Posts

Showing posts from September, 2022
Image
*அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’* *நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’* கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, '' கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்'' என பாராட்டினார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பெயரிடப்படாத அந்தப் படத்தின் டீசர் வெளியாகி, கன்னட திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட
Image
நானே வருவேன் - விமர்சனம் தனுஷ்  (கதிர் ,பிரபு ) இரட்டை பிறவிகள் அண்ணன் கதிர் வித்தியாசமான குணம் கொண்டவர், தம்பி பிரபு சாந்தமானவன்.  சிறுயவயதில் அப்பாவையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் வெளியூர் போய்விடுகிறார் அவர்களுடைய அம்மா பல வருடங்கள் கழித்து பிரபு தனது மனைவி மகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பிரபுவின்  மகள் தனியாக பேசுகிறார். அவர் மீது ஒரு பேய்  இருப்பதை  கண்டுபிடிக்கிறார். அந்த பேய் ஒரு கோரிக்கை வைக்கிறது. அதை செய்தால் மட்டுமே உன் மகளை விட்டுப் போவேன் என சொல்கிறது. இறுதியில் பிரபு  பேயிடம் இருந்து  மகளை  காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே 'நானே வருவேன்' படத்தின் கதை. கதிர், பிரபு என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிப்பை பிரபு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தனுஷ், பொறுப்புள்ள தந்தையாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீது பாசம் காட்டுவது, வருந்துவது, காப்பாற்ற நினைப்பது என்று நடித்து கண்கலங்க வைத்திருக்கிறார். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தனுஷ் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். . பிரபு
Image
*ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் 'மேட் கம்பெனி', 30 முதல் வெளியாகிறது.* இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான 'மேட் கம்பெனி', ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வெளியாகிறது. நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ஆஹாவில் ‘மேட் கம்பெனி’ எனும் பெயரில் பணியிடத்தில் நடைபெறும் காமெடி வெப்சீரிஸ் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இந்த வலைத்தளத் தொடரின் தயாரிப்பாளரான ராஜா ராமமூர்த்தி, இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார், நடிகர்கள் பிரசன்னா, ஹரி, சர்வா, நடிகை சிந்தூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  நடிகர் பிரசன்னா பேசுகையில்,“ நம்ம வாழ்க்கைக்குள்ள மிஸ் பண்ற
Image
*'’பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்* *‘பனாரஸ்’ ஒரு வித்தியாசமான டைம் லைன் காதல் கதை* ”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன். ‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. ‘புயூட்டிஃபுல் மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி கவனிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப
Image
*அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட டீசர்* 'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 'ஆதி புருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்த
Image
,  டிரிகர்  - விமர்சனம் 30 வருடத்துக்கு முன் அனாதை ஆசிரமத்தில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலரால் தத்தெடுக் கப்படுகின்றனர். அந்த குழந்தைகளை 3 வருடம் கழித்து ஒரு கூட்டம் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கிறது. இதை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி அருண்பாண் டியன் பின்னர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார்.   அருண்பாண்டியன்  மகன் அதர்வா நேர்மையான காவல் அதிகாரியான ஒரு கடத்தல் கும்பலைப்  பிடிக்க செல்லும் போது நடக்கும் பிரச்சனையால் வேலை பறி போகிறது.  இருந்தாலும் அண்டர் கவர் போலீசாக இருந்து காவல்துறையினர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் வேலை அதர்வாவுக்கு  கொடுக்கப்படுகிறது.அப்படி கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது குழந்தைகளை சிலர் கடத்துவது தெரியவருகிறது. அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளை நூதனமுறையில் ஒரு கும்பல் கடத்துகின்றனர்.  இந்த பிரச்சனையின் பின்னணியில் அதர்வாவின்  தந்தை அருண்பாண்டியன் கடந்த காலமும் சம்பந்தப்பட்டிருக்கிறது.  ஆதாரத்துடன் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வா, இறுதியில்  கடத்தப்பட்ட குழந்தைகளை  கண்டுபிடித்தாரா? இல்
Image
பபூன்’ - விமர்சனம்  கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் , கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ், அனகா , அந்தகுடி இளையராஜா , ஜோஜு ஜார்ஜ் , ஆடுகளம் நரேன், தமிழரசன், ஆடுகளம் ஜெயபாலன், மூணார் ரமேஷ் ,ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பபூன்’ நாடகத்தில் பபூன் வேடம் போடும் நாயகன் வைபவ், நாடக தொழில் நலிந்து வருவதால் அத்தொழிலை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்    வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது  நண்பன்  ஆந்தக்குடி இளையராஜாவும் ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள்  அவர்கள் வேலை செய்யும் இடத்தில போதைப்பொருள் கடத்துவார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது ,  உப்பு மூட்டை லாரி என்று நினைத்து அவர்கள்  ஓட்டி வரும் போது, போலீசில் சிக்கிக்கொள்கிறார்.  இறுதியில் நாயகன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே ‘பபூன்’ படத்தின் கதை. நாயகன் வைபவ் கோமாளி வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார். . சண்டைக் காட்சிகளில் முன்னேறியிருக்கிறார். வைபவின் நண்பராக படம் முழுவதும் வரு
Image
ஆதார் - விமர்சனம் கட்டடத்தொழிலாளி கருணாஸ்.அவரது மனைவி ரித்விகா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகாவுக்கு திடீரென்று வலி ஏற்பட அவரை அரசு மருத்துவமனைக்கு கருணாஸ் அழைத்து செல்கிறார்.  அங்கே குழந்தையை பெற்றெடுத்த ரித்விகா காணாமல் போகிறார்.  இவர்களுக்கு துணையாக இருந்த இனியா திடீரென காணாமல் போகிறார். அதன் பிறகு அவரின் சடலம் மட்டும் கிடைக்கிறது. செய்வதறியாமல் தவிக்கும் கருணாஸ் பச்சிளங்குழந்தையை தூக்கிக்கொண்டு காணாமல் போன தன் மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு காவல்நிலையம் செல்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் ரித்விகாவை தேடும் காவல்துறை அவரை கண்டுபிடித்ததா? இல்லையா?,  இனியாவின் மரணத்தின் காரணம் என்ன? என்பதே ‘ஆதார்’  படத்தின் கதை. கட்டிடத் தொழிலாளியாக வரும் கருணாஸ் .காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தறுமாறு காவல்நிலையத்தில், கைகுழந்தையுடன் முறையிடும் காட்சிகளில் நடிப்பால்  கண்கலங்க வைக்கிறார் கருணாஸ்,  குணச்சித்திர நடிகராக கருணாஸை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் பாராட்டுவார்கள். நாயகி ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும்  அவருக்கு கொடுத்
Image
ரெண்டகம்  - விமர்சனம் மும்பை தாதாவான அரவிந்த்சாமி  ஒரு விபத்தில் தன் பழைய நினைவுகளை மறந்து விடுகிறார்.  தாக்குதலின் போது அவரிடம் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதனை தற்போது மீட்டெடுப்பதற்காக ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. இதற்காக குஞ்சக்கோ போபனை அனுப்பி வைக்கின்றனர். குஞ்சக்கோ போபன் அரவிந்த் சாமியிடம் நண்பனாக பழகி, நினைவை இழந்த மங்களூருக்கு அழைத்து செல்கிறார். இறுதியில் அரவிந்த் சாமிக்கு பழைய நினைவு திரும்ப வந்ததா? இல்லையா?  என்பதே  ‘ரெண்டகம்’  படத்தின்  கதை. சினிமா தியேட்டரில் பார்ப்கார்ன் வியாபாரியாக மிக அமைதியான மனிதராக அறிமுகமாகும் அரவிந்த்சாமி, பழைய நினைவுகளை மறந்த கதாப்பாத்திரத்தில்  நடித்து பாராட்டுக்களை பெறுகிறார். குஞ்சக்காபோபனுக்கு  வேடம்.ஈஷாரெப்பாவுடனான காதல்காட்சிகள் ஆடுகளம் நரேனுடனான பாசக்காட்சிகள், அரவிந்த்சாமியுடனான பயணக்காட்சிகள்  நடிப்பில் வெற்றி பெறுகிறார். குஞ்சக்கோ போபனின் காதலியாக வரும் ஈஷா ரெப்பாவின் அழகிலும், கவர்ச்சியிலும் அனைவரையும் ஈர்க்கிறார் கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவில் படம
Image
டிராமா - விமர்சனம் காவல் நிலையத்தில் புதிதாக சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்கிறார்  ஜெய் பாலா அந்த  காவல் நிலையத்தில் பணிபுரியம் அனைவரும் நேர்மையாக இருக்குமாறு உத்தரவிடுகிறார்.  ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு  கேட்டு  காவல் நிலையம் வருகிறது  இந்த ஜோடிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார் ஜெய் பாலா இந்த சமயத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் காதலி  காவ்யா  தனது பிறந்தநாளை காவல்நிலைத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அப்போது சில நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட, அந்த சமயத்தில் காவலர் சார்லி கொலை செய்யப்படுகிறார்.   இந்த கொலையை விசாரிக்க கிஷோர் வருகிறார், அந்த காவல் நிலையத்தில்  உள்ள பலரையும் பல கோணத்தில் விசாரிக்கிறார் , கடைசியில் சார்லியை கொலை செய்தது யார்?  என்பதை   கிஷோர் கண்டுபிடித்தாரா ? இல்லையா ?  என்பதே  ‘டிராமா’ படத்தின்  கதை. ஜெய்பாலா காவ்யாபெல்லு காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.  ஷார்லி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். காவல் நிலையத்திற்குள் நடக்கு
Image
*மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்* சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் ந டைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை விழாவில் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் நடிகர் துருவ் விக்ரம்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  சென்னை மாநகரிலுள்ள மகளிர் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்வேறு பெயரில் கலைவிழாக்கள் நடைபெறுவது இயல்பு. இவ்விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு, மாணவிகளை உற்சாகப்படுத்துவதும் இயல்பு. மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க எம் ஓ பி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்ற ‘விஷ் 22’ என்ற கலைவிழாவில் இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் மாணவிகளின் குறும்புத்தனமான கேள்விகளுக்கு துருவ் விக்ரம் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அத்துடன்  அவர் எழுதி பாடிய 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலையும் பாடினார். பிறகு நடனமாடி, விழாவை கொண்டாட்டமாக மாற்றினார். நிறைவாக மாணவிகளுடன் தன்னைப்பற்றியும், தன்னுடைய தந்தையான சீயான் விக்ரம் பற்றியும் பல நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டார்.
Image
*ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு* நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இதில்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள பாடல்களை அஜ்மல் இசையமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 'லாக்கப்' படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இயக்கியிரு
Image
ஸ்டார் விஜய் பிரத்யேகமாக ‘விஜய் டக்கர்’ எனும் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்க உள்ளனர்!!  ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்குகிறது. இது குறித்து வெளியான பரபரப்பான டீசரைத் தொடர்ந்து, மிக அட்டகாசமான ப்ரமோ ஸ்டார் விஜய் மற்றும் அதன் சமூகக் வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ‘விஜய் டக்கர்’ தமிழக மண்ணின் இளைஞர்களை கவரும் வகையிலான பல அட்டகாசமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். புதிய இளமை எனும் டேக் லைனுடன்  இளைஞர்களுக்கான புதிய சேனலாக இது வருகிறது.  விஜய் டக்கர் - ‘இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ விஜய் டக்கர் சேனல் இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பொழுது போக்கு பிராண்டாக  இருக்கும். பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இது இருக்கும். அதற்கு ‘விஜய் டக்கர் - இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ என்ற டேக்லைன் மிகப் பொருத்தமானதாக இருக்கும். ‘விஜய் டக்கர்’  Non Fiction வகையில், திரைப்படங்கள் மற்றும் இசை என இளைஞர்களுக்கான  முழுக்கலவையை  கொண்டுள்ளது. Non Fiction வகையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், தினமும் தொடர்ச்சியாக பல்வேறு
Image
நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில்,  விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திரன், இயக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமாண்ட  செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது!!  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்,  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.   1980 களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா திரில்லராக இத்திரைப்படம் உருவாகிறது.  1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.  தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்
Image
*ஆதார்' திரைக்கதை புத்தகம் வெளியீடு* *சீமான் வெளியிட்ட 'ஆதார்' படத்தின் திரைக்கதை நூல்* *வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் ‘ஆதார்’ திரைக்கதைப் புத்தகம்* வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. 'பாரதி', 'பெரியார்', 'களவாணி', 'அழகர்சாமியின் குதிரை', 'அந்த நாள்', 'சத்தம் போடாதே' பாலு மகேந்திராவின் 'சந்தியா ராகம்', வசந்த்தின் 'ரிதம்', கமல்ஹாசனின் 'ஹே ராம்', வசந்தபாலனின் 'அங்காடித்தெரு', மிஷ்கினின் 'அஞ்சாதே', சமுத்திரக்கனியின் 'அப்ப
Image
தமிழக முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்  18 .09 .2022  அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகையையும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வ ழங்கக்கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களிடம் சங்கத் தலைவர் என்.ராமசாமி வழங்கினார் அருகில், அமைச்சர் கே.என்.நேரு, சங்க செயலாளர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் திரு.எஸ்.கதிரேசன் பொருளாளர் திரு.சந்திரபிரகாஷ் ஜெயின் செயற்குழு உறுப்பினர் திரு.விஜயமுரளி  தயாரிப்பாளர் திரு.கருணாகரன் ஆகியோர் உள்ளார்கள்
Image
*‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!* ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம்  தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரால் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது. இளைஞர்கள் பார்ட்டியில் நிச்சயம் இந்த பாடலும் இனி இடம் பிடிக்கும். பாடலில் இடம்பெற்றுள்ள ‘பணம் முக்கியமில்லை’ என்ற பன்ச் லைன் இப்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது.  ’பனாரஸ்’ திரைப்படம் ஒரு புதிரான காதல் கதையை கொண்டது. படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பர உத்திகள் மக்களிடையே படம் குறித்தான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்
Image
சினம் - விமர்சனம் செங்குன்றம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர்  நாயகன் அருண் விஜய் நேர்மையான அதிகாரி நாயகி பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அருண் விஜய் தனது மனைவி, குழந்தை  என்று சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தாய் வீட்டுக்குசென்று விட்டு திரும்பும் பாலக் லால்வாணி வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அருண் விஜய் அவரை தேடிக்கொண்டிருக்கும் போது, பாலக் லால்வாணி கொலை செய்யப்பட்ட தகவல் அவருக்கு கிடைப்பதோடு, அவர் உடல் பக்கத்தில் மற்றொரு ஆணும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். தனது மனைவியை கொலை செய்தவர்களை தேடி அலைகிறார் அருண் விஜய்  இறுதியில் அருண் விஜயின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா?என்பதே சினம்’ படத்தின் கதை.   நேர்மையான காவல்துறை அதிகாரியாக வரும் அருண் விஜய் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்  கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன், காவல் அதிகாரி வேடத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். குற்றத்தை கண்டால் கோபப்படு என்று அருண் விஜய் பேசும் கிளைமாக்ஸ் வசனம் திரையரங்கை அதிர வைக்கிறது. கதாநாயகி பால