Posts

Showing posts from December, 2022
Image
ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.  இதனால் அவரது அம்மாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு வீட்டிலேயே இருக்கிறார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக டாக்ஸி ஓட்டுநர் வேலையை செய்கிறார்  ஐஸ்வர்யா  ராஜேஷ் பிரபல அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய  3 பேர் கொண்ட  கூலிப்படை. காரில் செல்லும் போது வழியில் விபத்துக்குள்ளாகிறது. இதனால் ஓலா வாகனத்தில் செல்ல முடிவெடுக்கின்றனர் மூவரும். அது ஐஸ்வர்யா ராஜேஷின் வாகனமாக இருக்கிறது. கூலிப்படையினர் மூவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் வாகனத்தில் ஏறிக் கொள்கின்றனர். கூலிப்படை என்று தெரியாமல் அவர்களுக்கு கால் டாக்ஸி ஓட்டுகிறார் ஐஸ்வர்யா. ஒரு கட்டத்தில் கூலிப்படை பற்றி  ஐஸ்வர்யாவிற்கு தெரிய வருகிறது. .இறுதியில்  ஐஸ்வர்யா கொலைகாரகர்களிடம் இருந்தது தப்பித்தாரா? இல்லையா?  ‘என்பதே டிரைவர் ஜமுனா’ படத்தின் மகதை. டாக்ஸி டிரைவராக நடித்திருக்கும் ஐஸ்வர்யா  ராஜேஷ் அற்புதமாக நடித்துள்ளார். சின்ன சின்ன அசைவுகள் மூலம் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்  அவர் காரை ஓட்டிக் கொண்டு நடித்திருப்பது அசாதாரணமானது. தனி ஆளாக படம் முழுவதையும் தனது தோளில் சுமந்து நிற்க
Image
*பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு* தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் படத்தில் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கலந்துரையாடல் நடத்தி, ஓட்டுனராக பணியாற்றிய போது நடைப
Image
*சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு* சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படமான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' நீ போதும் எனக்கு..' எனத் தொடங்கும் முதல் பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதாமணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண
Image
*சேரன் – ‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்* *“நான் அழுத்தமாக சொல்ல நினைத்த விசயத்தைத்தான் இசக்கி கார்வண்ணன் சொல்லியிருக்கிறார்.. சமூகத்திற்கான சிந்தனையில் அவர் என்னோடு நிற்கிறார் என்பதில் மகிழ்ச்சி".. ; தமிழ்க்குடிமகன் இயக்குனருக்கு சேரன் பாராட்டு* *தமிழ்க்குடிமகன் யாரை அடையாளப்படுத்துகிறான் ? ; இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் புதிய பாதை* *”குலத்தொழில் ஒழிந்து விட்டது. . ஆனால் குலம் இன்னும் இருக்கிறதே” ; தமிழ்க்குடிமகன் இயக்குநர் வேதனை*  *தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது* லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.  கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்
Image
*இறப்பு கம்பீரமானது என சொல்லும் ‘டியர் டெத்’* *பிரபல இயக்குனரின் பேரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியர் டெத்’* *சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள ‘டியர் டெத்’ டிச-30ல் ரிலீஸ்* SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது.. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அதேசமயம் நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் பற்றி தயாரிப்பாளர் சதீஷ் நாகராஜன் கூறும்போது, “என்னுடைய தாத்தா பி.எஸ் மூர்த்தி கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருந்தவர். தமிழில் போலீஸ்காரன் மகள், மாலையிட்ட மங்கை உள்ளிட்ட நூற்று

*மோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் டைட்டில் லுக் வெளியீடு*மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. 'ஆமென்' படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கிறார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் என்றும், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறார் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிஸரியுடன், மோகன்லால் இணைந்திருப்பதால் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Image
*மோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் டைட்டில் லுக் வெளியீடு* மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. 'ஆமென்' படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கிறார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் என்றும், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக  நடிக்
Image
நெடுநீர் ; விமர்சனம் சிறுவயதிலே நட்பாக பழகும் ஒரு சிறுவனும், சிறுமியும் சூழலால துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர். இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது. எட்டு வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது.  ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன். காதலுக்காக தாதாவை விட்டு விலகிச்செல்ல நினைக்கையில் தாத்தாவும் கோபப்படுகிறார்.. பழைய பகையும் அவனை துரத்துகிறது. அதிலிருந்து அவன் தப்பினானா ? இல்லை தாதாவின் கோபத்துக்கு ஆளானானா ? காதலர்கள் இணைந்தார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது. நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ராஜ்கிருஷ், சாது மிரண்டால் காடு கொள்ளாது, என்ற பழமொழிக்கு ஏற்றபடி அமைதியான முகமாக இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.  முதல் படம் போல் இல்லாமல் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து கவர்கிறார். நாயகியாக நடித்திருக்க
Image
*பாராட்டுகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அமலா பாலின் 'தி டீச்சர்'* நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி டீச்சர் ' எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 23ஆம் தேதியன்று 'தி டீச்சர்' வெளியானது. நடிகர்கள் ஹக்கீம் ஷாஜகான், செம்பன் வினோத், கல்யாணி, மஞ்சு பிள்ளை, நந்து, மாலா பார்வதி, தினேஷ் பிரபாகர், கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன், அனுமோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'தி டீச்சர்' படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, ப்ருத்வி ராஜ் மற்றும் VTK பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில்
Image
பாசக்கார பய ; விமர்சனம் கிராமத்தில் உள்ள பணக்கார இளைஞன் பிரதாப், தாயில்லாமல் தந்தையுடன் வசிக்கும் காயத்ரியை விரும்புகிறார். ஆனால் காயத்ரியோ ஜெயிலில் இருக்கும் தனது தாய்மாமன் விக்னேஷை தான் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறி பிரதாப்பின் காதலை மறுக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பி வரும் விக்னேஷ் தன் மாமன் மகள் தன் மீது வைத்துள்ள அன்பை உணர்ந்தாலும் காயத்ரியை தன் மனைவியாக ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் பிரதாப்பிற்கும் காயத்ரிக்கும் தொடர்பு இருப்பதாக கூட அபாண்டமாக பழி சுமத்துகிறார். விக்னேஷ் எதற்காக இப்படி செய்கிறார் ? காயத்ரி விக்னேஷை மணந்தாரா ? இல்லை காயத்ரியுடன் பிரதாப்பின் காதல் கை கூடியதா என்பது மீதிக்கதை. ஒரு கிராமத்தில் நடக்கும் காதல், வட்டிக்கு பணம் கொடுத்து ஏழைகளை துன்புறுத்தும் வில்லன், சகோதரிக்காக ஜெயிலுக்கு சென்ற தம்பி என எதார்த்த மனிதர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள். நீண்ட நாளைக்கு பிறகு நடிகர் விக்னேஷை ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் பார்க்க முடிவது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜெயிலில் இருக்கும் போதும் சரி, கிராமத்தி
Image
*சர்வதேச திரைப்பட விருதை வென்ற 'ஆதார்'* சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை‌ நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில் வெளியான 'ஆதார்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி சசிகுமார் வழங்க, இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஆதார்'. எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம், வெளியாகி விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் 'ஆதார்' திரைப்படத்தை நடுவர்களும், பார்வையாளர்களும் கண்டு ரசித்து பாராட்டினர்.  இதனைத் தொடர்ந்து சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதிற்கு, &
Image
*என்ஜாய் ; விமர்சனம்*  முழுக்க முழுக்க இளைஞர்களை  குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘என்ஜாய்’. டைட்டிலுக்கு ஏற்றபடி இரண்டு மணி நேரமும் படம் பார்ப்பவர்களை என்ஜாய் பண்ண வைத்துள்ளதா இந்த படம் ? பார்க்கலாம். ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள். அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் நட்பாகிறார்கள். ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின். காதலி இருந்தாலும், சின்னச்சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ சரியான சபலிஸ்ட். திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ண நண்பர்கள் மூவரும் (இன்ப) சுற்றுலா கிளம்பி செல்கிறார்கள். அதே
Image
*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்”*  சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.  முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.  ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன். இந்த படைப்பிற்காக நூற்றுக்கும்
Image
கே.முரளீதரன் நினைவஞ்சலி | தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான கே.முரளீதரன் அவர்களின் நினைவஞ்சலியில் திரை உலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர். " எல்.எம்.எம்.என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர்தான் கே.முரளிதரன். தயாரிப்பாளர் சங்கத்தில்  பொருளாளராகவும், பின்னர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றியவர். அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், புதுப்பேட்டை , அன்பே சிவம், சகலகலாவல்லவன், உன்னைத் தே டி, வீரம் வெளஞ்ச மண்ணு, போன்ற படங்களை தயாரித்தவர். நூற்றுக்கும் அதிகமான படங்களுக்கு பண உதவி செய்தவர். தயாரிப்பாளர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர் என கலந்துகொண்ட அனைவரும் உருக்கமாக பேசினார்கள். அவருடைய நினைவஞ்சலி கூட்டத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பிலிம்சேம்பர் வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.
Image
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ -  விமர்சனம் அவதார்’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் நவிக்கள் வாழும் பண்டோரா உலகத்தை அழித்து, அந்த இடத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்வார்கள். இதில் நாயகன் ஜாக் சல்லிக்கும், கர்னல் மைல்சுக்கும் இடையில் யுத்தம் நடக்கும். இதில் கர்னல் தோற்று விட, பண்டோராவை விட்டு ஆகாயவாசிகள் சென்று விடுவார்கள். அதன் பிறகு ஜாக் சல்லியும் நேத்ரியும் தங்களுடைய குழந்தை சகிதமாக மகிழ்ச்சியாக பண்டோரா உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பெரும் படையுடனும் ஆயுத பலத்துடனும், நாயகன் ஜாக் சல்லியை அழிக்க கர்னல் வருகிறார். அவரிடமிருந்து தப்பிக்க ஜாக் சல்லியும் அவனது குடும்பமும் கடல்வாசிகளான மெட்கயினாவுடன் அடைக்கலம் ஆகிறார்கள். அங்கேயும் ஜாக் சல்லியை தேடி கர்னல் நெருங்குகிறார். கடல் வாழ் ராட்சத மீன்களின் அபூர்வ திரவத்தை மனித இனத்தின் தேவைக்காக அபகரிக்க முயலும் இன்னொரு குழுவும் இன்னொரு திசையிலிருந்து வருகிறார்கள். கடல்வாசிகளும் வனவாசிகளும் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்?  ஜாக் சல்லி தனது குடும்பத்தினரை காப்பாற்றினார்?  இல்லையா? என்பதே ’அவதார்: தி வ
Image
*இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த,  ஃபேமிலி எண்டர்டெயினர்* *“காபி வித் காதல்” திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது* சென்னை (டிசம்பர் 16, 2022):* சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்திய ஓடிடியில்  வெளிவந்த ‘காபி வித் காதல்’ 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நட்சத்திர நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் ஃபேமிலி என்டர்டெய்னர் நவம்பர் 4, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டிசம்பர் 9, 2022, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம்  பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான  பொழுதுபோக்கு திரைப்படங்களை  உருவாக்குவதில் சுந்தர் சி வல்லவர். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான 'காபி வித் காதல்' பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. தமிழின் முன்னணி நடிகர்கள் ஜீவா
Image
*திருமண வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும் அட்லீ- பிரியா அட்லீ தம்பதி.* *மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அட்லீ & பிரியா அட்லீ* தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ.  அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ,  ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் "ஜவான் " படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.  இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியா
Image
*போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான 'கலியுகம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் :கலியுகம்'. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை', 'விட்னஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கே. ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பணியை ஏற்றிருக்கிறார். சக்தி வெங்கட்ராஜ்  கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை நிம்ஸ் மேற்கொண்டிருக்கிறார். சண்டை காட்சிகளை ஜி.என். முருகன் அமைக்க, ஆடை வடிவமைப்ப
Image
என்.ஜீவானந்தம் தயாரிப்பில் முக்கிய கேரக்டரில் ராதாரவியும் கதையின் நாயகியாக பாடகி ராஜலட்சுமியும் நடிக்கும் " லைசென்ஸ்" ஜெ.ஆர்.ஜி. புரொடக்சன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிக்கும் "லைசென்ஸ்". படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார். கதையின் நாயகியாக பிரபல மேடை பாடகி ராஜலட்சுமி செந்தில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் தான் " என்ன.. மச்சான்..., மற்றும் ஏ...சாமி. போன்ற சூப்பர்ஹிட் பாடல்களை படங்களில் பாடி அசத்தியவர். இவர் நடிக்கும் முதல் படமிது. கணவன்-மனைவி பாசம், அண்ணன்-தங்கை பாசம், உடன்பிறந்த சகோதரர்களின் பாசம், தாய் - மகள் பாசம் இவைகளை எடுத்துக்காட்டிட நிறைய படங்கள் வந்துள்ளது. அதேசமயம் தந்தை-மகள் பாசத்திற்காக வந்த படங்கள் குறைவுதான்.அந்த வகையில் பாரதி படைத்த புதுமைப்பெண்ணாக ராஜலட்சுமி தந்தையுடன் களத்தில் சாதிக்கபோகும் படம் தான் லைசென்ஸ் என்று தயாரிப்பாளர் என்.ஜீவானந்தம் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் " கணபதி பாலமுருகன் என்னிடம் இந்த கதையை பற்றி சொன்னார். அதுவரை சினிமா மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு இ