பெஸ்டி’ -  விமர்சனம்
 ஆர்.எஸ்..சினிமா டாக்டர் ஆர்.சாரதிராஜா  தயாரிப்பில்  ரங்கா இயக்கத்தில்  அசோக், யாஷிகா  ஆனந்த் , மாறன், சேஷூ , அம்பானி சங்கர் ஜீவா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பெஸ்டி’
அசோக், யாஷிகா ஆனந்த்  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்குகிறார்கள். அங்கே இருவரும் நெருக்கமாகும் போதெல்லாம் யாராவது வந்து அவர்களை தொந்தரவு செய்வதோடு, யாஷிகா ஆனந்தை அமானுஷ்ய சக்தி ஒன்று அச்சுறுத்தவும் செய்கிறது.  யாஷிகாவுக்கு நடந்ததை நம்ப மறுக்கிறார் அசோக்,   திடீரென்று யாஷிகாவுக்கு நடந்தது போன்ற அமானுஷ்ய அச்சுறுத்தல் அசோக்கிற்கு நடக்கிறது. இறுதியில் ஒரே மாதிரியான சம்பவம் இருவருக்கும் நடப்பதற்கான காரணம் என்ன? என்பதை திகிலாக சொல்லியிருக்கும்   பெஸ்டி’
யாஷிகா ஆனந்த்  அசோக் இவர்களை சுற்றியே படம் முழுவதும் நகர்கிறது. நாயகன் அசோக் பிளே பாய் கதாபாத்திரத்தில் தனது  நடிப்பை கொடுத்திருக்கிறார்.  நாயகி யாஷிகா ஆனந்த்   கவர்ச்சியாகவும் நடிப்பில் இயல்பாகவும் செய்திருக்கிறார். படத்தில் இவர்களுடன் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளுசபா ஜீவா நடித்துள்ளானர்.
திகில் படத்திற்கு ஏற்ற இசையை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் ஜே.வி, பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.ஆனந்த், தனது பிரேம்கள் மூலம் வித்தியாசமாக காட்டியிருப்பதோடு, திரும்ப திரும்ப வரும்  காட்சிகளை அழகாக படம்பிடித்து காட்டிட்டியிருக்கிறார்.
திகில் சம்பவங்கள் மூலம் திரைக்கதை பரபரப்பாக இயக்கியிருக்கும் இயக்குனர் ரங்கா  சோசியல் மெசஜோடு நல்ல திகில் படத்தை பார்த்த அனுபவத்தை  கொடுத்திருக்கிறார்.
நடிகர்கள் : அசோக், யாஷிகா  ஆனந்த் , மாறன், சேஷூ , அம்பானி சங்கர் ஜீவா

இசை : ஜே.வி,

இயக்கம் :  ரங்கா

மக்கள்  தொடர்பு : விஜய முரளி

Comments

Popular posts from this blog