ரத்னம் - விமர்சனம் சிறுவயதில் தாயை பறிகொடுக்கும் விஷால் அங்கு உள்ள மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனியின் உயிரை காப்பாற்ற அன்றுமுதல் சமுத்திரக்கனியின் அரவணைப்பில் இருக்கிறார் விஷால் நாயகி ப்ரியா பவானி ஷங்கர், நீட் தேர்வு எழுத வேலூர் வருகிறார். அவரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொலை செய்ய முயற்சிக்க அதைத் தடுத்து, ப்ரியாவை காப்பாற்றுகிறார் விஷால்.ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் துடிப்பதை அறிகிறார் விஷால். இதனையடுத்து ஆந்திரா ராயுடு பிரதர்ஸ்களால் தொடர்ந்து நாயகி பிரியா பவானி சங்கருக்கு பிரச்சனை வருகிறது. இறுதியில் நாயகன் விஷால் நாயகி பிரியா பவானி சங்கக்கரை காப்பாற்றினாரா? இல்லையா? எனபதே ’ரத்னம்’ படத்தின் கதை. ரத்னம் கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் விஷால் அதிரடி நாயகனாக பட்டையை கிளப்பியிருக்கிறார். விஷால் கடுமையாக உழைப்பு அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. சண்டையில் மட்டுமின்றி அம்மா மீது பாசம் காட்டுவதிலும் இயல்பான
Posts
G5MEDIA
- Get link
- Other Apps
கொலை தூரம் - விமர்சனம் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் கணவன் யோசிக்காமல் எடுக்கும் விபரீத முடிவு அவனது வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை சொல்லும் திரைப்படம் ’கொலை தூரம் ’ இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக துபாய்க்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் யுவன் பிரபாகர் துபாயில் உடன் பணிபுரியும் நான்கு பேர் நண்பர்கள் ஆகிறார்கள் துபாயிலிருந்து 12 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வரும் நாயகன் யுவன் பிரபாகர் தங்கை இருவருக்கும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கிறார் தங்கைகள் இருவரும் சேர்ந்து அண்ணனுக்கு நாயகி சமந்துவை திருமணம் செய்து வைக்கிறார்கள் அழகாக சென்று கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் திடீரென புயல் வீச யுவனின் மனைவி சமந்து கடிதம் எழுதி வைத்து காணாமல் போகிறார் இதே வேளையில் துபாயில் வேலை செய்யும் நான்கு நண்பர்களின் மனைவிகள் ஒருவருக்கு பின் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்கள் இந்த வழக்கை போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது இறுதியில் இந்த தொடர் கொலைக்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பதை ’கொலை தூரம் படத்தின் கதை.
- Get link
- Other Apps
ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !! சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தரு வதாக உறுதியளித்தார்.
- Get link
- Other Apps
சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது - ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் பேச்சு தமிழ் சினிமா நடிகர்கள் கையில் தான் இருக்கிறது - ‘உழைப்பாளர் தினம்’ இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் ஆவேசம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறப்பது தமிழ் சினிமாவுக்கு அவமானம் - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர் காட்டம் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் 1000 கோடி சம்பாதிக்கவே அரசியல் கட்சி தொடங்குகிறார் - விஜயை விமர்சித்த ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர் ‘உழைப்பாளர் தினம்’ தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு நான் தயாரித்த 10 படங்களில் 8 படங்கள் பெரும் நஷ்ட்டத்தை கொடுத்தது - ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் உண்மையை சொன்ன தயாரிப்பாளர் நந்தகுமார் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது - ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம் படத்தின் இசை வெளியீ
- Get link
- Other Apps
கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"! ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் 'வேட்டைக்காரி'! படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, 'படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்' என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு வைரமுத்து! ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து! ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சனா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, காளிமுத்து காத
- Get link
- Other Apps
*கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்* *கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.* புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பட பட்டியலில் 'த கிரேட் இந்தியன் கிச்சன்', 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்', 'வடசென்னை', தேசிய விருது பெற்ற படமான 'காக்கா முட்டை', 'ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்', ' டக் ஜகதீஷ்', 'வானம் கொட்டட்டும்' என பல வெற்றி படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார். &
- Get link
- Other Apps
*நடிகை ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது !!* *கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான இந்த பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர்.* நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது. இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘இனிமேல்’ பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களுடனும் சித்தரிக்கிறது. இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது, இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்