’போட்டோகிராபர்’ - விமர்சனம் #MovieReview
’போட்டோகிராபர்’ - விமர்சனம் தொழிலதிபரான ஆடுகளம் நரேன், தனது நிறுவனத்தை மகன் அஷ்ரஃப் நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், புகைப்படக் கலையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அஷ்ரஃப், அதற்காக சிறிது கால அவகாசம் கேட்டுவிட்டு தனது இலக்கை நோக்கி பயணிக்கிறார். வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அஷ்ரஃப், சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்துபவர். எப்போதும் சானிடைசரை உடன் வைத்திருக்கும் அவரது இந்த பழக்கத்திற்கு, சிறுவயதில் தாயைப் பிரிந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவமே காரணமாக உள்ளது. நண்பன் கருணாகரன் மூலம் மதிகெட்டான் சோலை அருகிலுள்ள மர்மமான அடர்ந்த காட்டைப் பற்றி அறியும் அஷ்ரஃப், அங்குள்ள அரிய மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால், அந்தக் காட்டிற்குள் சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்த கருணாகரன், அவரைத் தடுக்க முயற்சிக்கிறார். இருப்பினும், தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அஷ்ரஃப் காட்டுக்குச் செல்ல முடிவு செய்கிறார். அஷ்ரஃப், வனக்காவலரையும் மீறி அந்த மர...