*நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் 'மை டியர் டயானா' எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்* பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் இணையத் தொடர் 'மை டியர் டயானா'. இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங்கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் கதையின் நாயகனாக
Posts
Showing posts from March, 2023
- Get link
- Other Apps
ஜம்பு மஹரிஷி Tvs films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜம்பு மஹரிஷி’.இந்தப் படத்தில் புதியவரான பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சி இயக்கத்தையும், ராஜ் கீர்த்தி படத் தொகுப்பையும், பி.புவனேஸ்வரன் வசனத்தையும் கவனித்துள்ளனர். ‘தேனிசை தென்றல்’ தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.திருச்சி அருகே திருவானைக்காவலில் ஜீவ சமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.ஓரே நேரத்தில் தமிழ்,தெலுங்
- Get link
- Other Apps
*ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' படக்குழு வெளியிட்டிருக்கும் தெய்வீகமான போஸ்டர்* ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதனை இந்த போஸ்டர் நேர்த்தியான முறையில் பிரதிபலித்திருக்கிறது. அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெல்வதை அடையாளமாக குறிக்கும் இந்த ராமநவமி தினத்தன்று படக் குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்த
- Get link
- Other Apps
*செங்களம் (வெப் சீரிஸ்) ; விமர்சனம்* திரைப்படங்களுக்கு சமமான வரவேற்பை தற்போது ஓடியில் வெளியாகும் தொடர்களும் பெற்று வருகின்றன. பெரும்பாலும் ஹாரர், திரில்லர், ஆக்சன் ஜேனர்களில் மட்டுமே வெளியாகி வந்த வெப் தொடர்களில் இருந்து விலகி சற்று வித்தியாசமாக, முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள தொடர் தான் செங்களம். சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் என்கிற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் முதல் முறையாக இந்த வெப் சீரிஸ் ஏரியாவில் அடி எடுத்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்ட பின்னணியில் கதை நகர்கிறது. ஒன்பது எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் ஒவ்வொரு எபிசோடிலும் அன்று, இன்று என முன்பின் நடந்த நிகழ்வுகள் இரண்டுமே இடம்பெற்று பின்னர் வரும் எபிசோடுகளில் ஒன்றுடன் ஒன்று அழகாக தொடர்புபடுத்தப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. கதையின் சாராம்சம் என்னவென்றால் ஒரு பக்கம் கலையரசன் தனது தம்பிகள் இருவருடன் சேர்ந்து மூன்று பேரை கொன்றுவிட்டு காட்டுக்குள் தலைமறைவாக இருக்கிறார். போலீஸ் அவரை வேட்டையாட முடியாமல் கையை பிசைகிறது. இதற்கு அடுத்ததாக மூன்று பேர்களை கொன்றுவிட்டு
- Get link
- Other Apps
*புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்* ‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்த த
- Get link
- Other Apps
*அக்சய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் 27' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு* தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்ற
- Get link
- Other Apps
‘கப்ஜா’ விமர்சனம் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் மகன் உபேந்திரா தன் தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் வசித்து வருகிறான். தந்தை இறப்புக்கு பிறகு இவர்கள் மூவரும் அமரேஸ்வரம் என்ற ஊருக்கு வந்து வாழ்கிறார்கள். விமானப்படை வீரராக தனது வாழ்வைத் தொடங்கும் உபேந்திரா சிறுவயதிலிருந்தே மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரியா சரணை காதலித்து வருகிறார். ராஜ பாரம்பரிய கலாச்சாரத்தை மீறி நாயகி ஸ்ரேயாவை திருமணம் செய்கிறார். ஒரு கட்டத்தில் தனது அண்ணனின் கொடூரமான கொலைக்கு பழி தீர்க்க களத்தில் இறங்குகிறார். ஆனால், காலம் look அவரை இந்தியாவே பார்த்து மிரளும் நிலழ் உலக தாதாவாக மாற்றிவிடுகிறது. கதாநாயகி ஸ்ரேயாவின் தந்தை முரளி அரசாங்க அளவில் தனது செல்வாக்கை உபயோகப்படுத்தி உபேந்திரா கொலை செய்ய முயற்சியில் ஈடுபடுகிறார். இறுதியில் யார் ? வென்றார்கள் என்பதே ‘கப்ஜா’ படத்தின் கதை. ஆர்க்கேஷ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கன்னட நடிகர் உபேந்திரா மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்ஷன் காட்சிகளுக்கும் நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்
- Get link
- Other Apps
Saurashtra Tamil Sangamam to celebrate centuries-old links between Gujarat and Tamil Nadu Chennai, Sunday, 19th March 2023: The central government has announced “Saurashtra Tamil Sangamam” on the lines of the Kashi Sangamam to be held in Saurashtra from 17th April 2023 onwards. The program will rediscover, reaffirm and celebrate the over 1,000-year-old emigration and contribution of Saurashtrian Tamils. At the press conference organized in the city, the dignitaries launched an iconic logo , theme song , and a registration portal for participants. Over 3,000 participants will be offered a once-in-a-life glimpse into the life of Saurashtrian Tamils, history, art, and the economic activities in and around Saurashtra. The Saurashtra Tamil Sangamam is a program that highlights the oneness of India’s culture by narrating untold histories of how a community emigrated to Tamil Nadu and their contributions to the country. Addressing the press conference, Dr. Mansukh Man
- Get link
- Other Apps
கண்ணை நம்பாதே’ - விமர்சனம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் உதயநிதி) தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்காரரின் மகள் ஆத்மிகாவை காதலிக்கிறார். இந்த விஷயம் தமிகாவின் தந்தைக்கு தெரிய வர உதயநிதியை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார்.வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் பிரசன்னா, உதயநிதியை சரக்கு அடிக்க வாருங்கள் என அழைக்கிறார். தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் உதயநிதி நண்பன் சதீஸ் இவர்களுடன் இணைகிறார். மூவரும் பாருக்கு சென்ற நேரத்தில் கார் ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பூமிகாவை வீட்டில் கொண்டு விட்டு உதவி செய்கிறார் உதயநிதி. உதவி செய்ததற்கு கைமாறாக அவர் தனது காரை கொடுத்து, காலையில் கொண்டு வாருங்கள் என்று அனுப்புகிறார். அவர் சொன்னபடியே காரை கொண்டு செல்லும் உதயநிதி காலையில் காரை எடுக்கச் செல்லும் போது காரின் டிக்கியில் பூமிகா பிணமாக கிடக்கிறார். இறுதியில் நாயகன் கவலை குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’கண்ணை நம்பாதே’ படத்தின் கதை. கதை நாயகனாக
- Get link
- Other Apps
குடிமகான்’ - விமர்சனம் வங்கி ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் விஜய் சிவன், அப்பா மனைவி மகன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாத இவர் வேலைக்கு செல்லும் இடத்திலெல்லாம் கிடைக்கும் தின்பண்டங்கள் அனைத்தையும் அடிக்கடி சாப்பிடுகிறார், அப்படி இவர் அளவுக்கு மீறி தின்பண்டங்கள் தின்றதால் குடிக்காமலேயே போதை ஆகும் ஒரு வகை நோய் வந்துவிடுகிறது. இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பும்போது.. மயக்க நிலை ஏற்பட.. 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாயை மாற்றி நிரப்புகிறார். இந்த ஏடிஎம்மை பயன்படுத்தும் பயனாளிகள்.., 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வருவதை கண்டு, மகிழ்ச்சி அடைந்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் வங்கிக்கும், இந்த பணியை மேற்கொண்டிருக்கும் தனியார் நிறுவனத்திற்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் நாயகனுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. இறுதியில் நாயகன் ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பணம் வாங்கினாரா? இல்லையா? பறிபோன வேலை கிடத்ததா? என்பதே ’குடிமகான்’ படத்தின் கதை.. நாயகனாக நடித்திருக்கும
- Get link
- Other Apps
ஷூட் தி குருவி - விமர்சனம் ஈரோட்டில் வசிக்கும் ஆஷிக் ஹுசைனுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு 5 லட்சம் தேவைப்படுகிறது. சாமியாராக இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி இவரது கனவில் தோன்றி 5 வித இலக்குகளை நிறைவேற்றி கொள்ளுமாறு கட்டளை இடுகிறார். இதையடுத்து சென்னை வருகிறார்.ஆஷிக் சென்னையில் பிரபல கேங்ஸ்டர் குருவி ராஜனை என்கவுண்டர் செய்ய வரும் போலீஸ் உயர் அதிகாரியை கொலை செய்கிறான் குருவி ராஜன் யார் என்று தெரியாமல் குருவி ராஜன் தலையில் தாக்கி விடுகிறான் ஆஷிக் குருவி ராஜனிடம் அடியாளாகாக வேலை பார்க்கும் சாய் பிரசன்னா ஆஷிக்கை காப்பாற்றுவதற்காக ஷா ராவின் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைக்கிறார். இறுதியில் தன்னை தாக்கிய ஆஷிக்கை குருவி ராஜன் என்ன ? செய்தான் என்பதே ஷூட் தி குருவி படத்தின் கதை. கேங்ஸ்டர் குருவி ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் உண்மையான கேங்ஸ்டர் போல வளம் வருகிறார்.அமைச்சர்,போலீஸ் உயர் அதிகாரி என அனைவருக்கும் நேரம் கொடுத்து கொலை செய்வது என இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஷா ரா - ஆஷிக் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது. ஆஷிக் 5 இலக்குகளை அடை
- Get link
- Other Apps
*வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் 'கஸ்டடி' திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இதன் டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும்* பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமான 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இருந்து வெளியான கதாபாத்திர போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே படம் குறித்தான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படக்குழுவிடம் இருந்து இன்னும் அதிக கண்டெண்ட்டை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இன்று, படக்குழு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் டீசர் மார்ச் 16 ஆம் தேதி மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும். இதை அறிவித்ததோடு படக்குழு ஒரு சுவாரஸ்யமான க்ளிம்ப்ஸையும் வெளியிட்டுள்ளனர். இது டீச
- Get link
- Other Apps
’அகிலன்’ - விமர்சனம் சென்னை துறைமுகத்தையும், அதில் பணியாற்றும் அதிகாரிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சட்டவிரோதமான வேலைகளை செய்து வருகிறார். ஹரிஷ் பெராடி. இவருக்கு அடியாளாக வேலை பார்க்கிறார் ஜெயம் ரவி ஹரிஷ் பெராடிக்காக கொலை கூட செய்பவர் இந்த கடத்தலுக்கு தலைவனாக இருக்கும் கபூரை அகிலன் சந்திக்கிறார். அப்போது கபூர் வேலை ஒன்று சொல்கிறார். இந்த வேலையை செய்து முடிப்பவன் தான் இனிமே கிங் ஆஃப் இந்திய பெருங்கடல் என அறிவிக்கிறார் கபூர். இதற்கிடையே, ஹரீஷ் பெராடியை ஓரம் கட்டிவிட்டு, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடும் ஜெயம் ரவிக்கும், ஹரிஷ் பெராடிக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால், ஜெயம் ரவியை கொலை செய்ய முடிவு செய்யும் ஹரிஷ் பெராடி, அதற்காக அவரை பின் தொடரும் போது ஜெயம் ரவி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. இறுதியில் ஜெயம் ரவியின் உண்மையான நோக்கம் என்ன? அது நிறைவேறியதா இல்லையா ? என்பதே ’அகிலன்’ படத்தின் மகதை. எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் ஜெயம் ரவி, அகிலன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை கொட
- Get link
- Other Apps
மெமரீஸ்’ - விமர்சனம் ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் நாயகன் வெற்றி அவரின் சட்டையெல்லாம் ரத்தக்கறையாக இருக்கின்றது, தான் யார் என்பதே அவருக்கு சுத்தாமாக நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் வெற்றியை காரில் ஏற்றி சென்றுகொண்டிருக்கும் போது அங்கு ஒரு செய்தி தாளை பார்க்கிறார் அதில் 4 கொலைகளை செய்த குற்றவாளியை போலீஸ் தேடிக்கொண்டிருப்பதாக அதில் இருக்கிறது மற்றும் அதில் வெற்றியின் புகைபடமும் இருக்கிறது. அதனை கண்டு வெற்றி அதிர்ச்சி அடைகிறார். அப்போது வெற்றியை காரில் கூட்டி வந்த அந்த நபர் , வெற்றியை காரிலிருந்து இறக்கிவிட்டு வெற்றியிடம் உனக்கு 17 மணி நேரம் தான் இருக்கிறது அதற்குள் உன்னுடைய பழைய நினைவுகளை நினைவு படுத்துமாறு சொல்கிறார், அந்த 17 மணி நேரத்தில் வெற்றி தனது பழைய நினைவுகளை நினைவுபடுத்தி தான் யார் என்பதை தெரிந்து கொண்டாரா? இல்லையா? என்பதே ’மெமரீஸ்’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் வெற்றி வித்தியாசமான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார். அப்பாவியாக, குரூரக் குணம் கொண்டவராக, போலீஸ் அதிகாரியாக, மருத்துவராக இப்படி பல தோற்றங்களிலும்
- Get link
- Other Apps
கொன்றால் பாவம்’ - விமர்சனம் சில நிமிட சஞ்சலம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே எப்படி புரட்டிப்போட்டு விடும் என்பதற்கு உதாரணமாக வெளியாகி உள்ள படம்தான் இந்த கொன்றால் பாவம் 1980 காலகட்டத்தில் நடக்கும் கதை இது. வரலட்சுமி, அப்பா சார்லி, அம்மா ஈஸ்வரி ராவ் என கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தங்களது நிலத்தில், ஒரு சாதாரண வீட்டில் அன்றாட செலவுக்கே சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். கடன் வாங்குகிறார்கள். கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்க, கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுகிறது சார்லியின் குடும்பம். இந்த சூழ்நிலையில் வழிப்போக்கனான சந்தோஷ் பிரதாப் அந்த வீட்டிற்கு வந்து இன்று இரவு தங்கிக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்க,சார்லின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். அப்போது அவரிடம் நிறைய பணமும் நகைகளும் இருப்பதை பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் வரலட்சுமி, அந்த பணம் முழுவதையும் தங்களுக்கே சொந்தமாக்கி கொண்டால் மொத்த பிரச்சனைக்கும் விடிவு கிடைக்கும் என குறுக்கு புத்தியுடன் ஒரு முடிவு எடுக்கிறார். இறுதியில் வரலட்சுமி, எடுத்த விபரீதமான முடிவு என்ன ? என்பதே படத்தின் கதை. மல்
- Get link
- Other Apps
*பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் - ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி துணுக்குகள், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது.* நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அமேசான் மற்றும் MGM ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே ஆகியோர் SXSWல் நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இதன் போது உலகளாவிய உள்ளடக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிட்டடெல் எனும் புதுமையான புலனாய்வுத் தொடர்களைப் பற்றிய ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. கலிபோர்னியா—மார்ச் 11, 2023—இன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெலுக்கான பிரத்யேக காட்சித்துணுக்குகளையும், இந்த இணையத் தொடர் குறித்த புதிய கலை வடிவத்தையும் அமேசான் ப்ரைம் வீடியோ அறிமுகப்படுத்தியது. இரட்டையர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் நடித்த தொடரின் வீடியோ காட்சி, அமேசான் மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சால்கேவுடன் சோப்ரா ஜோனாஸ் கலந்து கொண்டதுடன். கலகலப்பான SXSW முக்கிய உரையாடலிலும்
- Get link
- Other Apps
*காற்றே வராத குகைக்குள் தினமும் 14 மணி நேரம் ; ஜித்தன் ரமேஷின் ஜிலீர் அனுபவங்கள்* *35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 22 நாட்கள் குகைக்குள் நடைபெற்ற ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு* *காற்றோட்டம் இல்லாத குகைக்குள் 22 நாட்கள் ஜித்தன் ரமேஷ் எடுத்த ரிஸ்க்* *நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ்* சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் இராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, *காசி விசுவநாதன் மற்றும் எவர்க்ரீன் அற்புதாநந்தம்* உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் *அவுசேபச்சன்* இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள
- Get link
- Other Apps
தயாரிப்பு : ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பாளர் : ஆர்.தீபக் குமார்... நடிகர்கள் : ரிஷி, கரீனா ஷா, காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன்... ஒளிப்பதிவு : ஆர்.தீபக் குமார் இசை : இலக்கியன் எழுத்து – இயக்கம் : கோ.ஆனந்த சிவா.: ’பியூட்டி’ திரைப்பட விமர்சனம் அழகு என்றாலே ஆபத்து என்று நினைக்கும் நாயகன் ரிஷி, அழகான பெண்களை பார்த்தாலே வெறுப்பதோடு, தனது தந்தை ஆசைப்பட்டது போல், ஊனமுற்ற அல்லது மற்றவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதற்கிடையே தீ விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட நாயகி கரீனா ஷாவை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்ளும் நாயகன் ரிஷி, தன் தந்தை சொன்னது போன்ற ஒரு பெண்ணுடன் தனது இல்லற வாழ்க்கையை தொடங்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் நேரத்தில், நாயகி கரீனா ஷா பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை பழையபடி அழகுப்படுத்திக் கொள்கிறார். நாயகி அழகாக மாறியதால் அவரை வெறுக்கும் ரிஷி, பழையபடி நாயகியின் அழகான முகத்தை அலங்க