*'மேதகு-2' திரைப்படம் 'மூவி வு'ட் ஒடிடி தளத்தில் வெளியானது..* கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. இந்த 'மேதகு' முதல் பாகமும் தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘மேதகு-2’ கடந்த ஆகஸ்ட் - 28 ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய
Posts
Showing posts from August, 2022
- Get link
- Other Apps
*ஆஹா தமிழுடன் ஜீவா முதல் முறையாக இணையும் விளையாட்டு நிகழ்ச்சி- ஆஹா ஒரிஜினல்ஸின் ஜீவாவுடன் சர்க்கார்* ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் 'சர்க்கார் வித் ஜீவா' எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். டிஜிட்டல் தளங்களில் வலைதள தொடர்கள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள்... ஆகியவற்றிற்கு இணையாக விளையாட்டுகளை மையப்படுத்திய 'கேம் ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனை துல்லியமாக அவதானித்த ஆஹா டிஜிட்டல் தளம், புது முயற்சியாக 'சர்க்கார் வித் ஜீவா' எனும் பெயரில் கேமிங் ஷோ ஒன்றை அசலாக தயாரித்து ஒளிபரப்பவிருக்கிறது. இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையா
- Get link
- Other Apps
நடிகர் கிஷோருடன் ரோப் இல்லாமல், டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம்! வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் "மஞ்சக்குருவி" படத்திற்காக செங்கல் சூளையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்பொழுது, ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் தன்னுடன் ஒரு நடிகர் மோதுவதை பார்த்த நடிகர் கிஷோர், ஆச்சரியத்தில் ஆழ்ந்து, இயக்குனர் அரங்கன் சின்னதம்பியிடம் விசாரிக்கும் போதுதான், அந்த நடிகர் ராஜநாயகம் குங்ஃபூ மாஸ்டர் என்பதும், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் என்றும் தெரியவந்தது. உடனே ராஜநாயகத்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் கிஷோர். கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார். வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, கே.எம்.நந்தகுமார் கலையை கவனிக்க, மிரட்டல் செல்வா சண்டைப் பயி
- Get link
- Other Apps
*“கர்மாவை உணர்ந்த அந்த தருணம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் சிலிர்ப்பு* *“மூன்றாம் பாகம் நிச்சயம்” ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் உறுதி* *அடுத்த படம் விஷ்ணு விஷாலுடனா..? ; ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத் விளக்கம்* *நாயகனின் தந்தை என்ன சொல்வாரோ..? ; பயந்த ஜீவி-2 இயக்குநர் VJ.கோபிநாத்* கடந்த 2019ல் வெளியாகி ரசிகர்களிடம் மட்டுமல்ல, விமர்சிகளிடமும் கூட அருமையான படம் என பெயர் வாங்கிய படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரை போல நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத். இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட்-19ல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
- Get link
- Other Apps
டைரி’ - விமர்சனம் உதகையில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் விபத்துகள் நடைபெறுகிறது. அதேபோல் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அதை யார் செய்தது என்பதை 16 ஆண்டுகளாக காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை எஸ்.ஐ பயிற்சியை முடித்து விட்டு போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்கும் நாயகன் அருள்நிதி கையில் எடுக்கிறார். இந்த வலக்கை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு தெரியவருகின்றன. இறுதியில் நாயகன் மர்மங்களுக்கான விடை என்கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘டைரி’ நல்ல கதைகளை நடிக்கும் அருள்நிதி,படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்திலும் கச்சிதமாக பொருந்துகிறார்.. உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி பவித்ரா மாரிமுத்து. முதல் காட்சியில் ஒருவரை அடித்து நொறுக்கி அதிரடியாக என்ட்ரியாகும் பவித்ராவுக்கு சாம்ஸ், ஷாரா இருவரும் காரம் காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்கள் கி
இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா
- Get link
- Other Apps
இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா *வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் - தொழிலதிபர் நல்லி குப்புசாமி* *வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாள்தோறும் நல்ல விசயங்களைத் தேடித் தேடிக் கற்கிறோம்- ‘இறைவி’ விற்பனையக நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ்* சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்து
- Get link
- Other Apps
டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சி செய்து வருகிறது மூவி வோல்ட் விஷன் மீடியா. இதன் ஆரம்பம் மியூசிக் ஷேக்என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனியின் தலைமை யிடம் கொச்சி தற்போது இது டெல்லி மும்பை சென்னை போன்ற நகரங்களில் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் இன்சத் இவரது மனைவி உமையா இன்சத் மகள் பாத்திமா இன்சத் எல்லோரும் டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சி செய்து வருகிறார் கள் பாத்திமா இன்சத் அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கி வருகிறார் இந்த கம்பெனி முதலில் ஆடியோ சிடி வாங்கி வெளியிடப்பட்டது காப்பிரைட் வாங்குவது என்று படிப்படியாக உயர்ந்து நிற்கிறது. தற்போது இந்த கம்பெனி வசம் 256 யூடியூப் சேனல் உள்ளது அதில் ஒன்றுதான் மூவி வோல்ட் விஷன் மீடியா இதில் மில்லியன் சப்கிரைபர்உளளன 56பேஷ்புக்பக்கங்களும்உள்ளது. இதன் விளம்பர அம்பாசிடராக கவுரவ் கங்கூலி இருக்கிறார் என்பது பெருமை படதக்கவிஷயம் இந்த கம்பெனி உரிமை யாளர் இன்சத் அவர்கள் கூறும்போது. டிஜிட்டல் உலகில் வெற்றி பெற பொறுமை அவசியம் உடனே வெற்றி கிடைக்காது முயற்சி முக்கியமான ஒன்று ஒரு ஓட்டப்பந்த
- Get link
- Other Apps
*கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்* *‘கோப்ரா’ சைக்கலாஜிக்கல் திரில்லர் = சீயான் விக்ரம்* *‘கோப்ரா’ எமோஷனல் டிராமா = சீயான் விக்ரம்* *‘கோப்ரா’ சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம்= சீயான் விக்ரம்* *‘கோப்ரா’ ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் = சீயான் விக்ரம்* *கோவையின் ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் ‘கோப்ரா ’ கொண்டாட்டம்* திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ என தெரிவித்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாக
- Get link
- Other Apps
*கோலாகலமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர்* *இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மா கூட்டணியின் பான்-இந்திய திரைப்படமான 'கீடா கோலா' பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது.* இளம் மற்றும் திறமையான இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கிய ’பெல்லிசூப்புலு’ மற்றும் ’ஈ நாகராணி ஏமைந்தி’ ஆகிய இரண்டுபடங்களும் தடபுடல் வெற்றியைப் பெற்றன.இவ்விரு படங்களையும் விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவிந்தது. அவ்வகையான யூத் ஃபுல் என்டர்டெய்னர் படங்களை எடுப்பதில் கில்லாடி என்று பெயர் எடுத்த இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், இம்முறை தனது டிராக்கை மாற்றிக்கொண்டு புதிய க்ரைம் காமெடி படமான ‘கீதா கோலா’வை பார்வையாளர்களுக்குக் கொண்டு வரவிருக்கிறார். விஜி சைன்மா பேனரில் புரொடக்ஷன் நம்பர் 1 ஆக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று செவ்வாயன்று நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, ஹீரோக்கள் சித்தார்த், தேஜா சஜ்ஜா, நந்து மற்றும் பல இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்
- Get link
- Other Apps
*திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !* செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது… விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால
- Get link
- Other Apps
‘திருச்சிற்றம்பலம்’ - விமர்சனம் டெலிவரி பாய் வேலை செய்யும் நாயகன் தனுஷ், இவருடைய வாழ்க்கையில் ஒரு விபத்தின் காரணமாக தனது தந்தை பிரகாஷ் ராஜ்ஜிடம் பேசாமல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். தனுஷ் தாத்தா பாரதிராஜா அரவணைப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். தாயின் இழப்பால் பயந்த சுபாவமாக மாறும் தனுஷ்க்கு சிறு வயது முதல் தோழியாக இருக்கும் நித்யா மேனன் துணையாக இருக்கிறார். கல்லூரியில் தனுஷூடன் படித்த ராஷி கண்ணா திடீரென்று தனுஷை சந்திக்கிறார். இருவரும் சற்று நெருங்கி பழக தனது காதலைராஷி கண்ணா விடம் கூறுகிறார். ஆனால் ராஷி கண்ணா தனுஷின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நேரத்தில் திடீரென்று பிரகாஷ்ராஜுக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிறார். இவர்களது வீட்டுக்கு ஒரு பெண் வந்தால்தான் இவர்களையெல்லாம் கவனித்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்படுகிறது. தாத்தா பாரதிராஜா, பேரன் தனுஷை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறார். ஒரு திருமணத்திற்கு செல்லும் தனுஷ் அங்கு பிரியா பவானி சங்கரை சந்திக்கிறார். அவரை காதலிக்க துவங்கும் தனுசுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைக்கிறது. இந்நிலையில் சிற
- Get link
- Other Apps
2 - விமர்சனம் 2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி. முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘ஜீவி 2’ கதையும் அதே தொடர்பியல் விதி மூலம் பயணிக்கிறது. ஆட்டோ ஓட்டுனராக நாயகன் வெற்றி தன் மனைவி அஸ்வினியின் மருத்துவ செலவை சமாளிக்க கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார் தனது மனைவி அஸ்வினியின் கண் ஆபரேஷனுக்காக 8 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அஸ்வினியின் பூர்வீக சொத்து ஒன்றும் கை கொடுக்காமல் போய் விட . அதே நேரம் அவர் வாங்கிய கார் பழுதாகி விடுகிறது இது ஒருபக்கம் இருக்க அக்கா மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. இந்த சூழலில் புதிதாக அறிமுகமாகிறார் பணக்காரர் முபாஷிர் புது நண்பன் வீட்டுக்கு வெற்றியும், கருணாகரனும் வருகின்றனர் வீட்டைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். தற்போது இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது முபாஷிரின் வீட்டிலேயே பணம், நகைகளை கொள்ளையடிக்க இருவரும் திட்டம் தீட்டுகிறார்கள். இறுதியில் நகைகளை கொள்ளையடித்தார்களா? இல்லையா? என்பதே ’ஜீவி 2 படத்தி
- Get link
- Other Apps
*அலங்கரிக்கப்பட்ட ஆட்டோரிக்ஷாக்களில் வலம் வந்த திரையுலக நட்சத்திரங்கள்* *‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்காக ஒன்றுதிரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்* *பார்வையாளர்களை அசத்திய ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஹாலிவுட் பிரபலங்கள்* *‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.* ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர். ‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர