Posts

G5MEDIA

அருள்வான் ’ - விமர்சனம் Arulvaan : 3.5/5

Image
‘அருள்வான் ’  - விமர்சனம் பூங்குடி மலைவாழ் பகுதியில், ஆரவ் தனது மனைவி ரம்யா பாண்டியன் மற்றும் மகள் கிருத்திகாவுடன் வசித்து வருகிறார். மலை உச்சிகளில் இருந்து தேன் சேகரிப்பதே அவரது தொழில். அப்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வன அதிகாரி ஜான் விஜயின் நடவடிக்கைகளை ஆரவ் எதிர்ப்பதால், இருவருக்கும் மோதல் உருவாகிறது. மலைப்பகுதியில் கல்வி வசதி இல்லாததால், பள்ளிக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இருந்தாலும், தனது மகள் கிருத்திகாவை எப்படியாவது படிக்க வைப்பேன் என்று ஆரவ் உறுதி எடுக்கிறார். அங்கிருக்கும் பள்ளி ஆசிரியையைச் சந்திக்கும் கிருத்திகாவிடம், "உங்கள் கிராமத்திற்கு பள்ளி வர வேண்டுமெனில், ஊர் மக்கள் கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்" என்று கூறுகிறார். இதற்கிடையில், ஊர் தலைவராக இருக்கும் ஆரவின் மாமாவிடம் வெற்றுக் காகிதத்தில் கைரேகை வாங்கி, மலைவாழ் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் மனவேதனை அடைந்த மாமா, தனது கட்டைவிரலை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். ...

இந்தியாவிலேயே முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள முழுநீள திரைப்படம் "அவிரா "

Image
இந்தியாவிலேயே முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் உருவாகியுள்ள முழுநீள திரைப்படம்  "அவிரா "   முழுக்க முழுக்க AI தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அவிரா "  வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது.   அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி  உருவாகி வரும் முழு நீள திரைப்படம் " அவிரா "  சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை  இயக்கிய பிரபாகரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது.  முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என...

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில்

Image
‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில் ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில் ஷிவானி ஸ்டுடியோஸின் புதிய பொழுதுபோக்கு படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில் கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பி...

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம். மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்று

Image
பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம். மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆ ண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின் நிர்வாகத்தை முன்னெடுத்துவரும் நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் குழந்தைகளுக்கான ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மூளைடானிக்கையை மாண்புமிகு அமைச்சர் வெங்கட்டரமணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் . இந்த அறிமுக விழா கு ழந்தைகளின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல். கவனம் செலுத்தும் திறன். மற்றும் அறிவாற்றல், ஆயுர்வேத கோட்பாடுகளின் அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஸ்வர்ண பிராசன மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது .இந்த நிகழ்வில் பேசிய ஆர்யன் ஷாம் தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தாலும். உண்மையான ஆயுர்வேத மருத்துவ சேவையை ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் எளிதில் சென்றடைய செய்வதே எங்கள் நோக்கம் என்றார். தற்போது தயாராகி வரும் ஆர்யன் ஷாம் சுபாஷ் என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந் ...

உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய அளவிலான உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்

Image
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசிய அளவிலான உயர் துல்லிய லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ்   சென்னை:   உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை (ஜூலை 15) முன்னிட்டு, தேசிய அளவிலான உயர் துல்லிய (High Definition) லைப்போசக்ஷன் மாஸ்டர்கிளாஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஸ்பெக்ட்ரா மெடிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அரங்கில் நடைபெற்றது.   இந்த அறிவியல் கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Aesthetic Plastic Surgery), உயர் துல்லிய லைப்போசக்ஷன் (High Definition Liposuction), உடல் வடிவமைப்பு (Body Contouring), 4D Body Sculpting, தோல் இறுக்கம் (Skin Tightening) உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் குறித்து கலந்துரையாடினர்.   நிகழ்ச்சிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜே. எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை ராய் காஸ்மெட்டிக் சென்டரின் நிறுவனர் ...

ஐ , நோபடி’ (I,Nobody) - விமர்சனம்

Image
’ஐ , நோபடி’ (I,Nobody)  -  விமர்சனம் வஞ்சியூரில் உள்ள ஒரு வங்கியில் மூன்று பேர் துணிகரமாக கொள்ளையடிக்கிறார்கள். அப்போது வங்கியில் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனை முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். பின்னர், ஒரு இடத்தில் அவரை இறக்கிவிடும் போது, கொள்ளையர்களில் ஒருவரின் முக்கியமான அடையாள அட்டை எதிர்பாராத விதமாக பிரித்விராஜின் கையில் சிக்குகிறது. இதே சமயம், எதிர்பாராத விதமாக நிகழும் விபத்தில் அந்த மூன்று கொள்ளையர்களும் உயிரிழக்கிறார்கள். பிரித்விராஜின் கையில் சிக்கிய அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டதால், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். இந்நிலையில் இந்த வங்கியில் பிரித்விராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் எந்த விதமான சேமிப்பு கணக்கு இல்லாமல் இருக்கிறது. பிரித்விராஜ் அங்கு நீண்ட நேரமாக இருந்தது  சந்தேகத்தை அதிகரிக்கிறது. இதனால், அந்த கொள்ளைச் சம்பவத்...

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – விமர்சனம்

Image
‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ – விமர்சனம் சென்னையில் அருவி மதன் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியான கன்யா பாரதி தூக்கு தண்டனை வழங்க இருக்கும்  நிலையில்  என்னவோ ஒன்று  அவரை தீர்ப்பு  எழுத விடாமல் தடுக்க இந்த வழக்கிற்கான  இறுதி தீர்ப்பை மறுநாளைக்கு ஒத்தி வைக்கிறார். இந்நிலையில் நீதிபதி கன்யா  தூக்கு தண்டனை கைதியான வெற்றியின் சுயசரிதை புத்தகத்தை படிக்க தொடங்குகிறார்.  1972 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் வசிக்கும் லிசி ஆண்டனி தனது  மகனான வெற்றியை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இவரது கணவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு பொழுதை கழித்து வருகிறார். வெற்றி படித்த படிப்பிற்கான அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இதே சமயம்  வட்டிக்கு பணம் கொடுக்கும் கவிதா பாரதி  வட்டியை செலுத்தாததால் கேவலமாக பேசுகிறார். இதனையடுத்து  வெற்றி நண்பரான மாறனிடம் உதவி கேட்ட திருட்டு வேலை செய்யும் மாறன் வெற்றிக்கு உதவி செய்கிறார். வீட்டிற்கு தெரியாமல் வெற்றி   சிறு சிறு திருட்டுகளை செய்து வருகிறார்....