Posts

Showing posts from August, 2023
Image
*ஷாருக்கானின் 'ஜவான்' பிரீ ரிலீஸ் ஈவன்ட்* *'ஜவான்' பட நிகழ்வில் 'மான்- புலி -வேடன்' குட்டி கதை சொன்ன அட்லீ* *‘’தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ - ஷாருக் கான்* ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.  சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு,  அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன்,  கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குநர் ஷோபி, 'ஜவான்' படத்தை தமிழகம் மற்றும்  கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபால
Image
இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!  ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தந்த நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் !!  தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக,  பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.   தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் வர் நடித்த “சந்திரமுகி”  படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,   அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.  ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார்  நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன்  இணைந்து ப்ளாக்பஸ்டர் படம்  தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார்.  நாயகர்களுக்கு சமமாக  பெண் கதாப்பாத்திரங்களை  மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள்  ப்ளாக்பஸ்டர்  படங்களாக வ
Image
*பார்ட்டி மூடுக்கு இழுத்துச் செல்லும் கிங்கான் ஷாருக்கான் !, ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’  பாடல் வெளியானது* சமீபத்திய #AskSRK அமர்வு,  ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும்  திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில்  வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ' நாட்  ராமையா வஸ்தாவையா  ' பாடல் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ள 'நாட் ராமையா வஸ்தாவையா பாடல்,  பார்ட்டிக்கு அட்டகாசமான பாடலாக அமைந்துள்ளது. SRK இன் மாயாஜால வசீகரம் பாடலை அழகாக்குகிறது. இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில்  பாடலில்  ட்ரெண்ட்செட்டர் நடன அசைவுகள் இடம் பெற்றிருக்கிறது.  மேலும், மூன்று வெவ்வேறு மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் இந்தி பதிப்பில், "நாட் ராமையா வஸ்தாவையா" என்ற பாடல் வரிகளை  சமீபத்தில் பல வெற்றிப்பாடல்களை தந்த, மிக பிரபலமான பாடலாசிரியர் குமார்  எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர்,
Image
அடியே’ -  விமர்சனம் நாயகன் ஜீ.வி. பிரகாஷ்  சிறுவயதில் தன் பெற்றோரை இழந்துவிடுகிறார். நண்பர்களுடன் வளர்ந்துவரும் ஜீ.வி. பிரகாஷ்க்கு வாழவே பிடிக்காமல் போகிறது. தற்கொலைக்கு முயற்சிக்கும் நாயகன் ஜிவி பிரகாஷ், டிவியில் தனது பள்ளி பருவ காதலி கெளரி கிஷனை பார்க்கிறார். அவர் சொல்லும் ஒரு விஷயத்தால் மீண்டும் வாழ நினைப்பவர், அவரை மீண்டும் சந்திக்க முயற்சிக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு வேலை பார்க்கும்  ஆராச்சி  நிலையத்தில் இருந்து  ஒரு  முக்கியமான பொருள் காணாமல் போகிறது .ஜிவி பிரகாஷ் தன் காதலை எப்படியாவது கெளரிரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பவர், அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் போது விபத்து ஒன்றில் சிக்கி மயக்கமடைகிறார். கண் விழிக்கும் போது வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். யாரிடம் பேச வேண்டும் நினைத்தாரோ அவரே மனைவியாக இருக்குறார். இறுதியில்  ஜீ.வி. பிரகாஷ் நிஜ உலகத்தில் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா?  வெங்கட் பிரபுவிற்கு காணாமல் போன பொருள் கிடைத்தாரா? இல்லையா? என்பதே ’அடியே’  படத்தின்கதை. ஜீவி பிரகாஷ் ஜீவா மற்றும் அர்ஜுன்   இரண்டு வேடங்களிலும் கச்சிதமாக
Image
பார்ட்னர்’ -  விமர்சனம் ஊரில் நாயகன் ஆதி சொந்த தொழில் தொடங்குவதற்காக வாங்கிய 25 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப தர முடியாமல் போகிறது. ஆதியிடம் பணம் கொடுத்தவரோ குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை தர வேண்டும். இல்லையென்றால் உன் தங்கையை திருமணம் செய்துகொள்வேன் என்கிறார். தன் தங்கையின் வாழக்கையை காப்பாற்ற பணத்திற்காக சென்னைக்கு வருகிறார் நாயகன் ஆதி. சென்னையில் தன் நண்பன் யோகிபாபுவிடம் உதவி கேட்கிறார்  ஆதி, யோகிபாபு தான் வேலை செய்யும் இடத்திலேயே ஆதிக்கு வேலையும் வாங்கி கொடுக்கிறார், ஆனால் அது ஒரு திருட்டு கம்பெனி என்பது பிறகுதான் ஆதிக்கு தெரியவருகிறது. இந்நிலையில் விஞ்ஞானி பாண்டியராஜிடம் இருக்கும் சிப்பை திருடி தருமாறு ஒரு கொள்ளை கும்பல் யோகி பாபு மற்றும் ஆதியிடம் பேரம் பேசுகிறது. அந்தச் சிப்பை திருடுவதற்காக ஆதியும், யோகி பாபு பாண்டியராஜனின் ஆய்வுக்கூடத்திற்குள் செல்கிறார்கள்  .அங்கு ஏற்பட்ட குளறுபடியால் யோகி பாபு, ஹன்சிகா மோத்வானியாக மாறிவிடுகிறார்.  இறுதியில்  ஹன்சிகா யோகி பாபுவாக மாறினாரா, இல்லையா, எனபதே பார்ட்னர்’  படத்தின் கதை. ஆதி கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் இய
Image
‘கிங் ஆஃப் கொத்தா’ -  விமர்சனம் கொத்தா” என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடி சபீர் அங்கு கச்சா உள்ளிட்ட போதை வியாபாரத்தை செய்து வருகிறார். அந்த ஊருக்கு வரும் புதிய போலீஸ் அதிகாரி பிரசன்னா, ஷபீரின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து, அவரைப் பற்றி விசாரிக்கிறார். கொத்தா இதற்கு முன் துல்கர் கையில் இருக்க அவருடைய நண்பராக இருந்தவர் தான் இந்த சபீர் என்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில இவர்களுக்குள் விரோதம் உண்டாகிறது. பின்னர் துல்கர் காணாமல் போய்  விடுகிறான். தன்னை கேட்க யாரும இல்லை என்ற தைரியத்தில் சபீர்  மக்களை துன்புறுத்துகிறான். திடீரென்று  துல்கர் திரும்பி வந்து மக்களையும் குடும்பத்தையும் ரவுடி சபீரிடம் இருந்து காப்பாற்றுகிறார். இறுதியில்   “கொத்தாவை ” கைப்பற்றியது யார்? என்பதே ‘கிங் ஆஃப் கொத்தா’  படத்தின் கதை. ராஜுவாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் படம் தொடங்கி சிறிது நேரம் கழித்து திரையில் தோன்றினாலும் அவர் தோன்றிய பிறகு கதை விறுவிறுப்பாக நகர்கிறது. துல்கர் ஆக்ட்டிங் நல்ல வகையில் அமைந்தது என்று சொல்லலாம்
Image
’ஹர்காரா’ - விமர்சனம் தேனி மாவட்டத்தில் உள்ள கீழ் மலை எனும் கிராமத்தில் இருக்கும்  அஞ்சல் அலுவலகம் ஒன்றில் புதிதாக வேலைக்கு  சேர்கிறார் காளிவெங்கட் .இவருக்கு  மலை கிராமத்தில் பணியில் சேர்ந்ததிலிருந்து ஏராளமான தொந்தரவுகள் இருப்பதால் விரைவில் பணி மாற்றம் செய்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும்  நினைக்கிறார். ஆனால் மேல் அதிகாரியோ அங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவு  போடுகிறார். தபால்காரான  காளி வெங்கட், அதற்காக, அங்கிருக்கும் அஞ்சல் அலுவலகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு திட்டம் போடுவதோடு, அதை கிராம மக்களுக்கு தெரியாமல், அவர்கள் மூலமாகவே செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். தபால் நிலையத்தை மூட கலெக்டருக்கு மனு போடுகிறார்.இந்த சூழ்நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகிராமத்தின் முதன் முதலில் வாழ்ந்த மாதேஷ்வரன் என்ற ஹர்காராவை பற்றி தெரிந்து கொள்கிறார். இறுதியில் யார் இந்த ஹர்காரா ?  ஹர்காராவை மக்கள் காவல் தெய்வமாக கொண்டாட  காரணம் என்ன ?  ? எனபதே   ’ஹர்காரா’ படத்தின் மீதிக்கதை. கதை. தபால்காரராக நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போ
Image
புதிய அரசியல் ஆன்மீக      படமாக"அலப்பறை"  உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான்.ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான்.விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் தன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா?   என்பதே கதைகளம் என்கிறார் இயக்குனர். சி.எஸ்.கே சினிமா  தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார். கதையின்  நாயகனாக அசோக்குமார் நடித்துள்ளார். இவர் முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது,பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரபல இயக்குனரும் நடிகருமான "யார்" கண்ணனின்  மகள் சாயாதேவி நடித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன்,  'யார்"கண்ணன், "நமோ"நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம்,வலைப் பேச்சு ஜெ.பிஸ்மி, வேல்குமார் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர். ஒளிப்பதிவு- ஹரிதாஸ்  இசை-அபி ஜோ ஜோ பாடல்கள்-நிகரன் படத்த
Image
*சாதனை படைத்து வரும் லைக்காவின் 'சந்திரமுகி 2 ' படத்தின் இரண்டாவது பாடல் 'மோர்னியே* *ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் இரண்டாவது பாடல் 'மோர்னியே வெளியீடு* லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் படத்தில் இடம்பெற்ற 'மோர்னியே..' எனத் தலைப்பிடப்பட்ட இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை காஞ்சனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த
Image
*கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கும் வெற்றி துரைசாமி* விதார்த் -ரம்யா நம்பீசன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான 'என்றாவது ஒருநாள்'  திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றி துரைசாமி, தற்போது புதிதாக பெயரிடப்படாத கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.  2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'என்றாவது ஒரு நாள்'. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே உலக நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று, திரை ஆர்வலர்களின் பாராட்டையும் பெற்றது. இயக்குநர் வெற்றி துரைசாமி தற்போது இயக்கவுள்ள  திரைப்படத்தில் அனேக பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும் எனவும், மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக கிரைம் திரில்லர் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கும் வகையில் திரைக்கதை அமைந்திருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் நடிக நடிகையர், படக்குழு, டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
Image
*'ஜவான்' படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள்* ஷாருக்கானின் 'ஜவான்'  படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் ஆறு அதிரடி ஆக்சன் இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர்.  இது தொடர்பாக பட தயாரிப்பு குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் பகிர்ந்து கொண்டதாவது... '' ஜவான் படத்தின் சண்டை காட்சிகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு வியப்பளிக்கும் வகையிலான சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் பரந்த அளவிலான ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய திரைப்படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி... உற்சாகமூட்டும் பைக் காட்சிகள்... இதயத்தை தடதடவைக்கும் டிரக் மற்றும் கார் துரத்தும் காட்சிகள்... என பல வகையான சண்டைக்
Image
  *Auroville Foundation* We cordially invite you to the *PRESS CONFERENCE* to provide information about *‘The forthcoming Literature Festival at Auroville’* In the Presence of *Smt. Dr. Jayanti S. Ravi, I.A.S.* Secretary, AurovilleFoundation The Auroville Lit fest is supported by Auroville Foundation and Ministry of Culture and has also partnered with the Chennai International Centre and the Valley of Words Literature and Arts International Festival to truly make this Lit Fest, a rich and promising engagement and immersion for the literary lovers. We do look forward to meeting you at Press Conference and share with the readers at large the beautiful opportunity
Image
காதலால் உருவான  ராமர் பாலம்  இம்மாதம் 25 ல் (ஆகஸ்ட்)  வெளி வருகிறது  தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரு ஊர்களுக்கு இடையே பாலம் அத்தியாவசியமாகிறது. ஆனால் பாலம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.பல ஊர் சுத்தி செல்கின்றனர். இதனை அதிகாரிகளிடம் எடுத்துச் செல்கிறார்கள், அரசியல்வாதிகளிடம் முறையிடுகிறார்கள் ஆனால் எந்த பயனும் பலனும் இல்லை. ஆனால் திடீரென  பாலம் உருவாகும் சூழல் ஏற்படுகிறது. அது எவ்வாறு என்பதை கூறும் கதை. சினிமா கம்பெனி சார்பில் டாக்டர்.கர்ணன் மாரியப்பன்,  எம்.முருகேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், வின்சென்ட் செல்வா ஆகியோரிடம் பணிபுரிந்த  எம்.சண்முகவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மது கதாநாயகனாகவும் நிகிதா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளனர். ஒளிப்பதிவு- ஆனந்த சரவணன் இசை-கோபால் பாடல்கள்- கலைக்குமார் கவிபாஸ்கர் தயாரிப்பு-  டாக்டர்.கர்ணன் மாரியப்பன், எம்.முருகேசன்  கதை திரைக்கதை வசனம் இயக்கம்- எம் சண்முகவேல் இம்மாதம் 25ல் வெளிவருகிறது. ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார். -வெங்கட் பி.ஆ.ஓ
Image
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் “மை3” சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !!  சென்னை இந்தியா 2022: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3”  சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்  'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய,  பிரபல இயக்குநர்  ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.  இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை Trendloud நிறுவனம் மேற்கொண்டுள்ளது.  “மை3” டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ரா
Image
*”தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா” ; ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவில் நெகிழ்ந்த இசையமைப்பாளர் கீரவாணி* *”கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததே தாமதம் தான்” ; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்*   *“ஆடியன்ஸுக்கு நஷ்டம் வராமல் படம் எடுக்க வேண்டும்” ; மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன்* *ஐநபா சபையே ஆராதிக்க போகும் பாடலை ஜென்டில்மேன்-IIவுக்காக எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து* *ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்*  மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா நேற்று (19.08.23) எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது.   இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்
Image
ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’  -  விமர்சனம்  நாயகி நபிஷா சிங்கப்பூரில் உள்ள ஒரு  டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நாயகிக்கு அந்த  நிறுவனத்தின்  மூலம்   வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது,  சென்னை வந்த நாயகி தன் மருந்தகம் நடத்தும் நண்பரை சந்திக்கிறார் அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் நாயகியை பற்றி விசாரிக்கிறார். தன்னை ஏமாற்றிய இயக்குனரை  தேடி பழிவாங்க என்னும்  தயாரிப்பாளர் சைக்கோ ஜோ ஜியோவன்னி சிங்க்கு உடல் சோர்வுக்காக மாத்திரை சாப்பிட்டு படுக்கிறார். இதனையடுத்து  சில நாட்கள் கடந்த நிலையில்  சிங்கப்பூரில் மருத்துவ மனையில் சிகிச்சை. பெறுகிறார்  ஜோ ஜியோவன்னி சிங் .  திடீரென்று 2 டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.  மறுபக்கம், எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, அவருடைய அக்கா  நபிஷா ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை ஒன்றை சொல்கிறார். அதன்படி, ஆள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் சிக்காமல் எடுத்து
Image
*ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்* ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான 'ஜவான்' வெளியீட்டிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே சர்வதேச அளவில் அட்வான்ஸ் புக்கிங்கிற்காக திறக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் பகிர்ந்து கொண்டதாவது... '' அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் ஜவான் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் பல நாடுகளில் விரைவில் முன்பதிவு தொடங்கவுள்ளன. ஜவானுக்கான சர்வதேச திரையரங்க உரிமையாளர்களால் தொடங்கப்பட்டிருக்கும் முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான இந்த தனித்துவம் மிக்க நடவடிக்கை, ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதானின் அற்புதமான வெற்றிக்குப் பின் உருவாக்கப்பட்டது. மேலும் ஷாருக் கானின் திரைப்படம் இந்த பிராந்தியங்களில் வரலாற்று ரீதியாக பெறும் பெரும் எண்ணிக்கையின் பிரதிபலிப்பாகும். பொதுவாக அவர்கள் இதுபோன்ற முன்பதிவை தொடங்குவதில்லை. மற்ற திரைப்படங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த போதிலும், உலக அளவிலான திரையரங்க உரிமையாள
Image
*மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய  திரைப்படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்' டீஸர் வெளியானது !*  இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனின் உலகைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்- மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின்,  பான் இந்திய திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ் ! டீஸர் வழியே ஆரம்பமானது புலியின் படையெடுப்பு!!  டைகர் நாகேஸ்வர  ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து  வெளியான டைட்டில் லுக்கும் ரசிகர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனான டைகர் நாகேஸ்வர ராவின் உலகை தரிசிக்கும் நேரம்  இது. வம்சி இயக்கத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படம் “டைகர் நாகேஸ்வர ராவ்”  படத்தின் அதிரடியான டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மோசமான கொள்ளைச் சம்பவங்களைச் செய்த ஸ்டூவர்ட்புரம் கொள்ளையன் டைகர் நாகேஸ்வர ராவ் சென்னை மத்திய சிறையில் இருந்து தலைமறைவானது தொடர்பான செய்தி அறிக்கையுடன் இந்த டீஸர் வீடியோ தொடங்குகிறது. இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என்பதால் போலீ
Image
*ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய 'குஷி' திரைப்பட இசை நிகழ்ச்சி* விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.  இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா,  சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் 'குஷி' படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். 'குஷி' படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்த போது பார்வையாளர்களின் கரவொலி எழுப்பி ரசித்தனர்.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது