ராயல்ஓக் ஃபர்னிச்சர் எக்ஸ்பன்ஷன் ஸ்பிரீ, திருவள்ளூரில் தனது 167வது கடையை தொடங்கியுள்ளது.
திருவள்ளூர், 23 பிப்ரவரி 2024: இந்தியாவின் புகழ்பெற்ற பர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக் ஃபர்னிச்சர், திருவள்ளூரில் ஒரு புதிய கடையைத் திறப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கடையைத் திறப்பதின் மூலம், இந்த பிராண்ட் நாட்டில் தனது 167வது கடையைத் துவக்குகிறது. மாபெரும் திறப்பு விழாவிற்கு ராயல்ஓக் இன்கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெடின் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம் அவர்கள் மற்றும் ராயல்ஓக் இன்கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குனர் திரு. மதன் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விரிவாக்கமானது, தமிழக மக்களுக்கு தரமான ஃபர்னிச்சர்களை வழங்குவதற்கான ராயல்ஓக்கின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பிரமாண்டமான திறப்பு விழாவில் ராயல்ஓக் குழுவிலிருந்து ராயல்ஓக் பர்னிச்சரின் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம், நிர்வாக இயக்குநர் திரு. மதன் சுப்ரமணியம், அவர்களுடன் விற்பனை மற்றும் செயல்பாடுகளின் துணைத் தலைவர் பார்த்தா பிரதீம் சௌத்ரி, விற்பனை மற்றும் வர்த்தகம் தலைவர் திரு. பிரசாந்த் எஸ் கோட்டியன், கிளஸ்டர் மேலாளர் நிதேஷ் கேஸ்வானி, விசுவல் மெர்கன்டைசர் தலைவர் திரேநேத்திரன் திலக் ஆகிய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
லைவ் சந்த் மேளா இசைக்குழுவினரின் உற்சாகமான மெல்லிசையின் பின்னணியில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது, ஒரு அற்புதமான பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த திறப்பு விழாவில் விருந்தினர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொண்டனர், இது ஒரு புதிய அத்தியாயத்திற்கான சிறப்புமிகு தொடக்கத்தைக் குறிக்கிறது.
12000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த கடையில், லிவிங் ரூம், படுக்கையறைகள், டைனிங் பகுதிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் விரிவான ஃபர்னிச்சர்கள் உள்ளன. திருவள்ளூரில் வசிப்பவர்கள் இப்போது பலவித ஸ்டைலில் மற்றும் செயல்பாட்டு அலங்கார பொருட்களை இங்கு கண்டிட முடியும். ராயல்ஓக் சோஃபாக்கள், படுக்கைகள், சாப்பாட்டு மேசைகள், நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள், மெத்தைகள், உட்புற அலங்காரப் பொருட்கள் மற்றும் அலுவலகம் மற்றும் வெளிப்புற ஃபர்னிச்சர்கள் ஆகியவற்றின் விரிவான தேர்வுகளை வழங்கும் அனைத்து வீட்டு அலங்காரத் தேவைகளுக்கும் செல்ல வேண்டிய இடமாகும். இந்த ஸ்டோர் தமிழ்நாட்டில் தனது பிராண்டின் இருப்பை அதிகரிக்கிறது, மேலும் இங்கு மொத்தம் 11 கடைகளை உருவாக்குகிறது.
வெளியீட்டு விழாவில் பேசிய ராயல்ஓக் பர்னிச்சர் தலைவர் விஜய் சுப்ரமணியம் பேசுகையில்: "எங்களது 167வது கடையின் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், எங்களுடைய தொடர் வளர்ச்சியில், ஒட்டுமொத்த ராயல்ஓக் குழுவிற்கும் இன்று ஒரு முக்கியமான நாள். தமிழ்நாட்டில் நாங்கள் விரிவுபடுத்துவதை குறித்து நாங்கள் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறோம், குறிப்பாக எங்கள் புதிய கடையை திருவள்ளூரில் தொடங்குவதில். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வாங்கிடக்கூடிய விலையில் உயர்தர பர்னிச்சர்களை வழங்குவதில் ராயல்ஓக்கின் அர்ப்பணிப்பை இது குறிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதை ஆவலுடன் எதிர்பார்த்து, அவர்களின் கனவு இல்லங்களுக்கான சிறந்த பொருட்களைக் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு உதவுவதால், உரிமம் பெற்ற உரிமையாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கடையில் அமெரிக்கா, இத்தாலி, துருக்கி, மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பிரத்தியேகமான 'நாடுகளின் தனித்துவமான மரச்சாமான்களின் சேகரிப்பு தொகுக்கப்பட்டு' உள்ளது. அதன் பிரத்யேகக் கடைகள் மூலம், ராயல்ஓக் நவீன, ஆடம்பரமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபர்னிச்சர் சலுகைகளுடன் வீடுகளின் அழகியலைக் கூட்ட விரும்புகிறது. 5 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களின் பரந்த வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கான தேவைகளை பிராண்ட் பூர்த்தி செய்து வருகிறது.
ராயல் ஓக் அனைத்து மெட்ரோ நகரங்கள் மற்றும் இந்தியாவின் தனித்துவமான 2ம் அடுக்கு மற்றும் 3ம் அடுக்கு நகரங்கள் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ளது. ராயல் ஓக், இந்திய ஃபர்னிச்சர் தயாரிப்பாளராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் நாகாலாந்து வரையிலும் அதன் பரந்த இருப்பைக் கொண்டுள்ளது.
இடம்: பிளாட் எண் R 64/4, ஆவடி பைபாஸ் சாலை காக்களூர், திருவள்ளூர்-602003, 33-தமிழ்நாடு. பிஓஎஸ்: 33 – தமிழ்நாடு.

Comments

Popular posts from this blog