#AnbeDiana 3.5/5 குடும்பத்தோட நண்பர்களோடு போங்க ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்பி கிடைக்கும்
அன்பே டயானா’ - விமர்சனம் சென்னை பெரம்பூர் பகுதியில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பமாக சேத்தன்–ரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஈரமாவு வியாபாரம் செய்து தனது கடின உழைப்பாலும், கண்டிப்பான குணத்தாலும் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியவர் ரோஜா. குடும்பத்தின் அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார். ஆனால் அவரது கணவர் சேத்தன் அதற்கு நேர்மாறானவர். குடிப்பழக்கம் கொண்டவர்; மனைவிக்குப் பயந்து வாழ்பவர். இளமையில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன ஏக்கம் இன்னும் சேத்தனின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால் ரோஜாவை விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை ஒரு கடமையாகவே நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகள் இஸ்மத் பானு, திருமணமாகி கணவரைப் பிரிந்து தனது பெண் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். இரண்டாவது மகனான பாரி, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகன் சுதர்சன் படிப்பை முடித்து அரசுப் பணியில் இருக்கிறார். இந்நிலையில், க...