பாலன் - தி பாய்' - விமர்சனம்
'பாலன் - தி பாய்' - விமர்சனம் கணவனை இழந்த ஃபர்ஸானா சிறையில் தனது 5 வயது மகனுடன் வசித்து வருகிறார். பல வருடங்கள் கழித்து தன் மகனுடன் சிறையில் இருந்து வெளியே வரும் ஃபர்ஸானா யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து பல இடங்களில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெரிய வீட்டில் தனிமையில் இருக்கும் வயதான பாட்டி ஒருவரை பார்த்து கொள்வதற்காக அங்கு தனது மகனுடன் செல்கிறார். அங்கிருக்கும் பள்ளியில் மகனை சேர்த்து விடுகிறார். ஒரு நாள் பாட்டிக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டு பாட்டி இறந்து விட அவரை அங்கிருக்கும் தோட்டத்தில் அடக்கம் செய்து விடுகிறார். பள்ளி முடிந்து வரும் மகனை எப்போதும் அழைத்து வரும் ஃபர்ஸானா, மகனிடம் எவ்வளவு நேரம் ஆனாலும் தான் வரும்வரை காத்திருக்க வேண்டும் கூறுகிறார். இதே சமயம் பாட்டியின் மகன் அன்று மாலை அவரை பார்க்க வருவதாக தொலை பேசியில் கூறுகிறார். இதனால் மகனை அழைத்து வர முடியாத சூழ்நிலை ஃபர்ஸானா ஏற்படுகிறது. பல மணிநேரம் காத்திருக்கும் சிறுவனை போலீஸ் மீட்டுக் கொண்டு போய் சிற...