மஹாவீர்யர் (மலையாளம்) ; விமர்சனம்

மன்னர் லாலுவுக்கு ஒருநாள் இரவில் திடீரென தொடர் விக்கல் ஏற்படுகிறது. என்ன வைத்தியம் பார்த்தும் அது குணமாகவில்லை. இந்நிலையில் மந்திரி ஆசிப் அலியை அழைத்து, வைத்தியமெல்லாம் இனி வேண்டாம், இந்த நாட்டிலேயே அழகான பெண் ஒருத்தியை அழைத்து வா.. அவளுடன் சில காலம் சந்தோஷமாக வாழவேண்டும் என உத்தரவிடுகிறார்.. இளம்பெண்ணை தேடி கிளம்புகிறார் மந்திரி ஆசிப் அலி.
மற்றோரு  புறம் , கிராமம் ஒன்றுக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது சாமி சிலையை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்காக தானே வாதாடி அவர்களது சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி.
இந்த நேரத்தில் தான் ராஜா லாலுவின் மீது கிராமத்து ஏழைப்பெண் கொடுத்துள்ள புகார் அதே நீதிமன்றத்துக்கு வர, ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். ராஜாவுக்காக இளம்பெண்ணை தேடிப்போன மந்திரி ஆசிப் ஆலி, கிராமத்தை சேர்ந்த அழகிய பெண்ணான தான்வியை வலுக்காட்டாயமாக இழுத்து வந்து ராஜாவிடம் ஒப்படைக்கிறார். ராஜா தன்னை துன்புறுத்தியதாக தந்தை மூலமாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறார் தான்வி,.

நிவின்பாலியின் வழக்கு சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டு ராஜாவின் வழக்கு விசாரிக்கப்படுகிறது,. ராஜா எதற்காக அந்த இளம்பெண்ணை அழைத்து வரச்சொன்னேன் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறார். நீதிமன்றம் அவர் சொன்ன காரணத்தை கேட்டு, அவருக்கு உதவி செய்வதற்காக அந்த இளம்பெண்ணை சித்தரவதை செய்கிறது.. நம்புங்கள்.. . இதை காண பொறுக்காத சாமியார் நிவின்பாலி, இதற்கு தான் சமூகமாக தீர்வு காண்பதாக கூறுகிறார்.  இளம்பெண் மூலமாக ராஜாவின் பிரச்சனைக்கு அப்படி என்ன தீர்வு கிடைக்க இருக்கிறது..?  என்பதே படத்தின் மீதிக்கதை.


ராஜாவாக வரும் நடிகர் லால் விக்கல் பிரச்சனையால் சிரமப்படுவதையும், ராஜா என்கிற அகங்காரத்தை வெளிப்படுத்துவதையும் நன்றாகவே செய்திருக்கிறார். விசுவாசமான மந்திரியாக இளம் நடிகர் ஆசிப் அலி, நிவின்பாலியை விட ஸ்கோர் செய்கிறார் என்பதே உண்மை. நாயகியாக நடித்துள்ள ஷான்வி ஸ்ரீவாத்சவ், அப்பாவி பெண்ணாக அழகில் அசத்துகிறார். அதேசமயம் நீதிமன்றத்தின் இறுதி காட்சிகளில், குறிப்பாக சில நிமிடங்கள் வரை அரை நிர்வாணமாக நடித்து நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார். நிச்சயம் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு..

பாதிப்படத்திற்கு மேல் நீதிமன்ற அறையிலேயே கதை நகர்கிறது. நீதிபதியாக வரும் சித்திக், வழக்கறிஞராக வரும் லாலு அலெக்ஸ், நீதிமன்றத்தில் மற்ற வழக்கிற்காக வந்த விவாகரத்து தம்பதி, அந்த போலீஸ் கான்ஸ்டபிள் என பலரும் ரசிக்கும்படியான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.  சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவு , இஷான் சாப்ராவின் இசை  சிறப்பு

1983, ஆக்சன் ஹீரோ பைஜூ என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைன் - நிவின்பாலி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது  முறையாக இணைந்திருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog