவரின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார். பாரம்பரிய மிக்க அவரது குடும்பத்தில்  இருக்கும் உறுப்பினர்கள்  அனைவரின் அன்பை பெறுவதற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்  கொள்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா அடியாள் ஒருவனை அனுப்பி சமந்தா குறித்து விசாரித்து வர சொல்கிறார்.   விசாரிக்க சென்றவன் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறான், இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிக்கும் குல்ஷன் சமந்தாவை நேரில் சந்தித்து தன்னுடன் வந்துவிடு இல்லாவிட்டால் உனது குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று கூறுகிறான். இறுதியில் சமந்தா தான் யார் ? என்ற உண்மையை குடும்பத்தில் கூறினாரா? இல்லையா? குடும்பத்தை காப்பாற்ற சமந்தா எடுத்த முடிவு என்ன?  கணவரின் தங்கை திருமணம் நடந்ததா ? இல்லையா ?  என்பதே  ‘எங்கள் தங்கம்’ . படத்தின் ...

#நூறுசாமி 3.5/5தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளுவார் செல்வியாக நடித்த ஸ்வாசிகா.

Image
‘‘நூறு சாமி’ ’ - விமர்சனம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஸ்வாசிகா, கணவரை இழந்தவர்  தனது இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். மறுமணம் செய்ய ஆசைப்படும் ஸ்வாசிகா, தனது எண்ணத்தை  மூத்த  மகன் அஜய் திஷானிடம் கூற அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்று விடுகிறார். சில வருடம் கடந்த நிலையில் தன் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான், அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அவரது முடிவுக்கு அவரது இளைய சகோதரரும் ஆதரவு தெரிவிக்க, இரண்டு  மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க  நினைக்கிறார்கள். இதற்கு சொந்தமும், ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அண்ணன் கருணாஸ் தங்கை ஸ்வாசிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார். இறுதியில்  கருணாஸிடம் இருந்து ஸ்வாசிகா உயிர் பிழைத்தாரா ? இல்லையா?  மகன்கள் ஊர் எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா?  என்பதே ‘நூறு சாமி’ ’ படத்தின் கதை. செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திர...

டபுள் ஆக்குபென்சி’ - விமர்சன

Image
‘டபுள் ஆக்குபென்சி’  - விமர்சனம் போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். கடவுளின் அருளால் இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை  இறந்து  விடுகிறது. இதனையடுத்து  போஸ் வெங்கட் கடவுளிடம் மனம் உருகி வேண்ட கடவுளின் அருளால் மீண்டும் அந்த குழந்தைக்கு உயிர் கிடைக்கிறது.  ஆனால் உயிர் பெற்ற குழந்தை பெண்ணாக இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அரிய சக்தி அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. ஒரு உடலில்  இரண்டு  குணாதிசயம் கொண்ட உயிர்கள்  வாழ்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில்  வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத்  கிஷனை காதலிக்கிறார். மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயக...