‘தீயவர் குலை நடுங்க’ - விமர்சனம்
பிரபல எழுத்தாளரான லோகு மன அழுத்தத்தின் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரத்த்தில் காரில் சென்று கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் காரை விபத்துக்குள்ளாக்கி லோகுவை கொடூரமாக தாக்கி கொலை செய்கிறார்.
இதனையடுத்து இந்த கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் அர்ஜுன் வருகிறார். சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார்.
இந்த கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதை அர்ஜுன் கண்டுபிடிக்கிறார். இதனையடுத்து அர்ஜுன் தொழிலதிபரான ராம்குமாரை தனியே சந்தித்து விசாரிக்கையில் அர்ஜுன் கண் முன்னே ராம்குமார் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
இறுதியில் அர்ஜுன் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? ஐஸ்வர்யாவிற்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உண்டா ? இல்லையா? என்பதே ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடபதி என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கத்பாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். குறிப்பாக லிப்டில் நடக்கும் சண்டை காட்சியில் மிரட்டியியிருக்கிறார்.
சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அழுத்தமான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுகிறார். குறிப்பாக படத்தின் இறுதி சண்டை காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் காதலராக வரும் பிரவீன் ராஜா யாரும் யூகிக்க முடியாத விதத்தில் சிறப்பான நடிப்பு ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, அவரது அம்மாவாக வரும் அபிராமி , லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக இருக்கிறது.
உண்மை சம்பவம் அடிப்படையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன்
இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி பாதுகாப்ப வேண்டும் என்ற கருத்தை இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
நடிகர்கள் : அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரவீன் ராஜா, ராம்குமார், லோகு, தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, ஜிகே ரெட்டி, பிஎல் தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், சையத்
இசை : பாரத் ஆசிவகன்
இயக்கம் : தினேஷ் லக்ஷ்மணன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Comments
Post a Comment