’சலார்’ - விமர்சனம்
கான்சார்,என்பது ஒரு ராஜ்ஜியம்.அப்பகுதியில் மூன்று பழங்குடியினர் ஆட்சி நடத்துகிறார்கள்.  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது.  

சிறு வயதில் நண்பர்களான  பிரபாஸ் (தேவா) மற்றும் பிரித்விராஜ் (வரதராஜ மன்னார்). கான்சாரில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் பிரபாஸ் தன் தாயான ஈஸ்வரி ராவுடன் அங்கிருந்து வெளியேறி அசாமில்,கடந்த கால வாழ்க்கையை மறைத்து வாழ்ந்து வருகிறார்
நாயகி ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தந்தையை 7 வருடமாக ஒரு கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்போது ஸ்ரேயா ரெட்டி முன் பகைக்காக ஸ்ருதிஹாசனை கடத்தி வரச்சொல்கிறார்.இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து மகள் இந்தியா வந்துவிட்டதாகவும் நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறார்  

ஸ்ருதிஹாசனை காப்பாற்ற அவரை பிரபாஸிடம் அனுப்பி வைக்கிறார். மைம் கோபி அம்மா வாங்கிய  சத்தியத்திற்காக வன்முறை வேண்டாம் என்று ஒதுக்கி வாழ்ந்து வருகிறார் பிரபாஸ் ஒரு கட்டத்தில் எதிரிகளால் ஸ்ருதிஹாசன்  உயிருக்கு ஆபத்து வருகிறது. இறுதியில் பிரபாஸ் அம்மாவிடம் செய்த  சத்தியத்தை மீறி  நாயகி ஸ்ருதியை  காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரபாஸுக்கு கொடுக்கப்படும்  பில்டப் அவரும் பொருத்தமாக இருக்கிறது. வாட்டசாட்டமாக இருக்கும் அவருடைய ஒரு அடியே இடி போல் விழுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறது  பிரபாஸ். நண்பனுக்காக உருகும் காட்சிகளில் நம்மையும் கண் கலங்க வைத்துள்ளார். நாயகி ஸ்ருதிஹாசன் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
வில்லனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் .இரண்டாம் மனைவியின் மகனாக இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு அவமானப் படுத்தப்படும் போது நிராகரிப்பின் வலியை நமக்குள் கடத்தி செல்கிறார். நண்பனாகவும், துரோகியாகவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பிரித்விராஜ்.

ராஜம் மன்னார் வேடத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, பிரபாஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், ராஜம் மன்னாரின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய், மைம் கோபி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் இனிமை,பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.பவுன் கவுடாவின் ஒளிப்பதிவு திரையரங்கு உணர்வோடு காட்சிகளைப் பிரமாதப்படுத்தியிருக்கிறார்

முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் பேக்காக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் 


நடிகர்கள் : பிருத்வி ராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரிராவ், பாபி சிம்ஹா, ஜெகபதி பாபு, டினு ஆனந்த், ஸ்ரேயா ரெட்டி, ரமணா ராமச்சந்திரா ராஜு,

இசை : ரவி பசுருர்

இயக்கம் : பிரசாந்த் நீல்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Comments

Popular posts from this blog