Posts

Showing posts from April, 2022
Image
சிலம்பத்தை பற்றிய விறுவிறுப்பான படம் " சிலம்பம்" உண்மை சம்பவம் படமாகிறது. விளையாட்டு துறையில் திறமையானவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டி பறித்து  திறமையில்லாதவர்களை புகுத்தி ஒரு கும்பல் ஆட்டிவைப்பது நமக்கு  தெரிந்ததுதான். இவர்களை எதிர்த்து விளையாட்டு துறையில் சாதிப்பது திறமைசாலிகளுக்கு குதிரை கொம்பாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலை சிலம்ப விளையாட்டிலும் துழைந்துள்ளதை எதிர்த்து வசதியற்ற குடும்பத்தை சேர்ந்த அந்த இளைஞன் சிலம்பத்தை முறையாக கற்றுக்கொண்டு பணபலம், அதிகார பலத்தை எதிர்த்து சிலம்ப விளையாட்டில் மாவட்ட அளவில் மட்டுமல்ல, மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவில் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி தங்கப்பதக்கங்களை அள்ளுகிறான்.அந்த இளைஞனின் விடாமுயற்சியை படத்தின் மையக்கருவாக வைத்து, உண்மை சம்பவங்களை திரைக்கதையாக்கி லார்டு கணேஷ் கிரியேஷன்ஸ் சார்பில்  திருமதி.எஸ்.லதா தயாரிப்பில் உருவாகும் படம்தான் "சிலம்பம்  இதில் புதுமுகங்கள் மாஸ்டர் எம்.எஸ்.சஷாந்த், ஜெ. அஜீத், மாஸ்டர் அரிமா வர்மன்,  பவித்ரா,  மற்றும் மொட்டை ராஜேந்திரன், தீனா, மகாநதி சங்கர், முத்துக்காளை, வெங்கல்
Image
*அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது*  இந்தியாவில் உள்ளடக்க முதலீடுகளை இரட்டிப்பாக்குகிறது . அடுத்த 2 வருடங்களில் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கும் அதிகமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.  ஒரிஜினல் திரைப்படங்களுக்கு உள்ளே முயற்சியை முன்னெடுக்கிறது;  புதிய பல-வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   முக்கிய இந்திய திரைப்பட ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவிக்கிறது  பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ப்ரைம் வீடியோவின் மார்கெட் இடத்தில் வழங்குபவைகளை விரிவாக்குகிறது. இந்த டிவிஒடி சேவை பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களை முன்னதாகவே பார்ப்பதை இயன்றதாக்கும்; மற்றும் கூடுதலாக உலகெங்கிலும் இருந்து பிரபலமான
Image
பயணிகள் கவனிக்கவும் - விமரிசனம் சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் நூலகத்தில் புத்தகக் காப்பாளராக இருக்கும் விதார்த். செவித்திறன் , பேசும் திறன் இல்லாதவர், இவருடைய மனைவி லஷ்மி ப்ரியா. அவரும் கணவரைப் போல் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். துபாயில்  வேலை பார்க்கும் கருணாகரன் திருமணத்துக்காக சென்னை வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்.   ஒருநாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் விதார்த், தன்னையும் அறியாமல் அசந்து தூங்கி விடுகிறார். அதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் கருணாகரன் விளையாட்டாக போட, அதனால்  அந்தப் பதிவு விதார்த்தை தவறாக சித்தரிப்பதோடு அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.. இறுதியில் விதார்த் பிரச்சனையில் இருந்து மீண்டாரா ? இல்லையா ?  என்பதே  ‘பயணிகள் கவனிக்கவும்’படத்தின் மீதிக்கதை நாயகனாக நடித்திருக்கும் விதார்த், காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாதவராக  நடிப்பில் அசத்திருக்கிறார். சொல்ல நினைக்கும் விஷயத்தை பேசும் திறன் இல்லாத காரணத்தால் சொல்லத் துடிக்கும்போதெல்லாம் படம் பார்ப்ப
Image
*திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'* *திரையுலக பிரபலங்களின் வாழ்த்து மழையில் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'* *பார்வையாளர்களை பரவசப்படுத்திய 'ஆஹா'வின் முதல் ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'* ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்கள
Image
ஓ மை டாக் – விமர்சனம் ஊட்டியில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அருண்விஜய், அப்பா விஜயகுமார், மனைவி மகிமா நம்பியார், மகன் அர்னவ்  ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தனது  வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் பிடிக்க வைப்பதற்காக தனது வீட்டினை அடமானம் வைத்து  அதற்கு வட்டி செலுத்தி வருகிறார் அருண் விஜய். தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பவர்   வினய், சாம்பியன் பட்டத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்  தன்னிடம் இருந்த விலையுயர்ந்த நாய்குட்டி ஒன்று பார்வை இல்லாமல் பிறக்கிறது. அதை கொன்றுவிடும்படி தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் வினய். உதவியாளர்களிடம் இருந்த நாய்குட்டி தவறி சென்று அர்னவிடம் தஞ்சம் அடைந்து விடுகிறது. அர்னவ் அதற்கு சிம்பா என பெயரும் சூட்டுகிறார். அதற்கு கண் தெரியாத நிலையில் ஆபரேஷன் செய்து பார்வை வரவழைக்கிறான். சிம்பாவுக்கு பயிற்சி கொடுத்து அதை போட்டியில் பங்கேற்க வைக்கிறான்.  இறுதியில் போட்டியில் கலந்து கொண்ட சிம்பா  சாம்பியன் பட்டம் வென்றதா? இல்லையா? என்பதே  'ஓ மை டாக்'  படத்தின் மீதிக்கதை. நடுத்தரக் குடும்பத
Image
*அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!* அமேசான் ஒரிஜினல்ஸின் 'ஓ மை டாக்'- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்' என குறிப்பிட்டு, 'ஓ மை டாக்' படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள். 'ஓ மை டாக்' திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது. இதனை பார்வையாளர்கள் பார்வையிட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம். 1. ஒன்றிணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்..! 'ஓ மை டாக்' - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை கொண்டு அற்புதமாக பின்னப்பட்ட அழகான கதை. பழம்பெரும் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இனிய விருந்தாக அமை
Image
*பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022*  தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமான நிரோஷா ராதா, அதன்பிறகு பல வெற்றிப்படங்களிலும் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நிரோஷா ராதா. 1988முதல் ஆயிரத்து 1995 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  நிரோஷா ராதாவால் துவங்கப்பட்ட இந்த பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புதிய முயற்சியுடன் தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இன்னும் பல சிறந்த கம்பெனிகளுடன் இணைந்து
Image
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வ ழங்கினார். சென்னை மாநகர காவல்துறை, 'காவல் கரங்கள்' என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் தேவைக்காக சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள
Image
*சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’* *இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் ‘சூரரை போற்று’* *படப்பிடிப்புடன் தொடங்கிய ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக்* *அக்ஷய்குமார் நடிப்பில் தொடங்கிய ‘சூரரைப்போற்று’ ஹிந்தி பதிப்பு* *சூர்யா கலந்துகொண்ட ‘சூரரைப்போற்று’ இந்தி பதிப்பின் தொடக்கவிழா* நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில்  நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட
Image
*எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்.* ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள்.  'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... '' எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் பாலகு
Image
*ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன், வெளியானது  “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டிரெய்லர் !* தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது.  2022  ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து,  ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.   தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக  இப
Image
*KGF2 படம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த  ஹோம்பாலே பிலிம்ஸ்  புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.* மிகத்தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். பிரபாஸின் சலார் உள்பட சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள  KGF2 படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன் எதிர்பார்ப்பை இப்பவே எகிற வைத்துள்ளது சூரரைப்போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.  சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு  முடிந்தபின் 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு இத்திரைப்படத்தை துவங்கவிருக்கிறார்.
Image
மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் !  புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது !  2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட இத்தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் 2022 ஏப்ரல் 22 முதல்  டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்
Image
*'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'அடடே சுந்தரா' டீசர் வெளியீடு* ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான 'அன்டே சுந்தரனக்கி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணைந்து முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத
Image
*முன்ணனி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம்  வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.*  சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது.  விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது.  நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும். சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் சரவ் சண்முகம் கூறும்போது.., இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம் என்றனர்.  100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய் பகிர்ந்துகொண்டதாவத
Image
*நடிகர் நிகில்,  இயக்குநர் கேரி BH மற்றும் ED Entertainment இணையும்,  பான் இந்திய பிரமாண்ட  திரைப்படம்  “ஸ்பை” !*  திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர்  கேரி BH இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள  இப்படத்தினை சரண் தேஜ் உப்பலாபதி மற்றும்   ED entertainment சார்பில்   K ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.  இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட்  மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக  நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன்  நடந்து வருவது  ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே  தோற்றமளிக்கிறார்.  இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்ப
Image
*யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது* சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக ஆளுமைகள் முன்னிலையில் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது.   விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்றார்.  உங்களின் அன்பு, விமர்
Image
*சினிமாவை விட நல்ல தொழில் உலகத்தில் கிடையாது பாரதிராஜா பேச்சு* *தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி அமீர்* *எல்லா வகையிலும் தமிழ் சினிமா பின்தங்கியிருக்கிறது.அருண்பாண்டியன் குற்றச்சாட்டு* *ஆதார் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு*. நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதார்' படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.  சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா. பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர