’J பேபி’ - விமர்சனம்
 ஊர்வசிக்கு  மாறன், தினேஷ்  இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால்  அடிக்கடி மறதி ஏற்பட்டு மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி பிரச்சினையை கொண்டு வருவது, அடிக்கடி எதாவது வில்லங்கம் செய்வது என இருக்கிறார் ஊர்வசி

திடீர் என  ஊர்வசி ஒருநாள் காணாமல் போக  அவர் கொல்கத்தாவின் ஹவுரா நகரில் இருப்பதாக அங்கிருக்கும் தமிழ் ராணுவ வீரர் மூலம் பிள்ளைகளுக்கு தகவல் கிடைக்கிறது. மூத்த மகன் மாறனும், இளையமகன் தினேஷும் அம்மாவை அழைத்துவர கொல்கத்தா செல்கிறார்கள். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் சில வருடம் பேசாமல் இருக்கின்றனர்.

இறுதியில் இப்படி பேசாமல் இருக்கும் இருவர் எப்படி  மொழி தெரியாத ஊரில் அம்மாவை கண்டுபித்தார்களா> இல்லையா?  என்பதே ’J பேபி’  படத்தின் கதை.
பேபியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி,அந்த தாயின்  கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.திறந்திருக்கும் வீட்டின் கதவுகளை பூட்டு போடுவதில் தொடங்கி, அடுத்தவர் வீட்டுக்கு வரும் கடிதங்களை காரணம் இன்றி எடுத்து பத்திரப்படுத்தி கண்ணில் பட்ட பணம், பொருளை அள்ளிக்கொண்டு போய் கஷ்டப்படும் மனிதர்களுக்கு  உதவி செய்வது வரை  அந்த கதாபத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் இவரை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது.
ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், இதுவரை  காமெடியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் இந்த படத்தின் மூலம் தன்னாலும் சிறப்பான நடிப்பை வழங்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். ஊர்வசியின் இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், அந்த கதாபாத்திரத்திற்கு  நியாயம் செய்யும் விதத்தில் நடித்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தில் பேபியம்மாவிற்கு  கொல்கத்தாவில் உதவி செய்த  ராணுவ வீரரான சேகர் நாராயணன், அதே கதாபாத்திரத்தில் படத்திலும் நடித்திருக்கிறார்  இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

ஊர்வசியின் இளைய மகளாக நடித்திருக்கும் மெலடி டார்கஸ், மூத்த மகளாக நடித்திருக்கும் தாட்சாயிணி, தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, மாறனின் மனைவியாக நடித்திருக்கும் சபீதா ராய் என அனைவரின் நடிப்பில் இயல்பாக இருந்தது.

டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கொல்கத்தாவின் தெருக்களை இயல்பு மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தனது பெரியம்மா பேபியின்  வாழ்க்கையில் நடந்த நிகழ்வை ஒரு முழுநீள திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி அதை மிக சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்..குறிஞ்சி பூ போல வந்திருக்கும் இந்த ’J பேபி’  திரைப்படம்.


நடிகர்கள் : ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், இஸ்மத் பானு

இசை : டோனி பிரிட்டோ

இயக்கம் : சுரேஷ் மாரி

மக்கள் தொடர்பு : குணா

Comments

Popular posts from this blog