Posts

Showing posts from October, 2023
Image
*ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜாவின் 'ரெபல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி
Image
*'சூர்யா 43' காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி* *'சூர்யா 43' லேட்டஸ்ட் அப்டேட்* தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா 43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.  சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்  ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந
Image
*பிரம்மாண்டமாக தொடங்கியது 'நேச்சுரல் ஸ்டார்' நானி - விவேக் ஆத்ரேயா- டி வி வி என்டர்டெய்ன்மென்ட்ஸ் இணைந்து உருவாக்கும் பான் இந்திய திரைப்படமான 'சூர்யாவின் சனிக்கிழமை'* 'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல் திரைப்படமான 'அந்தே சுந்தரனிகி' முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், இரண்டாவது படைப்பான 'சூர்யாவின் சனிக்கிழமை' ஒரு தனித்துவமிக்க அதிரடி மற்றும் மாஸான ஆக்சன் அவதாரத்தில் நானி வழங்கிய அன்செயின்ட்  Unchained எனும் வீடியோ மக்களை உற்சாகப்படுத்தியது. டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.‌ நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 'சூர்யாவின் சனிக்கிழமை' எனும் திரைப்படம் இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தயாரிப்பாளர் டி வி வி தனய்யா படத்தின் திரைக்கதையை இயக்குநரிடம் ஒப்படைத்தார்.‌ முதல் ஷாட்டிற்
Image
பான்–இந்திய நட்சத்திரம் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் 44 வயதை அடைந்தார். ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் சலார் நட்சத்திரத்தின் 230 அடி கட்–அவுட்டை ரசிகர்கள் அற்புதமாக அமைத்துள்ளனர். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்திய நட்சத்திரமான ரெபெல் ஸ்டார்  பிரபாஸ் இன்று (அக்டோபர் 23, 2023) 44 வயதை எட்டுகிறார். பிரபாஸின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில்  ரசிகர்கள் பிரமாண்டமான 230 அடி கட்அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். நாட்டிலேயே மிகப்பெரிய கட்-அவுட் அமைப்பாக இது இருக்கும் என்று தெரிகிறது. கட்அவுட் கட்டும் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதனை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Image
*நேச்சுரல் ஸ்டார் நானி - விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்திருக்கும் பான் இந்திய திரைப்படமான 'நானி 31' திரைப்படத்திற்கு  'சூர்யாவின் சனிக்கிழமை' என பெயரிடப்பட்டிருக்கிறது* 'தசரா' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் புகழடைந்து, 'ஹாய் நான்னா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி அடுத்ததாக 'அந்தே சுந்தரனிகி' போன்ற கல்ட் பொழுதுபோக்கு படைப்பை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா உடன் இணைகிறார். ஆஸ்கார் விருதை வென்ற 'ஆர் ஆர் ஆர்' எனும் திரைப்படத்திற்கு பிறகு, ''சூர்யாவின் சனிக்கிழமை'' படத்தை  டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது. அண்மையில் ஒரு சிறிய வீடியோ உடன் இந்த படைப்பு குறித்து அறிவித்த தயாரிப்பாளர்கள், கட்டவிழ்க்கப்பட்ட- Unchained எனும் மற்றொரு புதிரான வீடியோ மூலம் இதன் தலைப்பை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு நாளில் கட்டுப்படுத்த முடியாத கதா
Image
லியோ ’ - விமர்சனம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற பகுதியில் வசிக்கும் விஜய் மனைவி த்ரிஷா, ,மகன், மகள்  என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.  அங்கு காபி ஷாப் ஒன்றை  நடத்தி வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் இவர் விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு நெருங்கிய நண்பராக வரும் கெளதம் வாசுதேவ் மேனன்.வனத்துறை அதிகாரியாக வருகிறார். ஒருநாள் தேடப்படும் குற்றவாளிகளான மிஷ்கின் மற்றும் சாண்டி கூட்டாளிகள்  விஜயின் காபி ஷாப்புக்குள் நுழைந்து விடுகிறார்கள். அப்போது விஜய் பிரச்சனை வேண்டாம் என்று பணத்தை கொடுத்து முடித்துவிட பார்க்கிறார். ஆனால், அவர்களின் அட்டகாசம் எல்லை மீறவே அவர்களை  துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகிறார்.விஜய் . இதனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. விஜய் தற்காப்புக்காக தான் இந்த கொலையை செய்தார் என்று நிரூபணமாகி அவர் விடுவிக்கப்படுகிறார். இந்த செய்தி நாளிதழ்களில் வெளிவர, விஜய்யின் புகைப்படமும் அதில் வருகிறது. இதனை பார்த்த அர்ஜுன் மற்றும் அவரது அண்ணன் சஞ்சய் தத் ஆதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.. விஜய்யை தூக்கி வர இமாச்சல் வர
Image
'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் நட்சத்திர இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லை க்கா சுபாஸ்கரன் லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்'  படத்தின் இயக்குநரான பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின்  படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வெளிநாட்டில் இருக்கும் ல
Image
*உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !!* ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது.  நாம் மனது வைத்தால் உணவில்லாமல் தவிப்பவர்கள் நிலையை மாற்ற முடியும்.  இந்நிறுவனத்தின் சார்பில்  உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு  பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களு
Image
*“டெவில்” படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் !*  *“டெவில்”  படத்திலிருந்து மாளவிகா நாயர் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *நந்தமுரி கல்யாண் ராமின் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தில் சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மிரட்டும் மாளவிகா நாயர் !* நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர், தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு படத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும்  வகையில் “டெவில்” எனப்  பெயரிடப்பட்ட இப்படம், பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை, தயாரிப்பாளர்கள் இந்த படத்திலிருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் நடிக்கும் கதாநாயகி மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வ
Image
லியோவோடு மோதும் திரையின் மறுபக்கம்  தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி.அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார்.       இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார்.       இயக்குனர் செந்தில் படம் பண்ணுவதில் பயங்கரமாக சொதப்ப விவசாயி சத்யமூர்த்தி செந்திலை நீக்கி விட்டு படத்தின் ஹிரோ ,துணை இயக்குனர் உதவியோடு படத்தை முடிக்கிறார்.அன்பரசியின் கழுகுப்பிடியிலிருந்து சத்யமூர்த்தி தப்பினாரா ..? படத்தை எப்படி வெளியே கொண்டு வரப்போகிறார் என்பதே கதை.       திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை.இப்படத்தை நிதின் சாம்சன் (Nitin Samson ) இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை,திரைக்கதை, வசனம் ,தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார்.சென்னை,செங்கல்பட்டு,அமெரிக்கா(புளோரிடா) ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார்.அக்டோபர் 20 ந்தேதி முதல் தமிழகமெங்கும் 60 தியேட்டர்களில் ரீலீசாகிறது. Cast: Mohammed Ghouse
Image
சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு.   கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா,இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் திறமையறிந்து சென்னை மாவட்ட  மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர்,திரு M.செண்பகமூர்த்தி, இருவரையும் ஊக்கப்படுத்தி, பல உதவிகள் செய்து வருகிறார். ஆசிய போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வதற்கு ,அவர்களுக்கு தேவையான காலணி முதல் பல பரிசுகளை வழங்கி  உதவிகளைச் செய்துள்ளார்.  ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்ததுடன் மேலும் பல சாதனைகள் செய்துள்ளார். நித்யா 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல மெடல் பரிசும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் மற்றும், 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் சில்வர் மெடல் பெற்று சாதனை செய்துள்ளார். ஆசிய போட்டிகளில் மட்டுமல்லாது தேசிய அளவிலான போட்டிகளிலும் தமி
Image
இசையமைப்பாளர் சௌந்தர்யன் மகன் எம்.எஸ்.அமர்கீத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் குண்டான் சட்டி என்ற படத்திற்கு இசையமைத்திருக்கின்றார் எம்.எஸ்.அமர்கீத்.  படத்தின் தலைப்பை கேட்டவுடனே இது அனிமேஷன் படம் தானே என்று கேட்க வரும். சாதாரணமாக ஸ்டார் வேல்யூ உள்ள எந்த படத்திற்கும் சளைத்தது அல்ல என்ற விதத்தில்  எம்.எஸ் அமர்கீத்  இசைவளம் இருக்கின்றது.  சிட்டுக்குருவி போல வட்டமடிப்போம் நாங்க... ஓட ஓட விரட்டி பிடிப்போம் வெள்ளாட்ட நாங்க... குண்டான் சட்டி குண்டான் சட்டி... என்ற மூன்று பாடல்களும்  கேட்டவுடன் மனதை பற்றிக் கொள்ளும் பாடல்களாக இருக்கின்றது. ரஜினி நடித்தும் அனிமேஷன் படம் வந்திருக்கின்றது. ஆனால் மனதை மயக்கும் பாடல் வந்திருக்கும் ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.  பின்னணி இசையை சொல்லவே வேண்டாம் புதிய கோணத்தில் செவியில் சிதறவிடுகின்றார்.  மொத்தத்தில்  திரைப்பட இசை உலகிற்கு அமர்கீத் ஒரு அமர்க்களமான புதுவரவு. - வெங்கட் பி.ஆர்.ஓ
Image
“தில்லு இருந்தா போராடு” - விமர்சனம் கிராமத்தில் பட்டப்படிப்பு பய் முடித்த நாயகன் கார்த்திக்தாஸ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறார். ஊரில் பெரிய மனிதர் தென்னவன் இவருடைய ஒரே மகள்  நாயகி அனுகிருஷ்ணா கல்லூரில் படித்து வருகிறார்.  நாயகி அனுகிருஷ்ணாவை பார்த்ததும் நாயகன் கார்த்திக்தாஸ்க்கு காதல் வருகிறது. ஆனால் நாயகி காதலை ஏற்க மறுக்கிறார்  . ஒரு கட்டத்தில் நாயகன் கார்த்திக் மீது அனுவிற்கு காதல் மலர்கிறது.. இவர்களது காதலை இரு வீட்டாரும் ஏற்க மறுக்கிறார்கள்  இதனால்  பல அவமானங்களை சந்திக்கும்  கார்த்திக்  மதுபோதைக்கு  அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் மீரா கிருஷ்ணன் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள் அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது. இதற்கிடையே பஞ்சாயத்து பரமேஸ்வரி வனிதாவின் உதவி நாயகனுக்கு கிடைக்கிறது இறுதியில் கார்த்திக்தாஸ், - அனுகிருஷ்ணா இருவரின் காதல் கைக் கூடியதா? இல்லையா?  நாயகன் கார்த்திக்தாஸ், வாழ்க்கையில் முன்னேறினாரா ? இல்லையா ? எனபதே  “தில்லு இருந்தா போராடு” -படத்தின்கதை. நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக்தாஸ்,இயல்பாக  நடித
Image
ஷாட் பூட் த்ரீ’  -  விமர்சனம் ஐடி நிறுவனத்தில்  வேலை செய்யும் வெங்கட் பிரபு - சினேகா தம்பதிகளுக்கு ஒரே மகன் கைலாஷ், தொடர்ந்து  வேலை வேலை என்று அலையும் இவர்களுக்கு கைலாஷை  கண்காணிக்கவும் நேரமில்லை. இதனால்  கைலாஷ் தனிமையில் மிகவும் வேதனை அடைகிறார்  கைலாஷ்க்கு , ப்ரனிதி, வேதாந்த் என இரண்டு நண்பர்கள்  இருக்கிறார்கள்.   இதே அப்பார்ட்மெண்ட்டில் வேலை பார்க்கும் செக்யூரிட்டியின் மகன் பூவையார்  குடும்ப சூழ்நிலை  காரணமாக  பள்ளிக்கு செல்லாமல் அந்த அப்பார்ட்மென்டில்  சிறு சிறு வேலை செய்து  வருகிறான். கைலாஷ் பிறந்தநாள் பரிசாக இவனுடைய நண்பர்கள் நாய் ஒன்றை பரிசாக தருகிறார்கள்.   முதலில் வீட்டில் நாயை வளர்க்கக்கூடாது என்று கூறும் சினேகாவை ஒரு வழியாக சமாளித்து அந்த நாயை வளர்க்க சம்மதம் வாங்கிவிடுகிறார்கள் . ஒரு நாள் இவர்கள் வளர்க்கும் நாய் திடீர் என காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து கைலாஷ் நாயை தேடுகிறார். இறுதியில் நாய் கிடைத்ததா? இல்லையா?  என்பதே   ‘ஷாட் பூட் த்ரீ’  - படத்தின்கதை. சிறுவன் கைலாஷ் பெற்றோர்களாக நடித்திருக்கும் சினேகா மற்றும் இயக்குநர் வெங்கட் பி
Image
இறுகப்பற்று - விமர்சனம் விக்ரம் பிரபு – ஷ்ரத்தா தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஷ்ரத்தா  குடும்ப நல உளவியல் ஆலோசகராக இருக்கிறார்.  ஷ்ரதா ஸ்ரீநாத், விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில் தனது மனைவி தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ளாத அவரது கணவர் விக்ரம் பிரபு மனைவி மீது கோபமடைவதோடு அவரை விலகி செல்கிறார். விதார்த் தனது மனைவி அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். கணவரின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சியடையும் அபர்ணதி, மனோதத்துவ நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் உதவியை நாடுகிறார். ஸ்ரீ – சானியா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமான புதிதில் அழகாக செல்லும் இந்த திருமண வாழ்க்கை போக போக பிடித்தம் இல்லாமல் இருவருக்குள்ளும் சண்டை, சச்சரவு, மோதல் என செல்கிறது. இந்த இரு தம்பதியினரும் தங்களின் இன்னலுக்காக ஷ்ரதாவிடம் கவுன்சிலிங்க் செல்கின்றனர். இரு தம்பதியினருக்கும் தன்னால் முடிந்த கவுன்சிலிங்கை கொடுக்கிறார் ஷ்ரதா.
Image
800’ - விமர்சனம் கிரிக்கெட்டில்  800 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் சாதனை புரிந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த ஒரே ஒரு தமிழ் வீரர் முத்தையா முரளிதரன். இவரின் வாழக்கையை சொல்லும் படமாக வந்துள்ளது 800 திரைப்படம். 800 என்பது முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் தொடர்களில் வீழ்த்திய சாதனை விக்கெட்டுக்களின் எண்ணிக்கை. மொத்தத்தில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன்.சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட முத்தையா முரளிதரன் எப்படி இலங்கை அணியில் சேர்ந்தார். கிரிக்கெட் அணியில் உள்ள பிரச்சனை மற்றும் இலங்கையில் உள்ள அரசியல் ஆகியவற்றை எப்படி கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக மாறினார் எனபதே  ’800’  படத்தின் கதை. ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதுர் மிட்டல் முரளிதரனாக நடித்திருக்கிறார். சிறப்பாக பந்துவீச்சுப் பயிற்சியெல்லாம் பெற்று கடுமையாக உழைத்திருக்க
Image
ரத்தம்’ - விமர்சனம் புலனாய்வு நிருபரான விஜய் ஆண்டனி மனைவி பிரசவத்தின் போது  இறந்து விடுகிறார்  இதனால்   மனதளவில் பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி குடிக்கு அடிமையாகி தன் மகளுடன் வெளி ஊரில்  வாழ்ந்து வருகிறார்.  சென்னையில் அவரது நண்பரான வானம் பத்திரிகையின் ஆசிரியர், கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். விஷயம் அறிந்த விஜய் ஆண்டனி மீண்டும் பத்திரிகையாளராக பணியாற்ற மகளுடன் சென்னை வருகிறார். பத்திரிகை ஆசிரியரின் கொலை நடிகரின் வெறித்தனமான ரசிகரால் செய்யப்பட்டது என்று அனைவரும் நம்ப விஜய் ஆண்டனிக்கு மட்டும் சந்தேகம் ஏற்படுகிறது. இதையடுத்து, அந்த கொலையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, தனது நண்பர் மட்டும் அல்ல மேலும் இதே முறையில் மாவட்ட கலெக்டர் என பல கொலை சம்பவங்கள்  நடந்திருப்பதை கண்டுபிடிக்கிறார்.  இறுதியில்  விஜய் ஆண்டனி கொலைக்கான காரணத்தை   கண்டுபிடித்தாரா? இல்லையா?  என்பதே ‘ரத்தம்’  படத்தின் கதை. புலனாய்வு நிருபராக  நடித்திருக்கும்  விஜய் ஆண்டனி எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.   கதாபாத்திரத்திற்கு  ஏற்ற சரியான தேர்வாகி இருக்கிறார
Image
கொலை தூரம்  ( திரில்லர் படம்)  மூன்று சகோதரிகளுக்கு மணமுடித்து அவர்களுக்கு ஒரு நல்வாழ்க்கையை ஏற்படுத்திவிட்டு பின்  வெளிநாடு சென்று விடுகிறான் நாயகன். பின் கடுமையாக உழைத்து ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகிறான்.  ஆஸ்தி அந்தஸ்து சொத்து எல்லாமே கிடைக்கிறது. தாய் நாட்டுக்கு  வருகிறான். பிறந்த மண்ணுக்கு வருகிறான்.தன் மூன்று சகோதரிகளும்  சேர்ந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். கணவன் னைவி இருவருக்கும் அளவு கடந்த அன்பு செலுத்தி வருகின்றனர். இவ்வேளையில் அவன் மீது கொலைப்பழி ஏற்படுகிறது. அந்த கொலைப்பழியிலிருந்து அவர் மீண்டாரா? யார் கொலைப்பழி ஏற்படுத்தியது? கொலை செய்யப்பட்டவர் யார் ?என்பதை க்ரைம் திரில்லர் சஸ்பென்ஸ்வுடன் கூறும் கதையே கொலை தூரம். ஹாசினி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை காதல் பதிவு, நந்திவரம், சினிமா கனவுகள் ஆகிய படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் இயக்குகிறார். யுவன் பிரபாகர் கதாநாயகனாக நடிக்க இவருடன் பிரபல பெங்களூர் மாடலிங் ஒருவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அப்புகுட்டி இமான் அண்ணாச்சி, பிரபு ராமானுஜம் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடிக்கின்ற