Posts

Showing posts from July, 2022
Image
*லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ்  இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு !*  லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில்,    இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில்,   தமிழ் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது, பொன்னியின் செல்வன் திரைப்படம்.  தமிழ் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திர கூட்டணியில் பிரமாண்ட படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று பிரமாண்ட விழாவில், எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.  இவ்விழாவினில் கலந்துகொண்ட  நடிகர் கார்த்தி பேசியதாவது.., இங்கு இந்த இடத்தில் ரசிகர்களுடன் இந்த பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இந்த படத்தின் கதை அனைவருக்கும் தெரியும், ஆனாலும் படம் எப்படி இருக்கும் எ
Image
குலு குலு’ - விமர்சனம்  சந்தானம் வெவ்வேறு நாட்டில் நாடோடியாக பயணம் செய்து பல மொழிகளை கற்றுக்கொண்டு இறுதியாக சென்னையில் தனக்கென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.உதவி என்று யார் வந்து கேட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்கிறார் சந்தானம். ஒரு நாள், தங்களது நண்பன் கடத்தப்பட்டுவிட்டதாக கூறி சந்தானத்திடம் உதவி கேட்டு சில இளைஞர்கள் வருகிறார்கள். உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய புறப்படும் சந்தானம் அவர்களுடைய நண்பனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே  ‘குலு குலு’  படத்தின் கதை. கூகுள் என்ற கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார்.   நகைச்சுவையில் கலக்கி வந்த சந்தானம் இந்த படத்தில் நேர்மாறாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.  செண்டிமெண்ட், சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படும் விதம் என கதாபாத்திரத்துடன் ஒ ன்றி போய் இருக்கிறார் கதாநாயகியாக அதுல்யா சந்திரா நடித்திருக்கிறார். வில்லனாக பிரதீப் ராவத் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் , நமிதா கிருஷ்ணமூர்த்தி, சாய் தீனா, கவி, லொள்ளு சபாவின் சேசு, மா
Image
மஹாவீர்யர் (மலையாளம்) ; விமர்சனம் மன்னர் லாலுவுக்கு ஒருநாள் இரவில் திடீரென தொடர் விக்கல் ஏற்படுகிறது. என்ன வைத்தியம் பார்த்தும் அது குணமாகவில்லை. இந்நிலையில் மந்திரி ஆசிப் அலியை அழைத்து, வைத்தியமெல்லாம் இனி வேண்டாம், இந்த நாட்டிலேயே அழகான பெண் ஒருத்தியை அழைத்து வா.. அவளுடன் சில காலம் சந்தோஷமாக வாழவேண்டும் என உத்தரவிடுகிறார்.. இளம்பெண்ணை தேடி கிளம்புகிறார் மந்திரி ஆசிப் அலி. மற்றோரு  புறம் , கிராமம் ஒன்றுக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது சாமி சிலையை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்காக தானே வாதாடி அவர்களது சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி. இந்த நேரத்தில் தான் ராஜா லாலுவின் மீது கிராமத்து ஏழைப்பெண் கொடுத்துள்ள புகார் அதே நீதிமன்றத்துக்கு வர, ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். ராஜாவுக்காக இளம்பெண்ணை தேடிப்போன மந்திரி ஆசிப் ஆலி, கிராமத்தை சேர்ந்த அழகிய பெண்ணான தான்வியை வலுக்காட்டாயமாக இழுத்து வந்து ராஜாவிடம் ஒப்படைக்கிறார். ராஜா தன்னை துன்புறுத்தியதாக தந்தை மூலமாக நீதிமன்றத்தி
Image
அந்த இரவில் " குறும்  நடித்து  இயக்கியவர் ஆதேஷ் பாலா.      : நடிகர் பாக்கியராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட நடிகன். முதன் முதலாக ஒரு கதையின் கதை படத்தில் அறிமுகமான நடிகர். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, மம்பட்டியான், சவரகத்தி, பேட்டை, திமிரு பிடிச்சவன் போன்ற இதுவரை 70-கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து கொண்டு இருப்பவர். இதுமட்டுமில்லாமல் பொண்டாட்டி, நிக்குமா நிக்காதா,  பெரியபழுவேட்டரையர், அந்த இரவில் உள்ளிட்ட 7 குறும்படங்களில், சிலவற்றில் சிங்கிள் ஷாட் நடிப்பிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடிப்பவர். இத்தனை பெருமக்களுக்கும் சொந்தக்காரர் யாருன்னா, தூறல் நின்னு போச்சு, இணைந்த கைகள், காதல் பரிசு உள்ளிட்ட 350-கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் சிவராமனின் மகன் தான் நடிகர் ஆதேஷ் பாலா.  அந்த இரவில் 10 நிமிடம் சிங்கிள் சாட் குறும்படம் ந டிகர் ஆதேஷ் பாலா நடித்து மற்றும் இயக்கி உள்ளார
Image
*'சீதா ராமம்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு* *துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய அப்டேட்* *துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு* நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்: எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவ
Image
*மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் 'கார்த்திகேயா 2'* People Media Factory மற்றும் Abhishek Agarwal Arts வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும்  (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்பர்நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும்.  இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். TG விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் இணைந்து தயாரிக்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர், கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்பதிவில், கால பைரவா  இப்படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திகேயா மீண்டும் வந்துவிட்டார்; முன்னிருந்ததை விட சிறப்பான முறையில் திரும்பியுள்ளார். இந்த முறை எல்லாம் மனுஸ்மிருதியின் படி நடக்கும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதிரக்ஷிதஹ் தஸ்மாத் தர்மோ ந ஹந்தவ்யோ மா நோ தர்மோ ஹதோ'வதீத்” - அதாவது "நீதி நம்மை பாதுக்காக்கிறது, கறை படிந்த கைகளால் நீதி
Image
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் அடுத்ததாக, நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினை பிரத்யேகமாக நேரடி திரைப்படமாக வெளியிடுகிறது * ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு  தயாரிப்பில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள “வட்டம்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக,  உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. .* சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக  சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'வட்டம்' படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில்,  எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்த தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையைய
Image
*“மை டியர் பூதம்”குழந்தைகளின்  அழகான உலகத்தை நமக்கு காட்டும் -  இயக்குநர் N ராகவன்* அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது…  என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா, கடம்பன் ஆக்சன் டிராமா, எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது  ஆசை அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் என தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகை சொல்லும் படங்கள் இப்போது  அதிகமாக இல்லை எனவே அதை சொல்லலாம் என நினைத்தேன். குழந்தைகள் உலகை புரிந்து கொள்வதற்காக முழுக்க என் மகளோடு நிறைய பழகினேன். குழந்தைகள் என்னென்ன

Image
மொபைல் திரையரங்கில் முதல் திரைப்படம்                                                                                                                  பெஸ்ட்டி இதுவரை திரைப்படங்கள் திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் தற்போது OTT  தளங்களிலும் வந்தது வந்து  கொண்டும் இருக்கிறது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக  உள்ளங்கையில் உள்ள அமொபைல் திரையரங்கில் முதல் திரைப்படம்                                                                                                                  பெஸ்ட்டி இதுவரை திரைப்படங்கள் திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் இ ணையதளங்களிலும் தற்போது OTT  தளங்களிலும் வந்தது வந்து  கொண்டும் இருக்கிறது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக  உள்ளங்கையில் உள்ள அ லைபேசியை திரையரங்கங்களாக மாற்றி தமிழ் திரையுல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுள்ளது.      இதன் முதல்படியாக மூவி டு மொபைல் (MTM) என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கடந்
Image
*மாயோனுக்கும்,  பக்ரீத் பண்டிகைக்குமான தொடர்பு !* *மாயோனையும் பக்ரீத்தையும் இணைக்கும் நிலா !* ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம், எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக “மாயோன்” திரைப்படக்குழு   “பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது.   புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை  என பரபர திரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களை கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பை தொடர்ந்து,  திரையரங்குகள்  எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.   “மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு ஒரு அழகான தொடர்பு உண்டு அது தான் நிலா” என்று தயாரிப்பு நிறுவன டிவிட்டர் பக்கத்தில் பகிரபட்டிருக்கிறது. தேசமெங்கும் அன்பை பரப்புவோம் என்பதை முழக்கமாக முன்னெடுக்கும் விதமாக பக்ரீத் பண்டிகையை அனைவரும் அன்போடு கொண்டாடுவோம் என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாயோன் படக்குழு.  மாயோன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பெரும் பொருட்ச் செலவில், நமது பாரம்பரிய பெருமைகளை
Image
பெஸ்டி’ -  விமர்சனம்  ஆர்.எஸ்..சினிமா டாக்டர் ஆர்.சாரதிராஜா  தயாரிப்பில்  ரங்கா இயக்கத்தில்  அசோக், யாஷிகா  ஆனந்த் , மாறன், சேஷூ , அம்பானி சங்கர் ஜீவா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பெஸ்டி’ அசோக், யாஷிகா ஆனந்த்  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்குகிறார்கள். அங்கே இருவரும் நெருக்கமாகும் போதெல்லாம் யாராவது வந்து அவர்களை தொந்தரவு செய்வதோடு, யாஷிகா ஆனந்தை அமானுஷ்ய சக்தி ஒன்று அச்சுறுத்தவும் செய்கிறது.  யாஷிகாவுக்கு நடந்ததை நம்ப மறுக்கிறார் அசோக்,   திடீரென்று யாஷிகாவுக்கு நடந்தது போன்ற அமானுஷ்ய அச்சுறுத்தல் அசோக்கிற்கு நடக்கிறது. இறுதியில் ஒரே மாதிரியான சம்பவம் இருவருக்கும் நடப்பதற்கான காரணம் என்ன? என்பதை திகிலாக சொல்லியிருக்கும்   பெஸ்டி’ யாஷிகா ஆனந்த்  அசோக் இவர்களை சுற்றியே படம் முழுவதும் நகர்கிறது. நாயகன் அசோக் பிளே பாய் கதாபாத்திரத்தில் தனது  நடிப்பை கொடுத்திருக்கிறார்.  நாயகி யாஷிகா ஆனந்த்   கவர்ச்சியாகவும் நடிப்பில் இயல்பாகவும் செய்திருக்கிறார்.  படத்தில் இவர்களுடன் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு