Posts

G5MEDIA

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியீடு*

Image
*சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியீடு* *சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை  வழங்க உறுதியளிக்கிறார்* சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் - ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள...

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!*

Image
*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம்,  ஏப்ரல் 3 வெளியாகிறது!* ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) (Love Insurance Kompany)– ஏப்ரல் 3 உலகளவில் வெளியாகிறது ! தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள்  மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியீட்டு அறிவிப்பு,  திரை ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில்...

திவ்யா திரைவிமர்சனம்

Image
திவ்யா திரைவிமர்சனம் RJP இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்து இயக்கி வெளியாகியுள்ள படம் திவ்யா. இவருடன் கதாநாயகியாக கேத்தி, மற்றும் செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி, சபி, ஜிவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  கதை  கதாநாயகன் RJP தனது நண்பர்களுடன் கல்லலூரியில் அடாவடித்தனம் செய்துகொண்டு படித்து வருகிறார்கள். அதே கல்லூரிக்கு கதநாயகி கேத்தா வந்து சேர முதல் சந்திப்பிலேயே அவரை ராக்கிங் செய்ய  மோதல் உருவாகிறது. பின்  இருவருக்கும் காதல் உருவாகிறது. இவர்கள் சேர ஜாதி தடையாக இருக்கிறது. கதாநாயகி அப்பாவுக்கு இவர்கள் காதல் தெரிய வர மகளுக்கு சொந்தத்தில் நிச்சயம் செய்கிறார். பின் காதலர்கள் ஊரைவிட்டு ஓட முயல வில்லன் செந்தில் அவர்களை கண்டுபிடித்து தாக்க  போலிஸ் அவர்களை அழைத்து வந்து ஸ்டேஷனில் விசாரிக்க அதன் பிறகு அவர்கள் காதல் நிறைவேறியதா? முடிவு என்ன என்பதே படத்தின் கதை.  கதாநாயகனாக RJP சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாகியாக கேத்தி தன் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகன் நண்பர்களாக சபி, ஜிவி, தாத்தாவாக பவுன்ராஜ், கேத்தி அ...

போலீஸ் ஃபேமிலி’ - விமர்சனம்

Image
‘போலீஸ் ஃபேமிலி’  -  விமர்சனம் சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் சரவணன் தனது  மகனுக்காக ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை மதுரையில் வாழ்த்து வருகிறார்.  இதற்கிடையில் ஒருநாள் இரவில் இரு சக்கர வாகனத்தில் வரும் வாலிபரை கஞ்சா  கடத்தியதாக போலீஸ் கைது செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அந்த இளைஞரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் கடுமையாக தாக்குகிறார்கள்.  மயக்க நிலையில் இருக்கும் இளைஞரை ஊருக்கு  வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டுவிடுகிறார்கள்.  மறுநாள் அந்த இளைஞர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாகவும்   அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது அப்பா சரவணனுக்கு தெரிய  வருகிறது.  தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க நினைக்கும் சரவணன், சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார்.  ஒவ்வொரு போலீஸ் குடும்ப உறுப்பினரை கொலை செய்யும் சரவணன் கடைசியாக  ப...

வெஞ்சென்ஸ்’ - விமர்சனம்

Image
‘வெஞ்சென்ஸ்’  -  விமர்சனம் காளி வெங்கட் வளர்ப்பு மகளான அபர்ணதி  பள்ளிக்கூடத்தில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என்று அப்பாவிடம் கூறுகிறார்.  அதற்கு படித்து மாவட்ட அளவில் முதல் இடத்திற்கு வந்தால் அனைவரும் உன்னை புகழ்ந்து பேசுவார்கள் என்று  அப்பா கூறுகிறார். இதனையடுத்து நன்றாக படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால்,  அந்த மகிழ்ச்சி மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால் மீண்டும் புகழ் போதைக்கு அடிமையாகிறாள்.  ஒரு கட்டத்தில் தனது உண்மையான தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் அபர்ணதி  வளர்ப்பு தந்தை காளி வெங்கட்டை கொலை செய்து அவரது  உடல் உறுப்புகளை தானம் செ ய்து பிரபலம் ஆகிறாள். ஒரு கட்டத்தில் மாவட்ட கலெக்டராகும் அபர்ணதிக்கு முதலமைச்சர் இளவரசு மூலம் பல தடைகள் வருகிறது. ஆனால் அந்த தடைகளை முறியடிக்கும் அபர்ணதி முதலமைச்சர் இளவரசுவே அவர்  பேச்சை கேட்கும் நிலைக்கு உயர்கிறார்.  இவரது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாத எதிரிகள் அபர்ணதியை கொலை செய்ய நினைக்க அதில் அபர்ணதி மகளுக்கு மிகப்பெ...

கொலைச்சேவல்’ - விமர்சனம்

Image
’கொலைச்சேவல்’  - விமர்சனம் கைபேசி மூலம் பேசி பழகும் தீபா - கலையரசன் இருவரும் காதலிக்கிறார்கள். பெற்றோர்களின் எதிரிப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை  நாயகி தீபா பாலு, திருமணம் செய்து கொள்கிறார். அந்த ஊர் வழக்கப்படி  கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பது வழக்கமான ஒன்றாகும். இதனையடுத்து குலதெய்வம் நிறைசூலிக்கு  பொங்கல் வைத்து வழிபாடு செய்வதற்காக கலையரசன் குடும்பம் கோவிலுக்கு செல்கிறார்கள். பிறகு கலையரசன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி தீபாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்ல வழியில் பல தடைகள் வருகிறது. தடைகளை கடந்து இருவரும் கோவிலுக்கு சென்று சேர்கிறார்கள். பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும் தீபாவையும்  கலையரசனும் புறப்பட தயாராகிறார்கள். அப்போது ஒரு கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்கிறது. இறுதியில் இந்த தாக்குதலில் கலையரசன் , தீபா இருவரும் உயிர் பிழைத்தார்களா? இல்லையா? இவர்களை கொலை செய்ய நினைப்பது யார்?  எதற்காக ?  எ...

கெணத்த காணோம்’ - விமர்சனம்

Image
‘கெணத்த காணோம்’  -  விமர்சனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறர்கள் . நாயகன் யோகி பாபு கோவில் பூசாரியாகவும் சிற்பங்கள் செய்பவராக இருக்கிறார்.  ஊரில் மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.   தண்ணீர் பிரச்சினையால் நாயகி லவ்லின் சந்திரசேகரை அவரது அப்பா யோகிபாபுவுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்.  இந்நிலையில் ஊர் தலைவர் மக்களுடன் சென்று கலெக்டரிடம் தண்ணீர் வேண்டி மனு கொடுக்கிறார்.  ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இதையடுத்து  ஊர் மக்கள் சேர்ந்து நிலத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஒருவரை அழைத்து வருகிறார்கள். வந்தவர் யோகிபாபு இடததில் தண்ணீர் வருவதாக கண்டுபிடித்து கிணறு தோண்டுகின்றனர். அந்த கிணறில் டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.  இதையடுத்து அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தொல்லியல் துறை அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வத...