Posts

G5MEDIA

கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்*

Image
*கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னை அசோக் நகரில் பிரம்மாண்டமான புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குகிறது! சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்த திட்டம்*   • பிரபல திரைப்பட நட்சத்திரம் 'இளைய திலகம்' திரு. பிரபு கணேசன் மற்றும் பிரபல நடிகை செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோர் ஜூலை 12-ம் தேதி புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கின்றனர்.   சென்னை, 10 ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் நம்பகமான நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையின் அசோக் நகர், அண்ணா மெயின் ரோடு (அசோக் பில்லர் ரோடு) (Ashok Pillar Road, Anna Main Road, Ashok Nagar) என்ற முகவரியில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய விற்பனை நிலையம் வருகிற ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குத் திரைப்பட நட்சத்திரங்கள் திரு. பிரபு கணேசன் மற்றும் செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியச் சந்தைகளில் ஏற்கனவே வலுவான விற்பனை செயல்பாடுகளைக் கொண்டுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு, இந்த புதிய வி...

ராவ் பகதூர்' ; விமர்சனம்*

Image
*'ராவ் பகதூர்' ; விமர்சனம்* 'ராவ் பகதூர்' திரைப்படம் 1968 முதல் 1991 வரையிலான காலகட்டத்திற்கு இடைப்பட்ட கதையை மையமாகக் கொண்டது. படத்தின் நாயகன் புவனம் ராமப்பா ராவ் பகதூர் (சத்யதேவ்), ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்லீரல் புற்றுநோய் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, தனது இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவரது இரண்டாவது மகன் குசுமப்பாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ரேணுகா கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு அறைக்குள் தன்னைத் தானே பூட்டிக்கொண்டிருக்கிறார். துக்கத்தாலும், மதுப்பழக்கத்தாலும் நிஜ உலகத்துடனான தொடர்பை இழந்த ராமப்பா, தனது குற்ற உணர்ச்சியிலிருந்தும், கடந்த கால நினைவுகளிலிருந்தும் எப்படி வெளிவருகிறார் என்பதே படத்தின் மையக்கரு. நாயகன் சத்யதேவ் தனது அபாரமான நடிப்பால் ஒட்டுமொத்தப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். ராமப்பா கதாபாத்திரத்தில் பல்வேறு வயது தோற்றங்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவர் தனித்துவமாகத் திகழ்கிறார். அவரது நடிப்பு, படத்தின் எதார்த்தமான தன்மைக்கு வலுசேர்க்கிறது. ...

நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு*

Image
*நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு* டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஓ! சுகுமாரி' - திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் - காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். 'ஓ! சுகுமாரி ' படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், 'தாமினி' என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் த...

டார்க்’ - விமர்சனம்#Dark Movie– (3.5/5)வழக்கமான த்ரில்லர் பாதையில் செல்லாமல், சைக்கலாஜிக்கல் சஸ்பென்ஸ் மற்றும் டார்க் டோனை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம்.

Image
’டார்க்’  - விமர்சனம் சென்னையில் கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 3  இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தீ வைத்து தற்கொலை செய்துக் கொள்கிறார்.  இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் வாடகைக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த வீடு குறித்து உண்மை தெரிந்ததும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வரும் நாயகன் அஜய் கார்த்திக் வந்த சில நாட்களிலேயே சில அமானுஷ்ய விஷங்கள் நடக்க அதில் உறைந்து போகிறார். ஒருநாள் அஜய் கார்த்திக்குடன் இரவு தங்கும் உரிமையாளரான பாக்யராஜ் மறுநாள் மர்மமான முறையில் இறந்துக் கிடக்கிறார். அதே இடத்திலேயே நாயகன் அஜய் கார்த்திக்கும் கொடூரமான காயங்களுடன் இறந்து கிடக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, iஇது குறித்து  விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும்  மயங்கி விழுகிறார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கையில் ...

‘கட்டா குஸ்தி  2’ Movie Rating 4./5#கமர்ஷியல் எண்டர்டெயினர். குடும்பம், குழந்தைகள், நண்பர்களுடன் பார்த்து மகிழலாம்

Image
‘கட்டா குஸ்தி  2’  - விமர்சனம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற  ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.  நாயகன் விஷ்ணு விஷால், மனைவி  ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பெண் குழந்தை சாராவுடன் கோவையில் வசித்து வருகிறார்.   வீட்டை பராமரிப்பது , மகளை பார்த்துக் கொள்வது மனைவியை மல்யுத்த போட்டியியில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அனைத்து  உதவிகளையும்  விஷ்ணு விஷால் செய்து வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அமைச்சர் கையால் பதக்கத்தை பெறுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி, இதை பார்த்து கோபம் கொள்ளும் பயிற்சியாளர் ஐஸ்வர்யாவை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி, தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது, பெண் குழந்தை ஒழுங்காக படிக்காததால் கணவன் – மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பயிற்சியாளர்  ஐஸ்வர்யாவிற்கு மன சோர்வு போக சில மருந்துகளை மருத்துவரிடம் வாங்கி ...

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு

Image
சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட்  இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு   இத்திரைப்படத்தின் அறிமுக நாயகன் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ  நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு  இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செளவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது    கல்வியில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது தமிழ் திரைப்படத்தில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒ ளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க படத்தொகுப்பு r.k. செல்வன்  இத்திரைப்படம் போஸ் ப்ரோடுக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் விரைவில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்  ஆறுமுகம் மாணிக்கம் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சேகரன் இசை வெளியீட்டு விழா தேதியை விரைவில் அறிவிக்கப்படும்  என்று தெரிவித்தனர்.  ...

அனந்தன் காடு’ - விமர்சனம்

Image
‘அனந்தன் காடு’  - விமர்சனம் 1989-ல் நடக்கும் கதை தமிழீழ போராளியான  ஆர்யா இலங்கை படையினரால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அதன் பிறகு கேரளா வருகிறார். அம்மாநில முதலமைச்சர் தனக்கு எதிராக செல்படுபவர்களை சிறிய கூலிப்படை  கும்பலை வைத்து கொலை செய்கிறார்.  அந்த கும்பலில் ஆர்யா போய் சேர்கிறார். அந்தக் கூலிப்படைக்கு முதலமைச்சருக்கு  இன்னொரு வரை கொலை செய்யும் வேலையைக்  கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார்.   ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன்னை பற்றி அனைவருக்கு  தெரிய வரும் என்று எண்ணும் முதல்வர் ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்.  இறுதியில் ரவுடி கூட்டத்தை என்கவுண்டரில்  இருந்து ஆர்யா காப்பாற்றினாரா? இல்லையா? முதல்வரின் உண்மையான முகம் வெளியே தெரிந்ததா ? இல்லையா?  என்பதே  ‘அனந்தன் காடு’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா துடிப்பு மிக்க இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.   ஆக்‌ஷன் , செண்ட...