டபுள் ஆக்குபென்சி’ - விமர்சன
‘டபுள் ஆக்குபென்சி’ - விமர்சனம் போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். கடவுளின் அருளால் இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை இறந்து விடுகிறது. இதனையடுத்து போஸ் வெங்கட் கடவுளிடம் மனம் உருகி வேண்ட கடவுளின் அருளால் மீண்டும் அந்த குழந்தைக்கு உயிர் கிடைக்கிறது. ஆனால் உயிர் பெற்ற குழந்தை பெண்ணாக இருக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அரிய சக்தி அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. ஒரு உடலில் இரண்டு குணாதிசயம் கொண்ட உயிர்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத் கிஷனை காதலிக்கிறார். மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயக...