‘தேசிய தலைவர்’ - விமர்சனம்
தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள்  என்று  நாட்டையும், பக்தியையும் போற்றி வாழ்ந்து  மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கு படம் ‘தேசிய தலைவர்’

சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை தொடங்க பிரிட்டிஷ் அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார்.  காமராஜருக்கு ஆதரவாக இருந்து தேர்தலில் வெற்றி பெற செய்ய வைக்கிறார்.

இதனையடுத்து மக்கள் ஆதரவை பெரும் முத்துரமாலிங்க தேவர், ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி  பெறுகிறார். மதுரை வைத்தியநாத அய்யருடன் இணைந்து ஹரிஜன மக்களுக்கு ஆலய பிரவேசம் நடத்துகிறார். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் பயணிக்கிறார்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பார்வேர்ட் பிளாக் கட்சியில் சேர்க்கிறார். 
முத்துராமலிங்க தேவரின் வளர்ச்சியால் அச்சம் அடையும் காங்கிரஸ் தலைமை  அவரை மீண்டும் காங்கிரஸில் இணைய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட அது தோல்வியை  தழுவுகிறது.

ஒரு சிறிய பிரச்சனையால் இமானுவேல் சேகரன்  கொலை செய்யப்படுகிறார்...அரசியல் சூழ்சியால் இந்த கொலையில் முத்துராமலிங்க தேவர் சிக்க வைக்கப்படுகிறார். இறுதியில் முத்துராமலிங்க தேவர் கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தாரா? இல்லையா ?  அரசியலில் இருந்தது விலகினாரா? இல்லையா? என்பதே ‘தேசிய தலைவர்’  படத்தின் கதை.
பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருக்கும்  ஜெ.எம்.பஷீர், பொருத்தமான தேர்வாக இருக்கிறார். நடை, உடை பேச்சு என அனைத்தையும் சாதியாக கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். குறிப்பாக காரில் அமர்ந்து போடும் சண்டை அருமை.

நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் ஆகியோரது  நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா, ராதா ரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர்  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் அனைத்தும் கெடுக்கும் ரகம், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. அகிலன் அந்த காலகட்டத்துக்கு நம்மை கொண்டு செல்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை சம்பவங்களை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாகியிருக்கிறர் இயக்குனர் ஆர் அரவிந்தராஜ்  இத்திரைப்படத்தில் காங்கிரஸ் மற்றும் முத்துராமலிங்க தேவருக்கு இடையே ஏற்பட்ட பகை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  உடனான நட்பு என அனைத்தையும் அழகாக கையாண்டுயிருக்கிறார்.

நடிகர்கள் : ஜெ.எம்.பஷீர், ஜெ.எம்.பஷீர்,பாரதிராஜா, வாகை சந்திரசேகர், ராதா ரவி, ஆர்.வி.உதயகுமார், எம்.எஸ்.பாஸ்கர்
இசை : இளையராஜா,
இயக்கம் : ஆர் அரவிந்தராஜ்
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு , கே எஸ் செல்வகுமார், சாவித்திரி

 

Comments

Popular posts from this blog