காட்டாளன்’ - விமர்சனம்
’காட்டாளன்’ - விமர்சனம் கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கொல்லி என்ற மலைக் கிராமத்தில் யானை கூட்டங்களால் அப்பாவி மக்கள் அடித்துக் கொலை செய்யப்படுகிறார்கள்.இதனையடுத்து யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் சுனிலிடம் ஊர் மக்கள் உதவி கேட்கிறார்கள். காட்டு யானைகளை கொன்று தந்தம் எடுத்துக்கொள்ளும் சுனில் அந்த மக்களை அடிமைப்படுத்துவதோடு பெண் களையும் சிறுமிகளையும் தூக்கிச் சென்று சீரழிகிறான். இதே சமயம் சுனில் இடத்தை பிடிக்க நினைக்கும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை உயர் அதிகாரி உதவியுடன் கைப்பற்றுகிறார். இந்நிலையில் பறிக்கப்பட்ட தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களத்தில் இறக்குகிறார். காவல்துறை உயர் அதிகாரியை ஏமாற்றி இழந்த தந்தத்தை மீட்டெடுப்பதோடு சுனில் மனதில் ஆண்டனி வர்கீர் தனி இடம் பிடிக்கிறார். இதற்கிடையே பழங்குடி சிறுமிக்கு விபத்து ஏற்பட அவரை காப்பாற்ற பல லட்சம் தேவைப்படுகிறது. ஆண்டனி வர்கீர் சுனிலிடம் பணம் கேட்க அதை கொடுக்க மறுக்கிறார். இதையடுத்து பணத்திற்காக காட்டு யானை...