’பொருளு’ - விமர்சனம்
தெருவில் அனாதையாக விடப்படும் குழந்தைகளை  எடுத்து வளர்க்கிறார்  மாற்றுத்திறனாளி ஒருவர் இவருடன் சேர்த்து ஒரு பெண் மற்றும் 5 ஆண் குழந்தைகளுடன் தெருவில் பிச்சையெடுத்து வாழ்ந்து  வருகின்றனர்..   எதிர்பாராதவிதமாக  ஒரு நாள் இரவு  இவர் வளர்த்து வரும் பெண்ணை இருவர் கற்பழித்து விட  அந்த பெண் மறுநாள் இறந்து விடுகிறாள்.
பெண் பிள்ளையின் சாவுக்கு காரணமானவர்கள் மாற்று திறனாளியையும் அடித்து கொலை செய்கின்றனர். இதை கண்டதும் கோபம் கொள்ளும் சிறுவன் ஏழுமலை, அக்கா மற்றும் வளர்ப்பு  தந்தை கொலை செய்தவர்களை  கற்களை கொண்டு அடித்து கொலை செய்கிறான் ஆதரவற்றவர்களாக  இருக்கும் இவர்களுக்கு  அடிதடி கட்ட பஞ்சாயத்து செய்து வரும்  மாறன் சிறுவன் ஏழுமலையை  தன்னுடன் சேர்த்து கொள்கிறான்  அனாதையான தன்  தம்பிகள் 4  போரையும் வெளிநாட்டில் தங்க வைத்து படிக்க வைக்க அனுப்புகிறான்.. ஏழுமலை

சில ஆண்டுகள் செல்ல பிராண பெண்ணான நாயகி  கரோலின் நாயகன் ஏழுமலையை  பார்த்தும் காதல் கொள்கிறார்.  ஆனால் நாயகன்   நாயகியின்  காதலை  ஏற்க மறுக்கிறான் மறுபுறம் ஊரே நடுங்கும்  பிரபல ரவுடி பிரம்மாவின் தம்பியை நாயகன் கொலை செய்ய  விடுகிறார்.  இறுதியில் நாயகன் நாயகியின் காதலை ஏற்காதற்கான காரணம் என்ன ?  வெளிநாட்டு சென்ற தம்பிகள் படிப்பை முடித்தார்களா? இல்லையா? என் பதே  ’பொருளு படத்தின் கதை .
நாயகனாக நடித்திருக்கும்  ஏழுமலை படத்தில்   நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர்  என்று மிக முக்கியமான மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளார்.  நாயகனுக்கு இது முதல் படம் போல இல்லாமல் மிக இயல்பான நடிப்பை  கொடுத்திருக்கிறார்.   காதல், ஆக்ஷன் , செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடைய நடிப்பை பார்க்கும்  போது  நடிகர் மற்றும் இயக்குனர் தருண் கோபியை பார்ப்பது போன்று இருக்கிறார்.

 கதாநாயகியாக   கரோலின் படத்தில் குறைவான காட்சிகள் இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். ஆனால் காதலுக்காக இவர்  எடுக்கும் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. படத்தில் நடித்த ,தீப்பெட்டி கணேசன்,பாய்ஸ் ராஜன்,மணிமாறன்,சாய் பூபதி  ஆகியோரும் கொடுத்த வேலையே சரியாக செய்திருக்கிறார்கள்.
 இசையமைப்பாளர் சௌந்தர்யன் இசையில்  பாடல்களும்  இனிமையாக இருக்கிறது.  ஏதோ நெஞ்சோரம் என்ற  பாடல்  காதலின்  வலியை  சொல்லும் பாடலாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.ஒளிப்பதிவாளர் வாசுதேவன்  ஒளிப்பதிவு  கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.
பெற்றோர்களால் அநாதையாக விடப்படும் குழந்தைகளின் நிலைமையை  சமூக அக்கறையோடு படத்தை உருவாக்கியிருக்கிறார்  அறிமுக இயக்குனர்  ஏழுமலை,
மக்கள் தொடர்பு : வெங்கட்

Comments

Popular posts from this blog