Posts

G5MEDIA

சரிகமா லைவ் Saregama Live & Mercuri மெர்குரி இணைந்து, இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு !!*

Image
*சரிகமா லைவ்  Saregama Live & Mercuri மெர்குரி இணைந்து,  இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு !!* சரிகமா Saregama Live மற்றும் மெர்குரி Mercuri இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது. “Music for Healing - Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற பிரபலமான மேடைகளில் நடைபெற உள்ளன...

CSK-வுக்கான CUB-இன் கீதம் - பிரம்மாண்ட வெளியீடு

Image
CSK-வுக்கான CUB-இன் கீதம் - பிரம்மாண்ட வெளியீடு   சென்னை, ஏப்ரல் 2026 - இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (CUB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில், அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிடுவதை பெருமையுடன் அறிவிக்கிறது. CUB மற்றும் CSK ஆகிய இரு தரப்பினரும் கொண்டிருக்கும் உறுதிப்பாடு, கூட்டு முயற்சி மற்றும் பேரார்வம் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களை இந்தக் கீதம் பிரதிபலிக்கிறது. CUB நாடு முழுவதும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது; அதேபோன்று, CSK அணியும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ரசிகர்களைக் கொண்டுள்ளது. வெளியீட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்: வெளியீடு: CSK வீரர்கள்/நிர்வாகம், CUB தலைமை மற்றும் ரசிகர்கள் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்வில் இந்த கீதம் வெளியிடப்படும். கூட்டாண்மையைக் கொண்டாடுதல்: இந்த ஒத்துழைப்பு, ஒரு நம்பகமான கி ரெடிட் கார்டு கூட்டாளராக CUB-யின் பங்கையும், அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் அணியாக CSK-யின் அந்தஸ்தையும் எடுத்துக்காட்டுகிறது ரசிகர் ஈடுபாடு: இந்த கீதம் டிஜிட்டல் த...

மனிதன் தெய்வமாகலாம்’ - விமர்சனம்

Image
மனிதன் தெய்வமாகலாம்’  - விமர்சனம் சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்வயல் கிராமத்தில் வசிக்கும்  செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். செல்வராகவன்  - குஷி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பெரியவர் ஒருவர் எம் எல் ஏ   ஒய்.ஜி.மகேந்திரனிடம் மனு ஒன்றை கொடுக்கிறார். செல்வராகவன் தன்னை நம்பி திருமணம் செய்து கொண்ட  பெண்ணை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இப்படி இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. இதே சமயம் எம் எல் ஏ வின் மச்சான் மைம் கோபி தொழில் சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வேலை பார்க்கும் ஏழை பெண்களுக்கு பணத்தை வட்டிக்கு கொடுத்து அதை திருப்பி செலுத்தாத முடியாத பெண்களை கற்பழித்து விடுகிறார். இந்நிலையில் சாலை வசதி சரி இல்லாததால் செல்வராகவன் வீட்டின் அருகே இருக்கும் சிறுமி இறக்கிறார்.   இதனையடுத்து செல்வராகவன், பெரியவருடன் செ...

TN 2026’ Movie- விமர்சனம்அரசியல் நையாண்டி படம் தவறவிடாதீர்கள் Rating 4/5

Image
⁰‘TN 2026’  - விமர்சனம் அமைதிப்படை படத்திற்குப் பிறகு நல்ல அரசியல் நையாண்டி படம் நடிகர்களின் அரசியல் மற்றும் பதவி ஆசைக்குப் பின்னால்  கலகலப்பாக சொல்லி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா, வட மாநிலத்தை சேர்ந்த நட்டி நட்ராஜ்,  பிழைப்பை தேடி சென்னை வருகிறார் .அங்கு அறிமுகம் ஒரு இயக்குனர் மூலம்  முதல் பட வாய்ப்பு கிடைக்கிறது. அவரது முதல் படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுவதோடு மக்கள் மனதில் அடுத்த எம் ஜி ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார். பொள்ளாச்சியில் ஜமீன்தாராக இருக்கும் தம்பி ராமையா எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருக்கிறார் . வளர்ந்து வரும் நட்டியை அடுத்த எம் ஜி ஆர் ஆக பார்க்கும் தம்பி ராமையா அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை சினிமாவில் உச்ச நடிகராக கொண்டு வருகிறார் 200 கோடி ரூபாய் வருமானத்தில் உச்ச நடிகராக இருக்கும் நட்டியை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக புதிய கட்சி ஒன்றை  தம்பி ராமையா  தொடங்குகிறார். 2026 ஆம் ஆண்டு நட்டிதான் தமிழக முதல்வர் என்ற நம்பிக்கையை அவர் மனதில் ஏற்படுத்துகிறார். இதனையடுத்து ஆளும் கட்ச...

LIK) -Movie Review விமர்சனம்

Image
’ (LIK)  -Movie Review  விமர்சனம் 2040 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட எஸ் ஜே சூர்யா. இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற செயலியை உருவாக்குகிறார் இந்த செயலின் மூலம் பொருத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்யலாம். அவர் எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம். இந்த செயலி காதலர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மறுபக்கம் ஸ்மார்ட் போனால் தனது மகளை இழக்கும் சீமான் பசுமை உலகம் என்ற ஒரு இடத்தை உருவாக்குகிறார். இவரது மகன் பிரதீப் ரங்கநாதன் அப்பாவின் சொல்படி கேட்டு மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்கிறார்.  இங்கு மொபைல் போனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மொபைலுக்கு அடிமையான குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வகுப்புகளை நடத்துகிறார்கள். இந்நிலையில் நாயகி கீர்த்தி ஷெட்டி சிறு வயது முதலே ஸ்மார்ட் போன் வழிகாட்டுதலில் வளர்ந்து கொள்கிறார். சமூக ஊடகத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இந்நிலையில் கீர்த்தி ஷெட்டியை  ...

கார்மேனி செல்வம்’ - விமர்சனம்

Image
’கார்மேனி செல்வம்’  -  விமர்சனம் சென்னையில் கார் ஓட்டுநராக  இருக்கும்  சமுத்திரக்கனி மனைவி லட்சுமி பிரியா மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.  வசதி படைத்த கௌதம் மேனனிடம் கார் டிரைவராக சமுத்திரக்கனி  வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கௌதம் மேனன் தனது குடும்பத்துடன் ஒரு மாதம் வெளிநாடு செல்ல இருப்பதால் தன்னிடம் இருக்கும் காரை  சமுத்திரக்கனியிடம் கொடுத்து திரும்பி வரும் வரை காரை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறார். இதனையடுத்து சமுத்திரக்கனி , கௌதம் மேனனுக்குத் தெரியாமல் அவரது காரை ட்ராவல்ஸ்ஸில் சேர்த்து  பணம் சம்பாதித்து வருகிறார். சொந்தமாக வீடு வாங்குவதற்காக கடன் நிறைய வாங்க குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் கார் விபத்தில் மாட்டிக் கொள்ள அதை சரி செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இறுதியில் சமுத்திரக்கனி விபத்தில் சிக்கிய காரை சரி செய்தாரா? இல்லையா ? வாங்கிய கடனை திருப்பி செலுத்தினாரா? இல்லையா? கௌதம் மேனனிடம்  காரை ஒப்படைத்தாரா ? இல்லையா? என்பதே ’கா...

நீளிரா - விமர்சனம்

Image
நீளிரா -  விமர்சனம் 1988 ஆம் ஆண்டு வட இலங்கையில் இலங்கை ராணுவத்திற்கும், தமிழ் போராளிகளுக்கும் யுத்தம் நடந்து  வருகிறது.  அப்போது  இந்தியாவிலிருந்து அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இந்திய துணை ராணுவம் சென்றது.  அங்குள்ள கிராமத்தில்  கபிலா வேணுவின் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த திருமணத்தை நடத்துவதற்கு கூட இந்திய அமைதிப்படை இடமும், இலங்கை இராணுவத்திடமும் அனுமதி  பெற்று திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் என  கேப்டன் நவீன் சந்திரா  தலைமையிலான  இந்திய இராணுவ வீரர்கள்  தற்செயலாக அந்த வீட்டை சுற்றி முற்றுகை இடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வீட்டிற்குள் நுழையும் இராணுவ வீரர்கள்  வீட்டுக்குள் தமிழ் போராளிகள் இருக்கிறார்களா என்று சல்லடை போட்டு தேடுகிறார்கள். துப்பாக்கி முனையில் திருமண வீட்டாரை மிரட்டுகிறார்கள். இறுதியில் அந்த வீட்டில் திருமணம் நடந்ததா? இல்லையா?  இந்திய ராணுவ வீரர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதே  ‘நீளிரா’...