கருப்பு ’ - விமர்சனம்
‘கருப்பு ’ - விமர்சனம் ஏழு கிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர் ஆர் ஜே பாலாஜி . அந்த நீதி மன்றத்தின் நீதிபதி நட்டிக்கு லஞ்சம் கொடுத்து எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்று அந்த நீதி மன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். இதே சமயம் கேரளாவில் இருந்து இந்திரன்ஸ் தனது மகளின் ஆபரேஷனுக்காக சென்னை வருகிறார். வந்த இடத்தில் இவர்களுடைய நகையை திருடர்கள் கொள்ளையடித்து செல்ல, பிறகு அதனை போலீஸ் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். ஆனால், 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திருப்பி கொடுக்க முன் வர மேலும், இந்த நகையை நீதிமன்றத்தின் மூலமாக பெற்றுக் கொள்ள சொல்லுகிறார்கள். இந்த வழக்கை ஆர்.ஜே. பாலாஜி எடுத்து நடத்த சாதாரணமாக முடிய வேண்டிய வழக்கை பணத்திற்காக இந்த வழக்கு 4 மாதங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டே போக ஒரு கட்டத்தில் பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என இந்திரன்ஸ் தெரிந்து கொள்கிறார். இதன்பின் இந்திரனை அடித்து இனி இந்த வழக்கை நீ எப்படி நடத்துறாய் என்று பார்க்கிறேன் என பாலாஜி ச...