ரணம்’ - விமர்சனம்
உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கிறார் நாயகன் வைபவ். அங்கு மற்றொரு உதவி இயக்குனராக பணி புரியும் சரஸ்மேனனை காதலிக்கிறார்.  ஒரு கட்டத்தில் இருவரும்  திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஒருநாள்  தனது  மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழ்ந்து வருகிறார்

இதனையடுத்து வைபவ். சினிமா தொழிலை விட்டு காவல்துறைக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்   வரைபட கலைஞராகவும் இருக்கும் வைபவ், அடையாளம் காண முடியாத பிணத்தின் முகத்தை தத்ரூபமாக வரைந்து கொடுத்து அந்த வழக்கை முடித்து வைக்க காவல் துறைக்கு உதவிகரமாக இருக்கிறார்

 சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடைக்கிறது. இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார்.   இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போக, வழக்கை விசாரிக்க  வரும்  இன்ஸ்பெக்டரான  தான்யா ஹோப்க்கு  பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் இந்த கொலைகளை  செய்தது யார்.?  கொலைக்கான காரணம் என்ன ? என்பதே ’ரணம்’  படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் வைபவ், இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்தில் சீரியஸ் ஆக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து நம்மை கவர்கிறார் சால்ட் & பெப்பர் லுக்கில் கதைக்கேற்ற கதாநாயகனாக தோன்றி அசத்தியிருக்கிறார்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தன்யா ஹோப் காக்கி உடையில் கம்பீரமாக வளம் வருகிறார்.  வைபவின் காதலியாக நடித்திருக்கும் சரஸ் மேனன், குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். கதையின் மையப்புள்ளியாக வரும் நந்திதா ஸ்வேதா, 10 வயது பெண் குழந்தைக்கு  அம்மாவாக நடித்து அசத்தி இருக்கிறார்.

வைபவின் நண்பராக நடித்திருக்கும் டார்லிங் மதன், காவலராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, விலங்கு கிச்சா ரவி, ஜீவா சுப்பிரமணியம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு துணை நிற்கிறது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளது.

 இறந்து போன பெண்களுடன் உடலுறவு கொள்ளும் மனித மிருகங்களை பற்றிய கதையை வித்தியாசமான முறையில் எடுத்திருக்கிறார்  இயக்குனர் ஷெரிஃப் எல்லா குற்றங்களுக்கும் தண்டனை இருப்பது போல இந்த பாலியல் குற்றத்திற்கு  தண்டனை கொடுக்கப்பட வேண்டும்  என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

நடிகர்கள்: வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன்

இசை: அரோல் கரோலி

இயக்கம்: ஷெரீப்

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்

Comments

Popular posts from this blog