ரத்னம் - விமர்சனம் சிறுவயதில் தாயை பறிகொடுக்கும் விஷால் அங்கு உள்ள மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனியின் உயிரை காப்பாற்ற அன்றுமுதல் சமுத்திரக்கனியின் அரவணைப்பில் இருக்கிறார் விஷால் நாயகி ப்ரியா பவானி ஷங்கர், நீட் தேர்வு எழுத வேலூர் வருகிறார். அவரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொலை செய்ய முயற்சிக்க அதைத் தடுத்து, ப்ரியாவை காப்பாற்றுகிறார் விஷால்.ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் துடிப்பதை அறிகிறார் விஷால். இதனையடுத்து ஆந்திரா ராயுடு பிரதர்ஸ்களால் தொடர்ந்து நாயகி பிரியா பவானி சங்கருக்கு பிரச்சனை வருகிறது. இறுதியில் நாயகன் விஷால் நாயகி பிரியா பவானி சங்கக்கரை காப்பாற்றினாரா? இல்லையா? எனபதே ’ரத்னம்’ படத்தின் கதை. ரத்னம் கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் விஷால் அதிரடி நாயகனாக பட்டையை கிளப்பியிருக்கிறார். விஷால் கடுமையாக உழைப்பு அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. சண்டையில் மட்டுமின்றி அம்மா மீது பாசம் காட்டுவதிலும் இயல்பான
Posts
Showing posts from April, 2024
- Get link
- Other Apps
கொலை தூரம் - விமர்சனம் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் கணவன் யோசிக்காமல் எடுக்கும் விபரீத முடிவு அவனது வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை சொல்லும் திரைப்படம் ’கொலை தூரம் ’ இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக துபாய்க்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் யுவன் பிரபாகர் துபாயில் உடன் பணிபுரியும் நான்கு பேர் நண்பர்கள் ஆகிறார்கள் துபாயிலிருந்து 12 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வரும் நாயகன் யுவன் பிரபாகர் தங்கை இருவருக்கும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கிறார் தங்கைகள் இருவரும் சேர்ந்து அண்ணனுக்கு நாயகி சமந்துவை திருமணம் செய்து வைக்கிறார்கள் அழகாக சென்று கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் திடீரென புயல் வீச யுவனின் மனைவி சமந்து கடிதம் எழுதி வைத்து காணாமல் போகிறார் இதே வேளையில் துபாயில் வேலை செய்யும் நான்கு நண்பர்களின் மனைவிகள் ஒருவருக்கு பின் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்கள் இந்த வழக்கை போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது இறுதியில் இந்த தொடர் கொலைக்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பதை ’கொலை தூரம் படத்தின் கதை.
- Get link
- Other Apps
ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !! சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தரு வதாக உறுதியளித்தார்.
- Get link
- Other Apps
சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது - ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் பேச்சு தமிழ் சினிமா நடிகர்கள் கையில் தான் இருக்கிறது - ‘உழைப்பாளர் தினம்’ இயக்குநர் சந்தோஷ் நம்பீராஜன் ஆவேசம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறப்பது தமிழ் சினிமாவுக்கு அவமானம் - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர் காட்டம் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் 1000 கோடி சம்பாதிக்கவே அரசியல் கட்சி தொடங்குகிறார் - விஜயை விமர்சித்த ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர் ‘உழைப்பாளர் தினம்’ தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு நான் தயாரித்த 10 படங்களில் 8 படங்கள் பெரும் நஷ்ட்டத்தை கொடுத்தது - ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் உண்மையை சொன்ன தயாரிப்பாளர் நந்தகுமார் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது - ‘உழைப்பாளர் தினம்’ பட விழாவில் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம் படத்தின் இசை வெளியீ
- Get link
- Other Apps
கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"! ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் 'வேட்டைக்காரி'! படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, 'படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்' என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு வைரமுத்து! ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து! ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சனா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, காளிமுத்து காத
- Get link
- Other Apps
*கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்* *கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.* புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பட பட்டியலில் 'த கிரேட் இந்தியன் கிச்சன்', 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்', 'வடசென்னை', தேசிய விருது பெற்ற படமான 'காக்கா முட்டை', 'ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்', ' டக் ஜகதீஷ்', 'வானம் கொட்டட்டும்' என பல வெற்றி படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார். &
- Get link
- Other Apps
*நடிகை ஸ்ருதிஹாசனின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது !!* *கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான இந்த பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர்.* நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது. இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘இனிமேல்’ பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களுடனும் சித்தரிக்கிறது. இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது, இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்
- Get link
- Other Apps
*‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ - பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது* நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து. நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இன்ஸ்பெக்டர் ரிஷி இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. மும்பை, இந்தியா- 2024, ஏப்ரல் 18 - இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் அதன் உலகளாவிய பிரீமியரைத் தொடர்ந்து, பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடராக குறிபிடத்தக்க வகையிலான சாதனையை படைத்துள்ளது. மனதை ஆழ்ந்துபோகச் செய்யும் அதன் கதை சொல்லும் பாணி, பிரமாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த, திகில் க்ரைம் டிராமாவாக உருவாகியிருக்கிறது. அனைத்தையும் சந்தேகக் கண்களோடு அணுகும் ஒர
- Get link
- Other Apps
*'டியர்' படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு* நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான 'டியர்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'டியர்' திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர். இப்படம் வெளியான பிறகு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் தொடர் ஆதரவால் இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வ
- Get link
- Other Apps
*பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!* Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB. தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இரத்தம் பாயும் கரும் சிவப்பு நிற பின்னணியில்,
- Get link
- Other Apps
*'கல்கி 2898 AD' படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது.* நெமாவாரிலுள்ள 'நர்மதா காட்' எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு 'கல்கி 2898 AD'. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் தருணத்தில், 'கல்கி 2898 AD' படத்தில் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு, மத்திய பிரதேச மாநிலத்தின் புனித நகரமான நெமாவார் தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமையப் பெற்றிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது ரசிகர்களும், படக்குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். அமிதாப
- Get link
- Other Apps
‘ரூபன்’ - விமர்சனம் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் வசித்து வரும் தமப்திகள் நாயகன் விஜய் பிரசாத், நாயகி காயத்ரி ரெமாவுக்கு குழந்தை இல்லாததால் ஊர் மக்கள் அவர்களை அவமதிப்பதோடு, சுப நிகச்சிகளில் கலந்து கொள்ளவிடாமால் ஒதுக்கி வைக்கிறார்கள்.காடுகளில் கிடைக்கும் தேனை எடுக்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ககை நடத்தி வருகிறார் நாயகன் விஜய் பிரசாத் இந்நிலையில்,தேன் எடுக்க, காட்டுக்குச் செல்லும் நாயகன், அங்கு ஒரு கைக்குழந்தையை காண்கிறார். அந்த குழந்தையை எடுத்து வந்து தனது மனைவியிடம் தருகிறார். குழந்தை இல்லாத அந்த தம்பதி, குழந்தையை பாசத்துடன் வளர்க்கிறார்கள். இதற்கிடையில், காட்டில் விலங்குகளை வேட்டையாடும், வில்லன் கோஷ்டியினர் தாங்கள் செய்யும் தவறுகளை நாயகன் மீது போட, ஊர் மக்களும் நாயகனை தவறாகப் பார்க்கிறார்கள்.இந்த சூழலில், ஊர் மக்களில் சிலர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோடுகிறார்கள். அவர்களுடன் நாயகனும் சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார். ஆனால், ஊர் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், தன் மகன் மூலமாகவே மாலை போட்டு த
- Get link
- Other Apps
உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் ' ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இதில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக சோனியா அகர்வால் நடித்துள்ளார் . லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர். சோனியா அகர்வாலின் கணவராக கதையின் கதாநாயகனாக ஜினு இ தாமஸ் நடித்துள்ளார்.அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு
- Get link
- Other Apps
சிறகன்’ - விமர்சனம் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் நிருபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதே சமயம் தன் மகனை காணாவில்லை என தேடிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜீவா ரவியும் அவருடன் இருந்த ஜூனியர் வழக்கறிஞர் சானுவும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த இரண்டு கொலைகளை நேரில் பார்த்த பிரபல வழக்கறிஞர் கஜராஜ் மீது காவல்துறைக்கு சந்தேகம் வருகிறது. இதையடுத்து, தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத், தற்கொலை செய்து கொண்ட தனது தங்கையின் நினைவால் வாடுகிறார். இறுதியில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கொலையாளி யார்? இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’சிறகன்’ படத்தின் கதை. வழக்கறிஞராக நடித்திருக்கும் கஜராஜ் கோமாவில் இருக்கும் தனது மகளின் நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் அப்பாவின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் ஜிடி தொடர் கொலைகள் ஒரு பக்கம், இறந்த தங்கையின் நினைவு மறுபக்கம் என நடிப்பில் இரண்டையும் வேறுபடுத்திகாட்டியிருக்கிறார். ரா
- Get link
- Other Apps
On 6th April 2024 marking International A utism Awareness Month, the Honourable Governor to Tamil Nadu Shri RN Ravi visited the Aim for Seva - Swami Dayananda Krupa Home (Krupa) Campus in Sriperumbudur and inaugurated several new facilities including the residences, clinical station and training hall. He was accompanied in his tour of the facilities by Mrs. Sheela Balaji Managing Trustee, Swami Sakshatkrtananda Saraswathi and Shri. Ravee Malhotra (Trustees- Aim for Seva) and Dr. Ennapadam S Krishnamoorthy, founder- Buddhi Clinic and Trustee- Aim for Seva). The Honourable Governor in his inspirational address highlighted the need for long term care pointing out that the question that every parent of such a child carried in their minds was “what after me?”. In this context he described the facility as pioneering and landmark in concept and lauded Swami Dayananda Saraswathiji’s vision in establishing it many decades earlier. Many more such facilities will be required in Bhara
- Get link
- Other Apps
சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தைக் குறிக்கும் 6 ஏப்ரல் 2024 அன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் ஸ்ரீ ஆர்.என்.ரவி அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சேவைக்கான நோக்கம் - சுவாமி த யானந்த கிருபா இல்லம் (கிருபா) வளாகத்திற்குச் சென்று குடியிருப்புகள், மருத்துவ நிலையம், பயிற்சி கூடம் உள்ளிட்ட பல புதிய வசதிகளைத் திறந்து வைத்தார். அவருடன் அவரது வசதிகள் பற்றிய பயணத்தில் திருமதி ஷீலா பாலாஜி நிர்வாக அறங்காவலர், ஸ்வாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி மற்றும் திரு. ரவீ மல்ஹோத்ரா (அறங்காவலர்கள்- சேவாவின் நோக்கம்) மற்றும் டாக்டர். எண்ணபடம் எஸ் கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர்- புத்தி கிளினிக் மற்றும் அறங்காவலர்- சேவாவின் நோக்கம்). மாண்புமிகு கவர்னர் தனது உத்வேக உரையில், நீண்ட கால பராமரிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அத்தகைய குழந்தையின் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மனதில் எழுப்பும் கேள்வி "எனக்குப் பிறகு என்ன?" என்று சுட்டிக்காட்டினார். இந்த சூழலில் அவர் இந்த வசதியை முன்னோடி மற்றும் கருத்தாக்கத்தில் மைல்கல் என்று விவரித்தார் மற்றும் பல தசாப்தங்களுக்கு முன்னர் அதை நிறுவியதில் சுவாமி தயானந்த சரஸ்வ
- Get link
- Other Apps
வல்லவன் வகுத்ததடா’ - விமர்சனம் ஏடிஎம் காவலாளியாக பணியாற்றும் அருள் டி. சங்கரின் இளைய மகள் தனது காதலருடன் ஓடிவிட, அவருடைய மூத்த மகள் சுவாதி மீனாட்சி டாக்ஸி ஒட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் இவர் பார்த்து வந்த வேலை பறி போகிறது. சில மாதங்கள் கடந்த நிலையில் ஓடிப்போன இளைய மகள் கர்ப்பிணியாக தன் கணவருடன் அப்பா வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் மற்றும் பிரசவத்திற்காக வருகை தந்திருக்கும் இளைய மகளுக்கு..தந்தைக்குரிய கடமையை செய்ய, பைனான்சியர் ஒருவரிடத்தில் வட்டிக்கு பணம் வாங்குகிறார். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாகனத்தில் வீட்டிற்கு வரும்போது விபத்து ஏற்படுகிறது. இவர் வாங்கி வந்த 2 லட்சம் காணாமல் போகிறது சுவாதி மீனாட்சி அவரது தந்தை எடுத்து வந்த 2 லட்சம் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இவரது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இறுதியில் காணாமல் போன பணம் கிடைத்ததா? இல்லையா? சுவாதி மீனாட்சி தந்தையின் உயிரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’வல்லவன் வகுத்ததடா’ படத்தின் கதை. தே ஜ் சரண்ராஜ், ர
- Get link
- Other Apps
*ஜியோ ஸ்டுடியோஸ் - ஸ்டூடியோ கிரீன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு* ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸ் இணைந்து சியான் விக்ரமின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் தயாராகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'தங்கலான்' திரைப்படத்திலிருந்து முதல் காட்சி துணுக்கை (கிளிம்ப்ஸை) வெளியிடுகிறது. சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 'தங்கலான்' படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த